மேலும் அறிய

Vaccine shortage | காணாமல் போகும் கொரோனா தடுப்பூசிகள்: எங்கே தவறியது அரசு?

நாளொன்றுக்கு 2.7 மில்லியன் தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இருந்தாலும் கடந்த மூன்று வாரங்களில் மட்டும் இந்தியாவில் நாளொன்றுக்கு மக்களிடம் சென்று சேர்ந்த தடுப்பூசி எண்ணிக்கை என்னவோ வெறும் 1.62 மில்லியன் மட்டும்தான்!

கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் மூன்றாம் கட்ட தடுப்பூசி போடும் பணிகள் மே மாதம் தொடங்கியது. குறிப்பாக 18-44 வயதினருக்கான இலவச தடுப்பூசி செலுத்தும் பணி இந்த மூன்றாம் கட்டத்தில் தொடங்கப்படுவதாக அறிவிக்கபட்டது. பணிகள் பெயரளவில்தான் தொடங்கியதே தவிர முதல் கோணல் முற்றிலும் கோணல் என்னும் கதையாக தடுப்பூசிகள் கிடைக்கப்பெறாத காரணத்தால் 18 -44 வயதினருக்கான தடுப்பூசி போடும் பணி நிறுத்திவைக்கப்பட்டது.

மீண்டும் தற்போது 20 மே அன்றிலிருந்து 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசிகள் போடும் பணிகள் தொடங்கியிருக்கின்றன. மத்திய சுகாதாரத்துறையின் புள்ளிவிவரங்களின்படி இந்த ஐந்து நாட்களில் மட்டும் 18-44 வயதினருள் ஒரு கோடிக்கும் அதிகமான நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை இந்தியா 19 கோடி கோவிஷீல்ட் -கோவாக்சின் தடுப்பூசிகளைச் செலுத்தியுள்ளதாக அந்த புள்ளிவிவரத்தில் கூறப்பட்டுள்ளது பாராட்டத்தக்கதுதான், ஆனால் அதுதான் உண்மை நிலவரமா? அல்லது இந்த எண்ணிக்கை வெறும் கண் துடைப்பா?

இன்றைய தேதியில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் மட்டும்
1.80 கோடி தடுப்பூசிகள் இருப்பதாக மத்திய அரசு கூறுகிறது. ஆனால் டெல்லி தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக ஒட்டுமொத்தமாகவே 18-44 வயதினருக்கான தடுப்பூசி போடும் பணியை நிறுத்திவைத்துள்ளது.பஞ்சாப் மத்திய அரசை நம்பியிருக்க முடியாது என நேரடியாகவே மாடர்னா தடுப்பூசியைக் கொள்முதல் செய்யக் களமிறங்கியது. தமிழ்நாட்டைப் பொருத்தவரை கடலூர், சென்னை என பல்வேறு மாவட்டங்களில் 18-44 வயதினருக்கு தடுப்பூசியே கிடைக்கப்பெறவில்லை.


Vaccine shortage | காணாமல் போகும் கொரோனா தடுப்பூசிகள்: எங்கே தவறியது அரசு?


Vaccine shortage | காணாமல் போகும் கொரோனா தடுப்பூசிகள்: எங்கே தவறியது அரசு?


Vaccine shortage | காணாமல் போகும் கொரோனா தடுப்பூசிகள்: எங்கே தவறியது அரசு?

திருச்சியில் இன்றைக்கு மட்டுமே கடைசியாக தடுப்பூசிக்கு புக் செய்யப்பட்டுள்ளது. பெருநகரம் கோவையில் நாட்டாம்பாளையம் என்னும் ஒரு இடத்தில் மட்டும்தான் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. ஆனால் அங்கும் இன்று மட்டுமே கடைசி. மதுரையில் ஒட்டுமொத்தமாகவே தடுப்பூசி கிடைக்கப்பெறவில்லை. அண்டை மாநிலமான கேரளாவில் எர்ணாகுளம், இடுக்கி எனப் பல்வேறு மாவட்டங்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி மையங்களே இல்லை. கர்நாடகா தனது மெட்ரோ நகரமான பெங்களூருவில் மட்டும் இன்றைய ஒருநாளைக்கான தடுப்பூசிகளை வைத்துக்கொண்டு தத்தளித்துக்கொண்டிருக்கிறது.இப்படியிருக்க, எங்கே போனது 1.80 கோடி தடுப்பூசிகள், கடந்த ஐந்து நாட்களில் யாருக்குப் போடப்பட்டது ஒரு கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் என்கிற கேள்வி எழுகிறது.

நாளொன்றுக்கு 2.7 மில்லியன் தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இருந்தாலும் கடந்த மூன்று வாரங்களில் மட்டும் நாளொன்றுக்கு மக்களிடம் சென்று சேர்ந்த தடுப்பூசி எண்ணிக்கை என்னவோ வெறும் 1.62 மில்லியன் மட்டும்தான்.


இத்தனைக்கும் சீரம் இன்ஸ்ட்டியூட் நிறுவனம் மாதம் ஒன்றுக்கு 70 மில்லியன் தடுப்பூசிகளைத் தயாரிக்கிறது. பாரத் பயோடெக் நிறுவனம் மாதமொன்றுக்கு 10 மில்லியன் கோவாக்சின்களை உற்பத்தி செய்கிறது.இதை இன்னும் அதிகரிக்கும் விதமாக ஹைதராபாத் மற்றும் மும்பையைச் சேர்ந்த இரண்டு நிறுவனங்களிலும் கோவாக்சின் உற்பத்திக்கான முதலீட்டில் அரசு களமிறங்க உள்ளது.


Vaccine shortage | காணாமல் போகும் கொரோனா தடுப்பூசிகள்: எங்கே தவறியது அரசு?

அதாவது நாளொன்றுக்கு 2.7 மில்லியன் தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இருந்தாலும் கடந்த மூன்று வாரங்களில் மட்டும் நாளொன்றுக்கு மக்களிடம் சென்று சேர்ந்த தடுப்பூசி எண்ணிக்கை என்னவோ வெறும் 1.62 மில்லியன் மட்டும்தான். அப்படியென்றால் எங்கே காணாமல் போகிறது மீதமுள்ள தடுப்பூசிகள்? இவ்வளவு தடுப்பூசிகள் தயாரித்தும் மாநிலங்களில் நிலவும் தொடர் தட்டுப்பாடுக்குக் காரணம் என்ன? இத்தனைக்கும் இந்தியா தற்காலிகமாக எந்த நாடுகளுக்கும் தடுப்பூசி ஏற்றுமதி செய்யவில்லை. அப்படியென்றால் எங்கே தவறுகிறது அரசு?

Vaccine shortage | காணாமல் போகும் கொரோனா தடுப்பூசிகள்: எங்கே தவறியது அரசு?

மத்திய பட்ஜெட்டில் 35000 கோடி ஒதுக்கிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கோவிஷீல்ட் தடுப்பூசிக்கான அந்த 3000 கோடியை ஒதுக்கியிருந்தால் இந்நேரம் நமது கையிருப்பாக 200 கோடி டோஸ்கள் இருந்திருக்கும்


‘கோவிஷீல்ட் உற்பத்தியை அதிகரிக்க அவர்கள் கேட்ட முன்பணத்தைத் தரவில்லை.தடுப்பூசிகளுக்கான சர்வதேசத் டெண்டர் எதையுமே மத்திய அரசு அறிவிக்கவில்லை’என இதற்கான பல்வேறு காரணங்களை அடுக்குகிறார் பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன். அவர் கூறுகையில், ‘சீரம் இன்ஸ்ட்டியூட்டின் ஆதார் பூனாவாலா லண்டன் செல்வதற்கு முன்பு கோவீஷீல்ட் உற்பத்தியை அதிகரிக்க கட்டுமானங்களை உருவாக்குவதற்காக அரசிடம் 3000 கோடி ரூபாய் முன்பணம் கேட்டிருந்தார்.அது இன்னும் தரப்பட்டதாகத் தெரியவில்லை.கோவாக்சின் உற்பத்தியும் மிகச்சிறிய அளவில்தான் உள்ளது.அதனால் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுகிறது. புதிய தடுப்பூசிக் கொள்கையின்படி மாநிலங்களே தடுப்பூசி கொள்முதலைப் பார்த்துக்கொள்ளலாம் என மத்திய அரசு தட்டிக்கழித்ததும் பஞ்சாப் நேரடியாக மடோர்னா, ஃபைசர் தடுப்பூசிக் கொள்முதலுக்கு தொடர்புடைய நிறுவனங்களை அணுகியது. ஆனால் இரண்டு நிறுவனங்களுமே பஞ்சாப்புக்குத் தடுப்பூசி கொள்முதல் செய்ய மறுத்துவிட்டது. காரணம், தடுப்பூசியால் ஏற்படும் சேதம் அல்லது இழப்புக்கு எதிரான காப்பில் (Indemnity)மத்திய அரசு கையெழுத்திட்டாலே ஒழிய பெருநிறுவனங்கள் மாநிலங்களுக்குத் தடுப்பூசியை அளிக்காது. நமது மத்திய அரசு அதில் கையெழுத்திடவில்லை. ஜனவரியிலேயே மத்திய அரசு சர்வதேச டெண்டரை அறிவித்திருந்தால் மாநிலங்களுக்கு இந்தச் சிக்கலே ஏற்பட்டிருக்காது.சர்வதேச நாடுகள் ஏப்ரல் 2022 வரை தங்களுக்கான தடுப்பூசி தேவைகளுக்கு முன்னரே இந்த நிறுவனங்களை அணுகிவிட்டதால் இனிமேல் நாம் சர்வதேசத் டெண்டர் அறிவிக்கவும் சாத்தியமில்லை. அதனால் தடுப்பூசி உள்நாட்டு உற்பத்தி மட்டுமே நமது கையில் இருக்கும் ஒரே நம்பிக்கை. ஆனால் மத்திய பட்ஜெட்டில் 35000 கோடி ஒதுக்கிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கோவிஷீல்ட் தடுப்பூசிக்கான அந்த 3000 கோடியை ஒதுக்கியிருந்தால் இந்நேரம் நமது கையிருப்பாக 200 கோடி டோஸ்கள் இருந்திருக்கும். தடுப்பூசி செலுத்துவதை மத்திய அரசுதான் செய்யவேண்டும் அதுவும் வீடுவீடாகச் சென்று செய்யவேண்டும்.இது மட்டுமே தொற்றுப்பரவலுக்கான ஒரே தீர்வு.மாநிலங்களிடம் இந்த பொறுப்பைத் தட்டிக்கழிப்பது தீர்வாகாது’ என்கிறார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பெட்ரோகெமிக்கல் பொருட்களுக்கு சுங்க வரி விலக்கு: மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு - யாருக்கெல்லாம் லாபம்?
பெட்ரோகெமிக்கல் பொருட்களுக்கு சுங்க வரி விலக்கு: மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு - யாருக்கெல்லாம் லாபம்?
Waste Management Rules: குப்பைகளை இனி இப்படித்தான் போடணும்! இல்லேன்னா அபராதம்- நிறுவனங்களுக்கும் ஆப்பு வைத்த அரசு!
Waste Management Rules: குப்பைகளை இனி இப்படித்தான் போடணும்! இல்லேன்னா அபராதம்- நிறுவனங்களுக்கும் ஆப்பு வைத்த அரசு!
Top 10 News Headlines: காங்., வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு? திருச்சியில் விஜய், அண்ணாமலைக்கு அழுத்தம் - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: காங்., வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு? திருச்சியில் விஜய், அண்ணாமலைக்கு அழுத்தம் - 11 மணி வரை இன்று
