மேலும் அறிய
Headlines Today : இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. அதிகரித்த காற்று மாசு.. பிரதமராகிறார் ரிஷி சுனக்.. இன்னும் பல முக்கிய செய்திகள்..
Headlines Today : கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச்செய்திகளாக காணலாம்.
![Headlines Today : இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. அதிகரித்த காற்று மாசு.. பிரதமராகிறார் ரிஷி சுனக்.. இன்னும் பல முக்கிய செய்திகள்.. Today news headlines in tamilnadu india october 25 top news today morning diwali headlines news Headlines Today : இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. அதிகரித்த காற்று மாசு.. பிரதமராகிறார் ரிஷி சுனக்.. இன்னும் பல முக்கிய செய்திகள்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/25/fbf878463c30b71dae13fe8db0aebe011666658783469571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இன்றைய தலைப்புச்செய்திகள்
தமிழ்நாடு:
- தமிழ்நாடு முழுவதும் இன்று (செவ்வாய்கிழமை) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மட்டும் விடுமுறை
- சென்னையில் விலைமாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63 க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- கோவை உக்கடத்தில் காரில் சிலிண்டர் வெடித்து ஒருவர் பலியான விவகாரத்தில் 5 பேரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சென்னையில் காற்று மாசு அனுமதிக்கப்பட்ட அளவைவிட்ட ஒன்றரை மடங்கு அதிகம் என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தகவல்.
- சென்னை தெருக்களில் குவிந்து கிடந்த பட்டாசுக் குப்பைகள் இரவோடு இரவாக துப்பரவு பணியாளர்கள் அகற்றினர்.
- சென்னை அசோக் நகரில் உள்ள மருந்து நிறுவனக் கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
- ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை அரசியல் உள்நோக்கம் கொண்டது - முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்.
இந்தியா:
- ”துணையை தேர்வு செய்வதற்கு அனைவருக்கும் முழு சுதந்திரம்.. இதற்கு இடமில்லை..” : டெல்லி உயர் நீதிமன்றம் கருத்து
- வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது 'சித்ரங்' புயலாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- 9 துணைவேந்தர்களை ராஜினாமா செய்யச்சொன்ன ஆளுநர்; பதவியை தொடரலாம் என உயர்நீதிமன்றம் உத்தரவு
- திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க டெலிகிராமில் டிக்கெட்கள் விற்பனை என்று தகவல் - பக்தர்கள் அதிர்ச்சி
- மொஹாலியில் 1000 கிலோ எடைகொண்ட தீபம் - 3,560 லிட்டர் எண்ணெய் எரியவிட்டு நிகழ்த்தப்பட்ட உலக சாதனை.
- ட்விட்டரில் கிரிக்கெட் ரசிகரின் ஒருவருக்கு கூகுள் நிறுவனத்தின் முதன்மை செயலர் சுந்தர் பிச்சை பதிலளித்தது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உலகம்:
- பாகிஸ்தானிலிருந்து தப்பி சென்ற பத்திரிகையாளர் கென்யாவில் சுட்டு கொலை செய்யப்பட்டார்.
- கடும் நிதி இழப்பை தொடர்ந்து, உலகளவில் தங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் 4,000 ஊழியர்கள் பணியிலிருந்து நீக்கம் - பிலிப்ஸ் நிறுவனம்
- எஸ்டோனியாவின் அமாரி நகரில் நேட்டோ படைகள் போர் ஒத்திகை மேற்கொண்டனர்.
- அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லாய்ட் ஆஸ்டின், ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்கய் சொய்குவுடன் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை.
- பிரிட்டன் பிரதமராகிறார் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக்.
விளையாட்டு:
- தோல்விக்கு பிறகு பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் தனது சக வீரர்களிடையே பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
- டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்காளதேசம்-நெதர்லாந்து இடையிலான போட்டியில் வங்காளதேசம் அபார வெற்றி பெற்றது.
- ஜிம்பாவே - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டி20 உலகக் கோப்பை போட்டி மழையால் கைவிடப்பட்டது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion