மேலும் அறிய

முதியவர்கள் வாழ பாதுகாப்பற்ற மாநிலமாகும் தமிழ்நாடு?...வெளியான அதிர்ச்சி புள்ளிவிவரம்!

கடந்த 20221ஆம் ஆண்டு, முதியவர்கள் கொலை செய்யப்படுவது நாட்டிலேயே தமிழ்நாட்டில்தான் அதிகமாக நிகழ்ந்துள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் சமீபத்தில் வெளியிட்டுள்ள குற்ற அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 20221ஆம் ஆண்டு, முதியவர்கள் கொலை செய்யப்படுவது நாட்டிலேயே தமிழ்நாட்டில்தான் அதிகமாக நிகழ்ந்துள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் சமீபத்தில் வெளியிட்டுள்ள குற்ற அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

முதியவர்கள் சம்பந்தப்பட்ட 191 கொலை வழக்குகளில் 60 வயதுக்கு மேற்பட்ட 202 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இது மாநிலத்தில் பதிவான 1,686 கொலை வழக்குகளில் 11.3% ஆகும். மொத்தமாக, 1,741 பேர் கொல்லப்பட்டனர். முதியவர்கள் சம்பந்தப்பட்ட கொலைகளில் இரண்டாவது அதிக எண்ணிக்கையிலான கொலைகள் மகாராஷ்டிராவில் பதிவாகியுள்ளன. அங்கு பதிவான 2,142 கொலை வழக்குகளில் 181 மூத்த குடிமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

முதியோர் சம்பந்தப்பட்ட கொலைகளின் எண்ணிக்கை 2019 முதல் மாநிலத்தில் படிப்படியாக உயர்ந்து வருகிறது. மொத்த கொலைகளின் எண்ணிக்கை குறைந்துள்ள போதிலும் முதியவர்கள் கொலை செய்யப்படுவது அதிகரித்துள்ளது. 2019 ஆம் ஆண்டில், மாநிலத்தில் பதிவான 1,745 கொலை வழக்குகளில் 173 முதியவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 2021 இல், புள்ளிவிவரங்களின்படி 1,686 கொலை வழக்குகளில் 191 முதியவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

2021 புள்ளிவிவரங்களின்படி, சமீபத்திய காலத்தில், முதியோர் கொலைகளில் தமிழ்நாடு முதலிடம் பிடித்திருப்பது இதுவே முதல்முறை. கடந்த சில மாதங்களாகவே மாநிலத்தில் முதியோர் கொலை சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், தற்போது குற்ற அறிக்கை வெளியாகி உள்ளது. ஜூலை 2022 இல், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில், வயதான தம்பதியினர் அவர்களது வீட்டில் படுகொலை செய்யப்பட்டனர். கடந்த மாதம் திருப்பூரில் மூதாட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

முதியோர்கள் அதிகம் உள்ள சில மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்டுள்ள இந்திய முதியோர் 2021 அறிக்கையின்படி, தமிழ்நாட்டில் முதியோர்களின் சதவீதம் 13.6 ஆகும். இது நாட்டிலேயே இரண்டாவது மிக அதிகம். நாட்டிலேயே அதிகபட்சமாக கேரளாவில் 16.5% மக்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாக உள்ளனர்.

தரவுகளை உன்னிப்பாகப் பகுப்பாய்வு செய்ததில், முதியோர்களைக் கொலை செய்வதில் தமிழகமும் அதிக குற்ற விகிதத்தில் உள்ளது என்பது தெரிய வந்துள்ளது.

ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு எத்தனை குற்றங்கள் நடக்கின்றனவோ அதுவே குற்ற விகிதமாக கணக்கிடப்படுகிறது. உதாரணமாக, கேரளாவில் பதிவாகியுள்ள 337 கொலைகளில் 17.2% முதியவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தமிழ்நாட்டில் 11.3 சதவீதத்தை விட அதிகம். இருப்பினும், கேரளாவில் குற்ற விகிதம் 0.99 ஆகவும், தமிழ்நாட்டில் 1.83 ஆகவும் பதிவாகியுள்ளது.

முதியவர்கள் சம்பந்தப்பட்ட கொலைகளின் குற்ற விகிதம் இந்தியாவில் மிக அதிகமாக இருக்கிறது. ஒரு சில யூனியன் பிரதேசங்கள் மற்றும் சத்தீஸ்கர் மற்றும் சிக்கிம் போன்ற மாநிலங்களில் மட்டுமே குற்ற விகிதம் அதிகபட்சமாக பதிவாகியுள்ளது. 

