மேலும் அறிய

பாலின சமத்துவத்தை நிலைநாட்டிய உச்சநீதிமன்றம்.. 32 பெண் ராணுவ அதிகாரிகளுக்கு ஓய்வூதியம் வழங்க உத்தரவு

இந்திய விமானப் படையில் நிரந்தர கமிஷினில் சேர்வதற்காக கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் போராடி வந்த 32 பெண் ராணுவ வீரர்களுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

தற்போது, இந்திய ராணுவத்தில் சேர்வதற்கு மூன்று வகை ஆட்சேர்ப்பு வழிமுறைகள் உள்ளன. முன்னதாக, நிரந்தர கமிஷன், குறுகிய கால சேவை கமிஷன் வழியாக மட்டுமே ஆட்கள் சேர்க்கப்பட்டு வந்தது. சமீபத்தில்தான், அக்னிபாத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த மூன்றுக்கும் சில வித்தியாசங்கள் இருக்கின்றன. அதாவது, நிரந்தர கமிஷன் என்றால் ஓய்வு வரையில் ராணுவத்தில் பணியாற்றலாம். இரண்டாவதாக, குறுகிய கால சேவை கமிஷன் என்றால் 10 ஆண்டுகள் வரை, ராணுவத்தில் பணியாற்றலாம். ஆனால், அதில் 4 ஆண்டுகள் வரை பணி நீட்டிப்பு செய்யப்படலாம். மூன்றாவதாக, அக்னிபாத் மூலம் நான்கு ஆண்டுகள் மட்டுமே பணியாற்றலாம்.

குறுகிய கால சேவை கமிஷனில் பணிக்காலம் முடிந்தவுடன் அவர்கள் நிரந்தர கமிஷனில் சேரலாம். ஆனால், ஆண்களை நிரந்தர கமிஷினில் பணி அமர்த்துவது போல பெண்கள் பணி அமர்த்தப்படவில்லை. 

இதற்கு மத்தியில், குறுகிய கால கமிஷினில் பணியாற்றி வந்த 32 பெண் ராணுவ வீரர்கள் நிரந்தர கமிஷனில் விண்ணப்பித்திருந்தனர். ஆனால், அவர்களின் விண்ணப்பம் ஏற்கப்படவில்லை. இதை தொடர்ந்து, அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். தற்போது, அந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.

 

இந்திய விமானப் படையில் நிரந்தர கமிஷினில் சேர்வதற்காக கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் போராடி வந்த 32 பெண் ராணுவ வீரர்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்திய தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வு, "நிரந்தர கமிஷினில் அந்த பெண்களை சேர்த்து கொள்ள வேண்டும்" என உத்தரவிட்டுள்ளது. வயது வரம்பைத் தாண்டிய 32 பெண் அதிகாரிகள், குறைந்தபட்சம் தங்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர்.

பெண் ராணுவ அதிகாரிகள் சார்பில் மூத்த வழக்கறிஞர் மீனாட்சி அரோரா, வழக்கறிஞர்கள் அர்ச்சனா பதக் தவே மற்றும் சித்ரங்தா ராஸ்ட்ராவாரா ஆகியோர் ஆஜராகினர். குறுகிய கால சேவை கமிஷனில் பணியாற்றிய பெண்களை நிரந்தர கமிஷனில் பரீசிலிக்க வேண்டும் என பபிதா புனியா வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை வழக்கறிஞர்கள் மேற்கோள்காட்டி வாதம் முன்வைத்தனர்.

மனுதாரர்களில் மூன்று பெண்கள், தேசத்திற்கு சேவை ஆற்றுகையில் கணவனை இழந்தவர்கள். அவர்களும் குறுகிய கமிஷனில் அதிகாரிகளாக இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan : Bus Accident : போதை தலைக்கேறிய அரசு ஓட்டுநர் காவல் நிலையத்தில் புகுந்த பஸ் சென்னை அடையாறில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Adani TNEB: அதானி உடன் கைகோர்த்த திமுக அரசு? வெடிக்கும் லஞ்ச விவகாரம் -  அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
Adani TNEB: அதானி உடன் கைகோர்த்த திமுக அரசு? வெடிக்கும் லஞ்ச விவகாரம் - அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
Vijay vs Thirumavalavan: விஜய்க்கு வில்லனா? தளபதியா? திருமா முடிவுக்காக தி.மு.க. வெயிட்டிங்!
Vijay vs Thirumavalavan: விஜய்க்கு வில்லனா? தளபதியா? திருமா முடிவுக்காக தி.மு.க. வெயிட்டிங்!
Embed widget