மேலும் அறிய

Taj Mahal Case: “விட்டா நீதிபதிகளோட அறைகளையும் திறக்க சொல்லுவீங்க” : தாஜ்மஹாலின் அறைகளை திறக்கக்கோரிய வழக்கு தள்ளுபடி

”நீதிபதிகளின் அறைகளை திறக்கக்கோரி வழக்கு தொடுத்தாலும் தொடுப்பீர்கள்” என தாஜ்மஹாலில் உள்ள 22 அறைகளை திறக்க கோரிய வழக்கில் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்

நீதிபதிகளின் அறைகளை திறக்க கோரி வழக்கு தொடுப்பீர்கள்- நீதிபதிகள் கண்டனம்

 ”நீதிபதிகளின் அறைகளை திறக்க கோரி வழக்கு தொடுத்தாலும் தொடுப்பீர்கள்” என தாஜ்மஹாலில் உள்ள 22 அறைகளை திறக்க கோரிய வழக்கில் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

தாஜ்மஹாலில் உள்ள 22 அறைகளில் இந்து தெய்வங்கள் இருப்பதாகவும், அதை திறக்க உத்தரவிட வேண்டும் என பாஜக நிர்வாகி ரஜ்னீஷ் சிங் என்பவர் தொடர்ந்த வழக்கை அலகாபாத் உயர்நீதிமன்றம் லக்னோ கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

வழக்கு-விசாரணை: 

தாஜ்மஹாலில் உள்ள 22 அறைகளை திறக்க கோரிய வழக்கு அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ கிளை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கை நீதிபதிகள் டி.கே.உபத்யா மற்றும் சுபாஷ் வித்யார்த்தி அமர்வு விசாரணை செய்தது.

மனுதாரர் தரப்பு:

மனுதாரர் தரப்பில் நீதிமன்றத்தில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டது. அதில் தாஜ்மஹாலில் உள்ள 22 பூட்டிய அறைகளை திறக்க வேண்டும் என மனுதாரர் தெரிவித்தார். மேலும், அந்த அறைகளில் இருப்பது குறித்து நாட்டு மக்களுக்கு உண்மையை தெரியப்படுத்த வேண்டும் என் ரஜ்னீஷ் சிங் தெரிவித்தார். மேலும் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த அறைகளை பூட்டி உள்ளதாக தொல்லியல் துறை அதிகாரிகள், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தகவல் தெரிவித்ததாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது

நீதிபதிகள் தரப்பு:

மனுதாரர் தரப்புக்கு பதிலளித்து பேசிய நீதிபதிகள் தாஜ்மஹாலை ஷாஜகான் கட்டினாரா என்று சந்தேகிக்கிறீர்களா என கேள்வி எழுப்பினார். மேலும் எந்த அடிப்படையில் நீதிமன்றத்தை அணுகி உள்ளீர்கள் என கேள்வி எழுப்பினர்.  நீதிபதிகளின் அறைகளை திறக்கக்கோரி வழக்கு தொடுத்தாலும் தொடுப்பீர்கள் என நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக ஆய்வு செய்ய விரும்பினால், எம்.ஏ போன்ற ஆய்வு படிப்புகளை படித்துவிட்டு, பின் ஆய்வு செய்ய வாருங்கள். அப்போது அனுமதி கிடைக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடுங்கள் என நீதிபதி காட்டமாக பதிலளித்தார். இது போன்ற வழக்கு தொடுப்பதன் மூலம், பொது நல வழக்கு தொடரும் முறையை இழிவுபடுத்த வேண்டாம் என நீதிபதிகள் தெரிவித்தனர். பின்னர் இவ்வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Also Read: மொழிக்காக முதலில் வருபவர்கள் தமிழர்கள் என்று உயர்நீதிமன்ற விழாவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா கருத்து