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: பீகாரில் வாக்காளர்கள் நீக்கப்பட்டதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் - “நெருப்புடன் விளையாடாதீர்கள்“ என எச்சரிக்கை
பீகாரில் வாக்காளர்கள் நீக்கப்பட்டதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் - “நெருப்புடன் விளையாடாதீர்கள்“ என எச்சரிக்கை
உடலுறவில் திருப்தியில்லை.. கணவனை கொலை செய்த மனைவி - தலைநகரில் கொடூரம்
உடலுறவில் திருப்தியில்லை.. கணவனை கொலை செய்த மனைவி - தலைநகரில் கொடூரம்
திருவள்ளூர் பாலியல் வன்கொடுமை; சிறுமியை சீரழித்த காமுகன் 14 நாளில் கைது- சிக்கியது எப்படி?
திருவள்ளூர் பாலியல் வன்கொடுமை; சிறுமியை சீரழித்த காமுகன் 14 நாளில் கைது- சிக்கியது எப்படி?
New Movies: தியேட்டருல என்ன படம் ஓடுது? இந்த வாரம் குடும்பத்தோட எந்த படம் பாக்கலாம்?
New Movies: தியேட்டருல என்ன படம் ஓடுது? இந்த வாரம் குடும்பத்தோட எந்த படம் பாக்கலாம்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Instagram Ilakiya | இலக்கியா தற்கொலை முயற்சி ஸ்டண்ட் மாஸ்டர் காரணமா உண்மையில் நடந்தது என்ன?
Vice President Jagdeep Dhankhar | அழுத்தம் கொடுத்த பாஜக? ஜெகதீப் தன்கர் ராஜினாமா!உண்மை பின்னணி என்ன?
ADMK BJP Alliance | கூட்டணி கட்சிகள் போர்க்கொடி.. இபிஎஸ்-க்கு நெருக்கடி! அமித்ஷா பக்கா ஸ்கெட்ச்
Mayiladuthurai Womens College | அவசரகதியில் கல்லூரி திறப்பு? ”பெஞ்ச் கூட இல்லை” மாணவிகள் வேதனை
6 முறை சாம்பியன்கடா மீசை.. WWE ஜாம்பவான் ஹல்க் ஹோகன் திடீர் மரணம் | WWE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: பீகாரில் வாக்காளர்கள் நீக்கப்பட்டதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் - “நெருப்புடன் விளையாடாதீர்கள்“ என எச்சரிக்கை
பீகாரில் வாக்காளர்கள் நீக்கப்பட்டதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் - “நெருப்புடன் விளையாடாதீர்கள்“ என எச்சரிக்கை
உடலுறவில் திருப்தியில்லை.. கணவனை கொலை செய்த மனைவி - தலைநகரில் கொடூரம்
உடலுறவில் திருப்தியில்லை.. கணவனை கொலை செய்த மனைவி - தலைநகரில் கொடூரம்
திருவள்ளூர் பாலியல் வன்கொடுமை; சிறுமியை சீரழித்த காமுகன் 14 நாளில் கைது- சிக்கியது எப்படி?
திருவள்ளூர் பாலியல் வன்கொடுமை; சிறுமியை சீரழித்த காமுகன் 14 நாளில் கைது- சிக்கியது எப்படி?
New Movies: தியேட்டருல என்ன படம் ஓடுது? இந்த வாரம் குடும்பத்தோட எந்த படம் பாக்கலாம்?
New Movies: தியேட்டருல என்ன படம் ஓடுது? இந்த வாரம் குடும்பத்தோட எந்த படம் பாக்கலாம்?
Aadi Pooram 2025 leave: மாணவர்களே.. ஆடிப்பூரத்திற்கு பள்ளி, கல்லூரிகள் லீவு! தமிழ்நாட்டில் யாருக்கு?
Aadi Pooram 2025 leave: மாணவர்களே.. ஆடிப்பூரத்திற்கு பள்ளி, கல்லூரிகள் லீவு! தமிழ்நாட்டில் யாருக்கு?
TN NEET Rank List 2025: வெளியான மருத்துவ படிப்பு தரவரிசைப் பட்டியல்; பொது, 7.5% ஒதுக்கீட்டில் டாப் மாணவர்கள் பட்டியல் இதோ!
TN NEET Rank List 2025: வெளியான மருத்துவ படிப்பு தரவரிசைப் பட்டியல்; பொது, 7.5% ஒதுக்கீட்டில் டாப் மாணவர்கள் பட்டியல் இதோ!
Delhi High Court: “பெண்ணுடன் நட்பு இருந்தாலும் அவள் சம்மதமில்லாமல் உடலுறவு கொள்ள ஆணுக்கு உரிமை இல்லை“-டெல்லி கோர்ட்
“பெண்ணுடன் நட்பு இருந்தாலும் அவள் சம்மதமில்லாமல் உடலுறவு கொள்ள ஆணுக்கு உரிமை இல்லை“-டெல்லி கோர்ட்
Trump Warns Tech., Giants: இந்திய பொறியாளர்களுக்கு ஆப்பு வைத்த ட்ரம்ப்; கூகுள், மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களிடம் கூறியது என்ன.?
இந்திய பொறியாளர்களுக்கு ஆப்பு வைத்த ட்ரம்ப்; கூகுள், மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களிடம் கூறியது என்ன.?
Embed widget