மேலும் அறிய

Supreme Court: இந்தியா தர்ம சத்திரமில்ல; 140 கோடி பேரால திணர்றோம் - ஈழத் தமிழர் வழக்கு, உச்சநீதிமன்றம் காட்டம்

இலங்கை தமிழர் ஒருவரின் மனு மீது தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், இந்தியா தர்ம சத்திரம் அல்ல என்றும், ஏற்கனவே 140 கோடி ஜனத்தொகையால் திணறிக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது. அது என்ன வழக்கு தெரியுமா.?

இலங்கை தமிழர் ஒருவர், இந்தியாவில் குடியேறுவதற்கு அனுமதி கேட்டு தாக்கல் செய்த மனு மீது தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், இந்தியா ஒரு தர்ம சத்திரம் அல்ல என்று கடிந்துகொண்டுள்ளது. இந்த வழக்கு குறித்து விரிவாக பார்க்கலாம்.

2015-ல் கைது செய்யப்பட்டு, சிறை தண்டனை விதிக்கப்பட்ட இலங்கை தமிழர்

விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்பில் இருந்ததாகக் கூறி, கடந்த 2015-ம் ஆண்டு இலங்கைத் தமிழரான சுபாஷ்கரன் என்பவரை கைது செய்யப்பட்டார். பின்பு விசாரணை நடைபெற்று, 2018-ம் ஆண்டு விசாரணை நீதிமன்றம் அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியது.

இதைத்தொடர்ந்து, தனது தண்டனையை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டார் சுபாஷ்கரன். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், கடந்த 2022-ம் ஆண்டு அவரது தண்டனைக் காலத்தை 7 ஆண்டகளாக குறைத்தது. அதோடு, தண்டனைக் காலம் முடிவடைந்த உடன், அவர் இலங்கைத் தமிழர் அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டு, எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவாக இந்தியாவை விட்டு வெளியேற்றப்பட வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தது.

இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவிற்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் சுபாஷ்கரன். அந்த மேல்முறையீட்டு மனு, உச்சநீதிமன்ற நீதிபதிகள் திபாங்கர் தத்தா, வினோத் சந்திரன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது வாதாடிய மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், சுபாஷ்கரன் ஒரு இலங்கைத் தமிழர், அகதியாக இங்கு வந்தவர், அவர் அவரது நாட்டிற்கு திரும்பிச் சென்றால், அவரது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது என்று கூறினார். மேலும், அவரது மனைவி மற்றும் குழந்தைகள் இந்தியாவில் குடியேறிவிட்டதாகவும், அதனால், அவரையும் இந்தியாவில் குடியேற அனுமதிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து, உலகெங்கிலும் இருந்து அகதிகள் வந்து குடியேற இந்தியா தர்ம சத்திரம் கிடையாது, ஏற்கனவே 140 கோடி மக்கள் தொகையால் நாம் திணறிக் கொடிருக்கிறோம் என்று நீதிபதிகள் காட்டமாக தெரிவித்தனர்.

மேலும், இங்கு குடியேற உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், சட்டப்பிரிவு 19-ன் படி, இந்தியாவின் அடிப்படை உரிமை, குடிமக்களுக்கு மட்டும்தான் உள்ளது என தெரிவித்தனர். இந்த விவகாரத்தில், உயர்நிதிமன்றம் முன்னதாக பிறப்பித்த உத்தரவில் நாங்கள் தலையிட விரும்பவில்லை என தெரிவித்தனர்.

அதற்கு, இந்தியாவிலிருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டால், சுபாஷ்கரனின் உயிருக்கு ஆபத்து உள்ளது என்றும், இலங்கைக்கு சென்றால், விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்ததால் அவர் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்படுவார் எனவும் தெரிவித்தனர். அதனால், அவர் இந்தியாவில் குடியேற அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதற்கு பதிலளித்த நீதிபதிகள், இலங்கையில் அச்சுறுத்தல் இருந்தால், அவர் வேறு நாடுகளை அணுகலாம் என்று கூறி, மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

 