Indigo Fare Increased: விமானப் பயணிகளுக்கு ஷாக்! விமான கட்டணம் அதிரடி உயர்வு - எவ்வளவு தெரியுமா?
Indigo Fare Increased: விமானப் பயணிகளுக்கு ஷாக்! விமான கட்டணம் அதிரடி உயர்வு - எவ்வளவு தெரியுமா?
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்
விடுதலை ஆன பொன்முடி.. கண்ணீர் விட்ட சிகாமணி! செம்மண் முறைகேடு வழக்கு
Vijay Copies MGR | அன்று MGR.. இன்று விஜய்! 2 தொகுதி போட்டி STRATEGY அரசியல் REWIND
Congress | காங்கிரஸில் நீயா நீனா போட்டி! பவரை கையில் எடுத்த ராகுல்! வேட்பாளர்கள் தாமதம் ஏன்?
வேட்பாளர் தேர்வில் இழுபறி..மாணிக்கம் தாகூர் திடீர் விலகல்!பரபரக்கும் காங்கிரஸ் கூடாரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: விஜயின் வேட்புமனுவிலேயே கோளாறு..! ஃபார்ம் கூட ஃபில் பண்ண தெரியலயா? பெரம்பூரில் தள்ளுபடி?
TVK Vijay: விஜயின் வேட்புமனுவிலேயே கோளாறு..! ஃபார்ம் கூட ஃபில் பண்ண தெரியலயா? பெரம்பூரில் தள்ளுபடி?
Trump Iran War: “அமெரிக்கா அவமானப்பட்டு, இழிவுபட்டு, வருத்தப்பட்டு...“; ட்ரம்ப்புக்கு மெர்சல் காட்டிய ஈரான்
“அமெரிக்கா அவமானப்பட்டு, இழிவுபட்டு, வருத்தப்பட்டு...“; ட்ரம்ப்புக்கு மெர்சல் காட்டிய ஈரான்
CSK vs PBKS: சொந்த மண்ணில் கம்பேக் தருமா சிஎஸ்கே? பேட்டிங்கில் தேறுமா? வரிந்து கட்டும் பஞ்சாப் - வெற்றி யாருக்கு?
CSK vs PBKS: சொந்த மண்ணில் கம்பேக் தருமா சிஎஸ்கே? பேட்டிங்கில் தேறுமா? வரிந்து கட்டும் பஞ்சாப் - வெற்றி யாருக்கு?
Suzuki Burgman Street 125: ஒரு லட்சத்துக்கே புதிய பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 ஸ்கூட்டர் அறிமுகம் - TVS, ஆக்டிவா தாங்குமா?
Suzuki Burgman Street 125: ஒரு லட்சத்துக்கே புதிய பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 ஸ்கூட்டர் அறிமுகம் - TVS, ஆக்டிவா தாங்குமா?
“செந்தில் பாலாஜி என்றாலே செயல்வீரர், செயல்வீரர் என்றாலே செந்தில் பாலாஜி” - கோவை பிரச்சாரத்தில் புகழ்ந்து தள்ளிய முதல்வர் ஸ்டாலின்
“செந்தில் பாலாஜி என்றாலே செயல்வீரர், செயல்வீரர் என்றாலே செந்தில் பாலாஜி” - கோவை பிரச்சாரத்தில் புகழ்ந்து தள்ளிய முதல்வர் ஸ்டாலின்
Chennai Bus ; பேருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு !! காத்திருப்பு நேரம் குறைய புதிய திட்டம்
Chennai Bus ; பேருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு !! காத்திருப்பு நேரம் குறைய புதிய திட்டம்
Tamil Nadu New DGP: தமிழக தேர்தல் களம் பரபரப்பு! புதிய DGP நியமனம்: விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு குற்றச்சாட்டு காரணமா?
தமிழக தேர்தல் களம் பரபரப்பு! புதிய DGP நியமனம்: விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு குற்றச்சாட்டு காரணமா?
சிறுபான்மையினர் நிறுவனங்களை முடக்க சதி? ஏன் இந்த பிடிவாதம்? - மத்திய அரசுக்கு எதிராக கொந்தளித்த விஜய்
சிறுபான்மையினர் நிறுவனங்களை முடக்க சதி? ஏன் இந்த பிடிவாதம்? - மத்திய அரசுக்கு எதிராக கொந்தளித்த விஜய்
Embed widget