மேலும் அறிய

"ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது" மாநில அரசுகளின் உரிமைகளை மீண்டும் நிலைநாட்டிய உச்ச நீதிமன்றம்

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்படும் முக்கிய மசோதாக்களை அவர் வேண்டுமென்றே தாமதிப்பதாகக் கூறி, உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசுகளின் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநருக்கும் மாநில அரசுக்கும் இடையே தொடர்ந்து அதிகார போட்டி நிலவி வருகிறது. கேரளா, தமிழ்நாடு, டெல்லி, தெலங்கானா, பஞ்சாப், மேற்குவங்கம் என ஆளுநர் - அரசாங்கம் மோதல் நீடிக்கும் மாநிலங்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. மாநில சட்டப்பேரவைகளில் நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர்கள் காலதாமதம் செய்வதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

பாஜக அல்லாத மாநிலங்களில் வரம்பை மீறுகிறார்களா ஆளுநர்கள்?

பஞ்சாப், கேரளா, தமிழ்நாடு, தெலங்கானா ஆகிய மாநிலங்கள் இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளன. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்படும் முக்கிய மசோதாக்களை அவர் வேண்டுமென்றே தாமதிப்பதாகக் கூறி, உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசுகளின் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பஞ்சாப் அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி கருத்தை தெரிவித்துள்ளது. கடந்த நவம்பர் 10ஆம் இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டாலும் நேற்றுதான் தீர்ப்பின் முழு விவரங்கள் வெளியிடப்பட்டது. மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்திருந்தால் ஆளுநர் அதை விரைவாக சட்டப்பேரவைக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்றும், சட்டத்தை மறுபரிசீலனை செய்யக் கோரி கேட்கலாம் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

"திருப்பி அனுப்பப்பட்ட மசோதாவில் திருத்தம் மேற்கொண்டோ அல்லது திருத்தம் மேற்கொள்ளாமலோ மாநில அரசு அதை திருப்பி அனுப்பினால், ஆளுநருக்கு வேறு வழியும் இல்லை. அதிகாரமும் இல்லை. அதற்கு ஒப்புதல் அளித்தாக வேண்டும்" என மாநில அரசின் உரிமைகளை நிலைநாட்டும் விதமாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மாநில அரசுகளுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு:

"அரசியலமைப்பு சட்டப்பிரிவு 200இன் கீழ் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைக்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது. இம்மாதிரியான சூழலில் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறைகளை ஆளுநர் கட்டாயமாக பின்பற்ற வேண்டும். ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைக்கப்பட்ட மசோதாக்களை கூடிய விரைவில் சட்டப்பேரவையில் திருப்பி அனுப்ப வேண்டும். அப்போது, மசோதாவை மறுபரிசீலனை செய்யும்படி கேட்டு கொள்ள வேண்டும்.

ஆளுநரின் ஆலோசனைகளை ஏற்று கொள்வதும் ஏற்று கொள்ளாமல் இருப்பதும் சட்டப்பேரவையின் அதிகார வரம்புக்கு உட்பட்டது" என இந்திய தலைமை நீதிபதி டி. ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.

உச்ச நீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதுமட்டும் இன்றி, தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் இந்த தீர்ப்பு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 10 முக்கியமான மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் ஆர். என். ரவி திருப்பி அனுப்பியிருந்தார். அந்த 10 மசோதாக்களையும் மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு தமிழ்நாடு அரசு அனுப்பியுள்ளது.                                                                                     

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

H-1B Visa Lottery Cancel?: ‘H-1B விசா இனி இல்லை‘; புதிய நடைமுறையை கொண்டுவரும் அமெரிக்கா; அப்போ எல்லாம் போச்சா.!!
‘H-1B விசா இனி இல்லை‘; புதிய நடைமுறையை கொண்டுவரும் அமெரிக்கா; அப்போ எல்லாம் போச்சா.!!
வங்கதேசத்தை கலவர பூமியாக்கிய கொலை - தேர்தலை குலைக்க இடைக்கால அரசின் சதி? யூனஸ் காரணம்?
வங்கதேசத்தை கலவர பூமியாக்கிய கொலை - தேர்தலை குலைக்க இடைக்கால அரசின் சதி? யூனஸ் காரணம்?
OPS vs EPS: இபிஎஸ் கூட்டணியை தூக்கியெறிந்த ஓபிஎஸ்.! திமுகவா.? தவெகவா.? ட்விஸ்ட் கொடுத்த நிர்வாகிகள்
இபிஎஸ் கூட்டணியை தூக்கியெறிந்த ஓபிஎஸ்.! திமுகவா.? தவெகவா.? ட்விஸ்ட் கொடுத்த நிர்வாகிகள்
Maruti Electric MPV: மாருதியின் முதல் மின்சார எம்பிவி ஆன் தி வே - என்ன எதிர்பார்க்கலாம்? எப்படி இருக்கும்?
Maruti Electric MPV: மாருதியின் முதல் மின்சார எம்பிவி ஆன் தி வே - என்ன எதிர்பார்க்கலாம்? எப்படி இருக்கும்?
ABP Premium

