மேலும் அறிய

”சாதிய பாகுபாட்டை களைய என்ன நடவடிக்கை எடுத்தீங்க?” ரோஹித் வெமுலா வழக்கை மேற்கோள் காட்டி உச்சநீதிமன்றம் கேள்வி 

"அதிகாரிகள் இந்த பிரச்னையை உணர்வுப்பூர்வமாக எடுத்துக்கொண்டு எதிர்காலத்தில் இதுபோன்ற இழப்பை எந்த பெற்றோரும் சந்திக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்"

ஐஐடி, ஐஐஎம் போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் தொடரும் சாதிய பாகுபாடு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. சாதிய பாகுபாட்டின் காரணமாக தலித் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர் கதையாகி வருகிறது. சமீபத்தில், ஐஐடி மும்பையில் நடந்த தலித் மாணவர் தற்கொலை பல்வேறு விதமான கேள்விகளை எழுப்பியது.

உயர் கல்வி நிறுவனங்களில் சாதிய பாகுபாடு:

இதை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக  ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்கிடையே, சாதிய பாகுபாட்டுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக, தலைமை நீதிபதியாக டி.ஒய். சந்திரசூட் பதவியேற்றதில் இருந்து, சாதிய பிரச்னைக்கு எதிராக அதிரடி கருத்துகளை தெரிவித்து வருகிறார்.

இந்த நிலையில், கல்வி நிறுவனங்களில் நிலவும் சாதிய பாகுபாட்டை களைவதற்காக எடுக்கப்பட்ட உறுதியான நடவடிக்கை குறித்து விளக்கம் அளிக்குமாறு பல்கலைக்கழக மானிய குழுவை உச்ச நீதிமன்றம் கேட்டு கொண்டுள்ளது. உயர் கல்வி நிறுவனங்களில் கல்வி பயின்று, தற்கொலை செய்து கொண்ட ரோஹித் வெமுலா, பயல் தட்வி ஆகியோரின் தாயார்கள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் இந்த கருத்தை தெரிவித்துள்ளது. 

அந்த மனுவில், "அதிகாரிகள் இந்த பிரச்னையை உணர்வுப்பூர்வமாக எடுத்துக்கொண்டு எதிர்காலத்தில் இதுபோன்ற இழப்பை எந்த பெற்றோரும் சந்திக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பல்கலைக்கழக மானியக் குழு விதிமுறைகளை அமல்படுத்துவதையும், பின்பற்றுவதையும் கண்டிப்பாக உறுதிசெய்ய ஆணையத்திற்கு உத்தரவிடுமாறு நீதிமன்றத்தை கேட்டு கொள்கிறோம்.

தலித் மாணவர்கள் எதிர்கொள்ளும் சாதிய பிரச்னைகள்:

நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் உள்பட உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர்களிடமிருந்து புகார்களைப் பெறவும் அதை தீர்த்து வைக்கவும் பிரத்யேக புகார் பிரிவை அமைக்க வேண்டும். சாதி அடிப்படையிலான பாகுபாட்டை அகற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்கள் தங்கள் இணையதளங்களில் பதிவேற்ற வேண்டும்

பன்முகத்தன்மை மற்றும் இடஒதுக்கீடு கொள்கையை நிறைவேற்றுமாறும், அதன்மூலம் பன்முகத்தன்மையை ஊக்குவிக்கும் சூழலை உருவாக்க பல்கலைக்கழகங்களை ஊக்குவிக்க தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலுக்கு (NAAC) நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். உயர் கல்வி நிறுவனங்களில் சாதி அடிப்படையிலான பாகுபாடு பரவலாக உள்ளது என்று பேராசிரியர் சுக்தியோ தோரட் தலைமையிலான குழு கண்டறிந்துள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.எஸ். போபண்ணா, எம்.எம். சுந்தரேஷ் ஆகியோர் கொண்ட அமர்வு, "பல்கலைக்கழக மானியக் குழு, ஆலோசனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் நடவடிக்கையின் போக்கை தீர்மானிக்கும் போது மனுதாரர்களுடன் கலந்தாலோசிக்க வேண்டும்" என கேட்டு கொண்டது.

பட்டியலின மற்றும் பழங்குடி சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களை முக்கிய நீரோட்டத்திற்கு கொண்டு வர பல்கலைக்கழக மானியக் குழு வகுத்துள்ள திட்டங்கள் என்னென்ன என கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம், "இந்த குழந்தைகள் எதிர்கொள்ளும் சவால்கள் பன்மடங்கு" என தெரிவித்தது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
ABP Premium

வீடியோ

Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Japan sunami alert: மீண்டும் அதிகாலையில் நில நடுக்கம்... மெகா சுனாமி அலர்ட்.? அலறி அடித்து ஓடும் மக்கள்
மீண்டும் அதிகாலையில் நில நடுக்கம்... மெகா சுனாமி அலர்ட்.? அலறி அடித்து ஓடும் மக்கள்
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
Embed widget