மேலும் அறிய

Electoral Bonds : "அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குறது தொழில் நிறுவனங்களோட வேல இல்ல" உச்சநீதிமன்றம் காட்டம் 

அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும் நன்கொடையை வெளிப்படைத்தன்மையாக மாற்ற தேர்தல் பத்திரம் கொண்டு வரப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்து வருகிறது.

தேர்தல் பத்திர விவகாரம் தொடர் சர்ச்சையை கிளப்பி வருகிறது. அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும் நன்கொடையை வெளிப்படைத்தன்மையாக மாற்ற தேர்தல் பத்திரம் கொண்டு வரப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்து வருகிறது. ஆனால், ஜனநாயகத்துக்கு எதிராக உள்ளதாகவும் வெளிப்படைத்தன்மையற்று இருப்பதாகவும் ஊழலை ஊக்குவிப்பதாகவும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

தேர்தல் பத்திரம் என்றால் என்ன?

கடந்த 2017ஆம் ஆண்டு, நிதிநிலை அறிக்கையின்போது, அப்போதைய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, இத்திட்டத்தை அறிவித்தார். அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்க விரும்புவோர், அங்கீகரிக்கப்பட்ட ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி கிளைகளில் இருந்து தேர்தல் பத்திரங்களை பெற்ற அதன் மூலம் நன்கொடை அளிக்க தேர்தல் பத்திரம் வழிவகுத்தது.

1000 ரூபாய், 10,000 ரூபாய், 1 லட்சம் ரூபாய், 10 லட்சம் ரூபாய், 1 கோடி ரூபாய் ஆகிய விலைகளில் இந்த பத்திரங்கள் விற்கப்படுகின்றன. வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள், இந்த பத்திரத்தை வாங்கி, தங்களுக்கு விருப்பமான அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கலாம். தனிநபரோ அல்லது நிறுவனமோ, தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடை அளிக்கலாம். அரசியல் கட்சிகள், தேர்தல் பத்திரத்தை நிதியாக மாற்றி பயன்படுத்தி கொள்ளலாம்.

இதில் இருக்கும் பிரச்னை என்னவென்றால், யார், யாருக்கு நன்கொடை அளிக்கிறார் என்ற விவரம் பொதுவெளியில் வெளியிடப்படாது. எனவே, பெரு நிறுவனங்கள், தங்களுக்கு தோதான அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளித்து, அக்கட்சி ஆட்சி அமைக்கும்போது, தங்களுக்கு தேவையான வேலைகளை செய்து முடித்து கொள்வதாக குற்றச்சாட்டு எழுகிறது.

தேர்தல் பத்திரத்துக்கு எதிரான வழக்கு:

தேர்தலில் நடைபெறும் ஊழலை தேர்தல் பத்திரம் சட்டபூர்வமாக்குவதாக கூறி, தேர்தல் பத்திரத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் முக்கியத்துவத்தை கருதி, மூன்று பேர் விசாரித்து வந்த இந்த வழக்கு, ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது.

இந்திய தலைமை நீதிபதி டி. ஒய். சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, பி.ஆர். கவாய், ஜே.பி. பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்து வந்தது.

இந்த நிலையில், செப்டம்பர் 30ஆம் தேதி வரை, தேர்தல் பத்திரம் மூலம் அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடை தொடர்பான விவரங்களை 
இரண்டு வார காலத்துக்குள் சமர்பிக்க இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்து பேசிய தலைமை நீதிபதி சந்திரசூட், "அரசியல் கட்சிகளுக்கு செல்லும் நன்கொடையை ஒழுங்கப்படுத்துவே இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டது. தேர்தலின்போது, கணக்கில் வராத பணம் பயன்படுத்துவதை குறைப்பதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம். தொழில் நிறுவனங்களின் வேலை என்பது, தொழில் செய்வதே தவிர, அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவது அல்ல" என்றார்.

