Breaking News Live: இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை கடந்தது...
இன்றைய முக்கிய அரசியல், சமூக, நிகழ்வுகளை இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.
LIVE
![Breaking News Live: இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை கடந்தது... Breaking News Live: இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை கடந்தது...](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/20/43cce5e91d89b2bfe8745a17de923e78_original.jpg)
Background
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் வீடு உள்பட 57 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
கொரோனா தொற்றால் ஒரேநாளில் 491 பேர் பலி..
இந்தியாவில் ஒரேநாளில் கொரோனா தொற்றால் 491 பேர் உயிரிழந்ததாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை கடந்தது...
இந்தியாவில் ஒரே நாளில் 3,17,532 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
கே.பி. அன்பழகனின் உறவினர்கள் வீடுகளிலும் சோதனை..
கே.பி. அன்பழகன் உறவினர்கள், ஆதரவாளர்களின் வீடு, அலுவலகங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சோதனை நடைபெறும் இடங்கள்..
தருமபுரியில் 41 இடங்கள், சேலம், சென்னை, தெலுங்கானா மாவட்டம் கரீம் நகரிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
தருமபுரியில் மட்டும் 41 இடங்களில் சோதனை..
தருமபுரி மாவட்டத்தில் மட்டும் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல், சென்னை கோபாலபுரத்தில் கே.பி. அன்பழகனுக்கு தொடர்புடைய இடங்களிலும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)