வீடியோ

Piyush Goyal on Vijay | ”விஜய் ஒரு SPOILER
TVK Ajitha | காரை மறித்த பெண் நிர்வாகி தவெகவில் இருந்து நீக்கம்?ஆக்‌ஷனில் இறங்கிய விஜய்
அதிமுக - பாஜக MEETING! MISS ஆன அண்ணாமலை! ஒதுக்கி வைக்கும் பாஜக
ஆதவ் அர்ஜூனாவுடன் ஒரே மேடையில் காங்கிரஸ் கட்சியினர்! கூட்டணிக்கான அச்சாரமா?
விஜய் சொன்னது பொய் கதை?”மக்களை அடிமையாக்கிய ஜோசப்” சர்ச்சையான KUTTY STORY உண்மை இதுதான்? | Christmas TVK Vijay Speech |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
H-1B Visa Lottery Cancel?: ‘H-1B விசா இனி இல்லை‘; புதிய நடைமுறையை கொண்டுவரும் அமெரிக்கா; அப்போ எல்லாம் போச்சா.!!
‘H-1B விசா இனி இல்லை‘; புதிய நடைமுறையை கொண்டுவரும் அமெரிக்கா; அப்போ எல்லாம் போச்சா.!!
வங்கதேசத்தை கலவர பூமியாக்கிய கொலை - தேர்தலை குலைக்க இடைக்கால அரசின் சதி? யூனஸ் காரணம்?
வங்கதேசத்தை கலவர பூமியாக்கிய கொலை - தேர்தலை குலைக்க இடைக்கால அரசின் சதி? யூனஸ் காரணம்?
OPS vs EPS: இபிஎஸ் கூட்டணியை தூக்கியெறிந்த ஓபிஎஸ்.! திமுகவா.? தவெகவா.? ட்விஸ்ட் கொடுத்த நிர்வாகிகள்
இபிஎஸ் கூட்டணியை தூக்கியெறிந்த ஓபிஎஸ்.! திமுகவா.? தவெகவா.? ட்விஸ்ட் கொடுத்த நிர்வாகிகள்
Maruti Electric MPV: மாருதியின் முதல் மின்சார எம்பிவி ஆன் தி வே - என்ன எதிர்பார்க்கலாம்? எப்படி இருக்கும்?
Maruti Electric MPV: மாருதியின் முதல் மின்சார எம்பிவி ஆன் தி வே - என்ன எதிர்பார்க்கலாம்? எப்படி இருக்கும்?
Top 10 News Headlines: உச்சத்தில் வெள்ளி, அசத்திய இஸ்ரோவின் பாகுபலி, ட்ரம்ப் மீது பாலியல் குற்றச்சாட்டு - விறுவிறுப்பான 11 மணி செய்திகள்
உச்சத்தில் வெள்ளி, அசத்திய இஸ்ரோவின் பாகுபலி, ட்ரம்ப் மீது பாலியல் குற்றச்சாட்டு - விறுவிறுப்பான 11 மணி செய்திகள்
ISRO BlueBird: விண்ணில் பாய்ந்த பாகுபலி ராக்கெட் - டவரே இல்லாமல் சிக்னல் - ப்ளூபேர்டின் இலக்கு என்ன?
ISRO BlueBird: விண்ணில் பாய்ந்த பாகுபலி ராக்கெட் - டவரே இல்லாமல் சிக்னல் - ப்ளூபேர்டின் இலக்கு என்ன?
JanaNayagan Vs Parasakthi: எஸ்கேப் ஆன சூர்யா, சிக்கித் தவிக்கும் SK? கையில் துப்பாக்கி, பாடாய்படுத்தும் பராசக்தி?
JanaNayagan Vs Parasakthi: எஸ்கேப் ஆன சூர்யா, சிக்கித் தவிக்கும் SK? கையில் துப்பாக்கி, பாடாய்படுத்தும் பராசக்தி?
Tamilnadu Round Up: தவெக - காங்., கூட்டணி? எகிறிய தங்கம், ஈபிஎஸ்க்கு நோ சொன்ன ஓபிஎஸ் - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: தவெக - காங்., கூட்டணி? எகிறிய தங்கம், ஈபிஎஸ்க்கு நோ சொன்ன ஓபிஎஸ் - தமிழ்நாட்டில் இதுவரை
Embed widget