மேலும் செய்திகளை காணABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ABP Nadu Exclusive: அப்போது பெரியார்! இப்போது மோடி! அதிர்ச்சி கொடுத்த சத்யராஜ்! விளக்கம் கொடுத்த மகள் திவ்யா!
அப்போது பெரியார்! இப்போது மோடி! அதிர்ச்சி கொடுத்த சத்யராஜ்! விளக்கம் கொடுத்த மகள் திவ்யா!
Rohit Sharma: மும்பையில் முடிந்தது ரோகித் சர்மா சகாப்தம்? வான்கடேவில் வழியனுப்பி வைத்த ரசிகர்கள் - அடுத்து என்ன?
Rohit Sharma: மும்பையில் முடிந்தது ரோகித் சர்மா சகாப்தம்? வான்கடேவில் வழியனுப்பி வைத்த ரசிகர்கள் - அடுத்து என்ன?
Breaking News LIVE : ஸ்வாதி மாலிவால் விவகாரம் - கெஜ்ரிவாலின் தனிச்செயலர் பிபவ் குமார் கைது
Breaking News LIVE : ஸ்வாதி மாலிவால் விவகாரம் - கெஜ்ரிவாலின் தனிச்செயலர் பிபவ் குமார் கைது
இந்திய மாணவர்களே உஷார்! வீடுகளுக்குள்ளேயே இருங்க! கிர்கிஸ்தானில் வன்முறை! தூதரகம் அலெர்ட்!
இந்திய மாணவர்களே உஷார்! வீடுகளுக்குள்ளேயே இருங்க! கிர்கிஸ்தானில் வன்முறை! தூதரகம் அலெர்ட்!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Dhoni Last Match IPL 2024  : ”தோனி தரிசனம் இருக்கு கவலை படாதீங்க தல FANS” Hussey கொடுத்த அப்டேட்PM Modi Speech  : ’’ராமர் கோயிலை புல்டோசர் வைத்து இடிப்பார்கள்’’சர்ச்சையை கிளப்பும் மோடி!Jharkhand Minister arrest : எதிர்க்கட்சிகளுக்கு நெருக்கடி காங்கிரஸ் அமைச்சர் கைது அதிரடி காட்டும் EDModi on muslim fact check  : பொய் சொன்னாரா மோடி?ஆதாரம் இதோ!முஸ்லீம் குறித்து சர்ச்சை கருத்து

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Nadu Exclusive: அப்போது பெரியார்! இப்போது மோடி! அதிர்ச்சி கொடுத்த சத்யராஜ்! விளக்கம் கொடுத்த மகள் திவ்யா!
அப்போது பெரியார்! இப்போது மோடி! அதிர்ச்சி கொடுத்த சத்யராஜ்! விளக்கம் கொடுத்த மகள் திவ்யா!
Rohit Sharma: மும்பையில் முடிந்தது ரோகித் சர்மா சகாப்தம்? வான்கடேவில் வழியனுப்பி வைத்த ரசிகர்கள் - அடுத்து என்ன?
Rohit Sharma: மும்பையில் முடிந்தது ரோகித் சர்மா சகாப்தம்? வான்கடேவில் வழியனுப்பி வைத்த ரசிகர்கள் - அடுத்து என்ன?
Breaking News LIVE : ஸ்வாதி மாலிவால் விவகாரம் - கெஜ்ரிவாலின் தனிச்செயலர் பிபவ் குமார் கைது
Breaking News LIVE : ஸ்வாதி மாலிவால் விவகாரம் - கெஜ்ரிவாலின் தனிச்செயலர் பிபவ் குமார் கைது
இந்திய மாணவர்களே உஷார்! வீடுகளுக்குள்ளேயே இருங்க! கிர்கிஸ்தானில் வன்முறை! தூதரகம் அலெர்ட்!
இந்திய மாணவர்களே உஷார்! வீடுகளுக்குள்ளேயே இருங்க! கிர்கிஸ்தானில் வன்முறை! தூதரகம் அலெர்ட்!
Yercaud Flower Show: மே 22 ஆம் தேதி தொடங்கும் ஏற்காடு கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி!
Yercaud Flower Show: மே 22 ஆம் தேதி தொடங்கும் ஏற்காடு கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி!
Mumbai Indians: ஐபிஎல் வரலாற்றில் மோசமான சாதனையை படைத்த மும்பை இந்தியன்ஸ்.. அப்படி என்ன தெரியுமா..?
ஐபிஎல் வரலாற்றில் மோசமான சாதனையை படைத்த மும்பை இந்தியன்ஸ்.. அப்படி என்ன தெரியுமா..?
Latest Gold Silver Rate: வீக் எண்டில் கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.640 அதிகரிப்பு..
வீக் எண்டில் கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.640 அதிகரிப்பு..
TN CM MK Stalin: “பா.ஜ.க.வின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! இந்தியா வெல்லும்!” - முதலமைச்சர் ஸ்டாலின்..
“பா.ஜ.க.வின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! இந்தியா வெல்லும்!” - முதலமைச்சர் ஸ்டாலின்..
Embed widget