தலைப்பு செய்திகள்

BJP: மேஜிக் நம்பரை எட்டும் பாஜக..! திமுகவின் நிலைப்பாடு என்ன? அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாக்கள்
மேஜிக் நம்பரை எட்டும் பாஜக..! திமுகவின் நிலைப்பாடு என்ன? அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாக்கள்
தூத்துக்குடி ITI: சிறந்த வேலைவாய்ப்புடன் தொழிற்பயிற்சி! ஜூலை 31 வரை விண்ணப்பிக்கலாம்!
தூத்துக்குடி ITI: சிறந்த வேலைவாய்ப்புடன் தொழிற்பயிற்சி! ஜூலை 31 வரை விண்ணப்பிக்கலாம்!
EPFO-வின் பொது மன்னிப்பு திட்டம்: பிஎஃப் நிறுவனங்களுக்கு அபராதம் இன்றி ஒரு அரிய வாய்ப்பு!
EPFO-வின் பொது மன்னிப்பு திட்டம்: பிஎஃப் நிறுவனங்களுக்கு அபராதம் இன்றி ஒரு அரிய வாய்ப்பு!
PF கணக்குதாரர்களுக்கு நல்ல செய்தி! 8.25% வட்டி ஜூலை 15-க்குள் வரவு!
PF கணக்குதாரர்களுக்கு நல்ல செய்தி! 8.25% வட்டி ஜூலை 15-க்குள் வரவு!

வீடியோ

Madurai Accident : அசுர வேகத்தில் ஆம்னி பேருந்து! அடுத்து நடந்த கொடூர விபத்து.. 5 பேர் பலியான சோகம்
Chief Minister special cell petition | ”உடனே பண்ணி கொடுங்க CM
Karnataka govt bus | GOVT BUS-ல் அத்துமீறிய நபர்! கண்ணம் சிவக்க பளார் பளார்! பொளந்தெடுத்த இளம்பெண்
ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து 10 தமிழர்கள் பரிதாப பலி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thai Maman Thanga Mothiram : குழந்தைகளுக்கு தங்க மோதிரம் ரெடி.? 4.41 லட்சம் ஒரு கிராம் மோதிரத்திற்கு டெண்டர்- அசத்தும் விஜய் அரசு
குழந்தைகளுக்கு தங்க மோதிரம் ரெடி.? 4.41 லட்சம் ஒரு கிராம் மோதிரத்திற்கு டெண்டர்- அசத்தும் விஜய் அரசு
IND Vs ENG ODI: தொடமுடியாமல் நிற்கும் ட்ராவிட் சாதனை - இங்கிலாந்தில் ரோகித், கோலி சாதிப்பார்களா? இன்று முதல் ODI
தொடமுடியாமல் நிற்கும் ட்ராவிட் சாதனை - இங்கிலாந்தில் ரோகித், கோலி சாதிப்பார்களா? இன்று முதல் ODI
BJP: மேஜிக் நம்பரை எட்டும் பாஜக..! திமுகவின் நிலைப்பாடு என்ன? அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாக்கள்
மேஜிக் நம்பரை எட்டும் பாஜக..! திமுகவின் நிலைப்பாடு என்ன? அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாக்கள்
ARUN IPS: தூக்கி அடிக்கப்பட்ட அருண் ஐபிஎஸ் - 2 மாதங்களில், இவ்ளோ காரணங்கள் இருக்கா? யார் இந்த மகேஷ்வரி?
தூக்கி அடிக்கப்பட்ட அருண் ஐபிஎஸ் - 2 மாதங்களில், இவ்ளோ காரணங்கள் இருக்கா? யார் இந்த மகேஷ்வரி?
TN Weather Update: சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று வெயில் கொளுத்தும்? மழை? தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று வெயில் கொளுத்தும்? மழை? தமிழக வானிலை அறிக்கை
Minister Ramesh warning : ரூ.100 கோடியில் சொத்து பதிவா.!! பொய் தகவலை பரப்பியவர்களை விட மாட்டேன்- சீறிய அமைச்சர் ரமேஷ்
ரூ.100 கோடியில் சொத்து பதிவா.!! பொய் தகவலை பரப்பியவர்களை விட மாட்டேன்- சீறிய அமைச்சர் ரமேஷ்
Carens Clavis EV: 490KM ரேஞ்ச் கொடுக்கும் மின்சார காருக்கு ரூ.1.8 லட்சம் தள்ளுபடி - விலை, அம்சங்கள், வசதிகள்
490KM ரேஞ்ச் கொடுக்கும் மின்சார காருக்கு ரூ.1.8 லட்சம் தள்ளுபடி - விலை, அம்சங்கள், வசதிகள்
Gold and silver rate today : ரூ.5000 குறைந்தது.! தங்கம், வெள்ளி நகைப்பிரியர்களுக்கு குஷி- இன்றைய விலை நிலவரம் இதோ...
ரூ.5000 குறைந்தது.! தங்கம், வெள்ளி நகைப்பிரியர்களுக்கு குஷி- இன்றைய விலை நிலவரம் இதோ...
Embed widget