 

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

கேரள இலவச பேருந்து: தனியார் பேருந்துகள் வேலை நிறுத்தம்; அரசுக்கு நெருக்கடி! காரணம் என்ன?
கேரள இலவச பேருந்து: தனியார் பேருந்துகள் வேலை நிறுத்தம்; அரசுக்கு நெருக்கடி! காரணம் என்ன?
2050-ல் இந்தியாவில் அதிக சம்பளம் தரும் AI வேலைகள்: சாட்பாட் கணிப்பு!
2050-ல் இந்தியாவில் அதிக சம்பளம் தரும் AI வேலைகள்: சாட்பாட் கணிப்பு!
டெல்லி EV கொள்கை: ₹1 லட்சம் ஊக்கத்தொகை, காற்று மாசுக்கு குட்பை!
டெல்லி EV கொள்கை: ₹1 லட்சம் ஊக்கத்தொகை, காற்று மாசுக்கு குட்பை!
டெட் தேர்வு அறிவிப்பு தாமதம்: லட்சக்கணக்கான தேர்வர்களின் எதிர்காலம் கேள்விக்குறி! காரணம் என்ன?
டெட் தேர்வு அறிவிப்பு தாமதம்: லட்சக்கணக்கான தேர்வர்களின் எதிர்காலம் கேள்விக்குறி! காரணம் என்ன?

வீடியோ

Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!
12 year girl death|சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!சாக்கு மூட்டையில் சடலம்!கொடூரனை அடித்தே கொன்ற மக்கள்
Keerthana | ”ENGLISH-ல பேசுங்க” திகைத்து நின்ற மாணவி! பள்ளியில் கீர்த்தனா!எல்லை மீறும் ரீல்ஸ் மோகம்?
Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS ADMK : தவெகவில் மரியாதையே இருக்காது... வெறும் பதவி சுகத்திற்காக போயிருக்காங்க- இபிஎஸ்
தவெகவில் மரியாதையே இருக்காது... வெறும் பதவி சுகத்திற்காக போயிருக்காங்க- விளாசிய இபிஎஸ்
Seeman Slams Keerthana : ‘இதெல்லாம் என்ன? அதிமேதாவித்தனம், அத்துமீறல்’ அமைச்சர் கீர்த்தனாவிற்கு சீமான் கடும் எதிர்ப்பு..!
‘அதிமேதாவித்தனம், அத்துமீறல்’ அமைச்சர் கீர்த்தனாவிற்கு சீமான் கடும் எதிர்ப்பு!
Senthil Balaji: கைதுக்கு பயந்த செந்தில் பாலாஜி.? முன்ஜாமின் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு; அப்போ டீல் பேசுனது.?
கைதுக்கு பயந்த செந்தில் பாலாஜி.? முன்ஜாமின் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு; அப்போ டீல் பேசுனது.?
கரூர் விவகாரம்; தவெக-விடம் சட்டரீதியாக திமுக முதல் தோல்வி! சரமாரியாக டோஸ் விட்ட உச்சநீதிமன்றம்
கரூர் விவகாரம்; தவெக-விடம் சட்டரீதியாக திமுக முதல் தோல்வி! சரமாரியாக டோஸ் விட்ட உச்சநீதிமன்றம்
SC On Karur Stampede: உச்சநீதிமன்றத்தில் அரசியல் பண்றீங்களா? நீதிபதிகள் கடும் ஆவேசம் - வாபஸ் பெற்ற திமுக
உச்சநீதிமன்றத்தில் அரசியல் பண்றீங்களா? நீதிபதிகள் கடும் ஆவேசம் - வாபஸ் பெற்ற திமுக
பல்கலைக்கழக காலிப் பணியிடங்கள்: தமிழக உயர்கல்விக்கு பெரும் அச்சுறுத்தல்! அரசு கவனம் செலுத்துமா?
பல்கலைக்கழக காலிப் பணியிடங்கள்: தமிழக உயர்கல்விக்கு பெரும் அச்சுறுத்தல்! அரசு கவனம் செலுத்துமா?
நீட் கட்டணம் Refund; வங்கி கணக்கை புதுப்பிக்க இன்றே கடைசி வாய்ப்பு! எப்படி?
நீட் கட்டணம் Refund; வங்கி கணக்கை புதுப்பிக்க இன்றே கடைசி வாய்ப்பு! எப்படி?
’வாரியத் தலைவர் பதவியை பெறுவதில் போட்டா, போட்டி’ காங்கிரஸ் 2, விசிக 1 ?
’வாரியத் தலைவர் பதவிக்கு கடும் போட்டி’ காங்கிரஸ் 2, விசிக 1 ?
Embed widget