மேலும் அறிய

சமூகநீதி பேசும் தமிழ்நாடு... மலக்குழி மரணத்தில் இரண்டாவது இடம்... ஐந்தாண்டுகளில் 48 பேர் இறப்பு!

மேலும், 2022ல் இதுவரை, 17 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். அதில் தமிழ்நாட்டில் இருந்து மட்டும் 5 பேர் இறந்துள்ளனர். இந்த வருடத்தில் தமிழகமே இதில் முதலிடத்தில் உள்ளது.

மனிதக்கழிவுகளை மனிதர்களே அகற்றத் தடை மற்றும் அவர்களின் மறுவாழ்வு சட்டம் 2013 இன் படி, சாக்கடைகள் மற்றும் கழிவுநீர் தொட்டிகளுக்குள் துப்புரவு பணியாளர்கள் இறங்கி சுத்தம் செய்யும் நடைமுறை என்பது நம் நாட்டில் தடைசெய்யப்பட்ட ஒன்றாகும். மனித மலத்தை கையால் சுத்தம் செய்வதற்கு எந்த நபரையும் பயன்படுத்தக்கூடாது என்று இந்த சட்டம் தடை விதிக்கிறது. ஆனாலும் இந்த அவலம் இதுவரை தீர்ந்த பாடில்லை. இன்று வரை இதுபோன்ற சுத்தம் செய்யும் பணிகளின்போது, கழிவுநீர் தொட்டியில் இறங்கிய துப்புரவு பணியாளர் உயிரிழப்பு என்ற செய்திகளை நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். 

சமூகநீதி பேசும் தமிழ்நாடு... மலக்குழி மரணத்தில் இரண்டாவது இடம்... ஐந்தாண்டுகளில் 48 பேர் இறப்பு!

அமைச்சர் வீரேந்திர குமார்

இந்நிலையில், இதுபோன்று துப்பரவு பணியின்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்து, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டது. கடந்த திங்கட்கிழமை தொடங்கி நடைபெற்றுவரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இந்த கேள்விக்கு சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் வீரேந்திர குமார் பதிலளித்தார். அவர் பேசுகையில், 2017 ஆம் ஆண்டு முதல் இதுவரை 347 பேர், கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருக்கையில் உயிரிழந்திருக்கின்றனர் என்று அதிர்ச்சிகரமான தகவலை தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்: கல்யாணத்துக்கு பிறகும் ஜீன்ஸ் பேன்டா? மனைவியிடம் சண்டையிட்ட கணவன் மர்ம மரணம்!

ஆண்டுவாரியாக இறப்பு

மேலும் பேசிய அவர் ஆண்டுவாரியாக எத்தனை பேர் இதன் மூலம் உயிரிழந்தனர் என்று அவர் தெரிவித்திருந்தார். அவர் அளித்த தகவல்களின் படி, 2017-ல் 92, 2018-ல் 67, 2019-ல் 116, 2020-ல் 19, 2021-ல் 36 மற்றும் 2022-ல் 17 பேர் இறந்துள்ளதாக பதிவாகியிருப்பதாக வீரேந்திர குமார் தகவல் அளித்தார்.

சமூகநீதி பேசும் தமிழ்நாடு... மலக்குழி மரணத்தில் இரண்டாவது இடம்... ஐந்தாண்டுகளில் 48 பேர் இறப்பு!

மாநில வாரியாக…

கடந்த ஐந்தாண்டுகளில், உத்தரப் பிரதேசத்தில் அதிகபட்சமாக 51 பேரும், தமிழகத்தில் 48 பேரும், டெல்லியில் 44 பேரும் உயிரிழந்துள்ளனர். 2019 இல் உத்தரபிரதேசத்தில் அதிக இறப்புகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன, அந்த வருடம் மட்டும் 26 துப்புரவு தொழிலாளர்கள் இறந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், 2022ல் இதுவரை, 17 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர் அதில் தமிழ்நாட்டில் இருந்து மட்டும் 5 பேர் இறந்துள்ளனர். இந்த வருடத்தில் தமிழகமே இதில் முதலிடத்தில் உள்ளது, அதனை தொடர்ந்து உத்தரபிரதேசம் இரண்டாவது இடத்தில் உள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget