மேலும் அறிய

முன்கூட்டியே கோடை விடுமுறை... பரிசீலிக்கும் மாநில அரசு... காத்திருக்கும் மாணவர்கள்..!

கடும் வெப்பம் காரணமாக, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை, முதியவர்கள் மற்றும் சிறார்களை வெளியே செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் கேட்டுக் கொண்டுள்ளது.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பல்வேறு நகரங்களில் வெப்பம் 40 டிகிரி செல்சியஸ்-க்கு மேல் பதிவானதால் வெப்ப அலை நாட்டை உலுக்கி வருகிறது. குறிப்பாக, ராஜஸ்தான், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, ஒடிசா, பிகார் ஆகிய மாநிலங்கள் வெப்ப அலையின் தாக்கத்தால் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றன.

நாட்டை உலுக்கி வரும் வெப்ப அலை:

அடுத்த சில நாள்களுக்கு மேல்குறிப்பிடப்பட்டுள்ள மாநிலங்களில் வெப்ப அலை வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக, பிகார் பாட்னாவில் அமைந்துள்ள பள்ளிகளின் நேரத்தை மாற்றி அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. சில மாநிலங்களில், வெப்பத்தின் அளவு இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜார்க்கண்ட் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பம் 40 டிகிரி செல்சியஸ்-க்கு மேல் பதிவாகி வெப்ப அலை வீசி வருகிறது. ஏப்ரல் மாதத்தின் மத்தியில் மகாராஷ்டிராவின் 10 மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பம் 40 டிகிரி செல்சியஸ்-க்கு மேல் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக, சந்திராபூரில் 43.2 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக, தெற்கு மும்பையில் 31.6 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.

முன்கூட்டியே கோடை விடுமுறை:

மேற்கு வங்கத்தில் நிலவும் வெப்பச் சலனத்தை கருத்தில் கொண்டு பள்ளிகளுக்கு கோடை விடுமுறையை ஏப்ரல் 18ஆம் தேதியே மூன்கூட்டியே அறிவிப்பதற்கு மாநில அரசு பரிசீலித்து வருகிறது. முன்னதாக, பள்ளிகளுக்கு மே 2ஆம் தேதி முதல் கோடை விடுமுறையை மாநில அரசு அறிவித்திருந்தது. பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

அதேபோல, மேற்கு வங்கத்தில் பள்ளிகள், கல்லூரிகள் உள்பட கல்வி நிலையங்கள் அடுத்த வாரத்திற்கு மூடப்பட்டு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 12 முதல் 16 வரை, வெப்ப அலை வீசும் என அலிபூர் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொல்கத்தாவில் இன்று வெப்பநிலை 41 டிகிரி செல்சியஸை எட்டியுள்ளது. சில தெற்கு வங்காள மாவட்டங்களில் 42 டிகிரி செல்சியஸ் முதல் 44 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் எட்டியுள்ளது.

கிழக்கு மற்றும் மேற்கு பர்த்வானில் உள்ள அரசுப் பள்ளிகளில் காலையில் மட்டுமே வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. ஏப்ரல் 22ம் தேதிக்கு முன் மழை பெய்யாது என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

கடும் வெப்பம் காரணமாக, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை, முதியவர்கள் மற்றும் சிறார்களை வெளியே செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் கேட்டுக் கொண்டுள்ளது. மக்கள் அதிக தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும் வெளியே செல்லும் போது தலையை மறைக்க வேண்டும் அல்லது குடை பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உடலில் பிடிப்புகள் ஏதேனும் இருந்தாலோ, சுவாசிப்பதில் சிரமம் இருந்தாலோ மருத்துவர்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். தெருக்களில் விற்கப்படும் மற்றும் மூடாமல் வைக்கப்படும் பழங்களை சாப்பிட வேண்டாம் என்று மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Assembly Election 2026: வெளிப்படைத் தன்மையுடன் தேர்தல்; 30-க்கும் மேற்பட்ட முன்னெடுப்புகள்; தேர்தல் ஆணையத்தின் தலையாய முயற்சி
வெளிப்படைத் தன்மையுடன் தேர்தல்; 30-க்கும் மேற்பட்ட முன்னெடுப்புகள்; தேர்தல் ஆணையத்தின் தலையாய முயற்சி
Election Dates 2026: தமிழ்நாடு முதல் அசாம் வரை.. 5 மாநிலங்களுக்கு தேர்தல் எப்போது? முழு தகவல் உள்ளே
Election Dates 2026: தமிழ்நாடு முதல் அசாம் வரை.. 5 மாநிலங்களுக்கு தேர்தல் எப்போது? முழு தகவல் உள்ளே
Top 10 News Headlines: சட்டமன்ற தேர்தல் தேதி.. விமான சேவைகள் குறைப்பு..11 மணி நிகழ்வுகள் இதோ!
Top 10 News Headlines: சட்டமன்ற தேர்தல் தேதி.. விமான சேவைகள் குறைப்பு..11 மணி நிகழ்வுகள் இதோ!
TN ELECTION DATE : தமிழகமே ரெடியா.!! இன்று மாலை 4 மணிக்கு வெளியாகிறது தேர்தல் தேதி- தேர்தல் ஆணையம் அறிவிப்பு
தமிழகமே ரெடியா.!! இன்று மாலை 4 மணிக்கு வெளியாகிறது தேர்தல் தேதி- தேர்தல் ஆணையம் அறிவிப்பு
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Election Date 2026: வெளியானது அறிவிப்பு; ஏப்.23 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்.. முடிவு எப்போ? தேதி குறித்த ஆணையம்
TN Election Date 2026: வெளியானது அறிவிப்பு; ஏப்.23 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்.. முடிவு எப்போ? தேதி குறித்த ஆணையம்
Assembly Election 2026: வெளிப்படைத் தன்மையுடன் தேர்தல்; 30-க்கும் மேற்பட்ட முன்னெடுப்புகள்; தேர்தல் ஆணையத்தின் தலையாய முயற்சி
வெளிப்படைத் தன்மையுடன் தேர்தல்; 30-க்கும் மேற்பட்ட முன்னெடுப்புகள்; தேர்தல் ஆணையத்தின் தலையாய முயற்சி
Election Dates 2026: தமிழ்நாடு முதல் அசாம் வரை.. 5 மாநிலங்களுக்கு தேர்தல் எப்போது? முழு தகவல் உள்ளே
Election Dates 2026: தமிழ்நாடு முதல் அசாம் வரை.. 5 மாநிலங்களுக்கு தேர்தல் எப்போது? முழு தகவல் உள்ளே
Puducherry Election Date 2026: புதுச்சேரி தேர்தல் 2026: பரபரப்பு கிளம்பும்! ரங்கசாமி ஆட்சியா? திமுக ஆட்சியா? தேதி அறிவிப்பு!
Puducherry Election Date 2026: புதுச்சேரி தேர்தல் 2026: பரபரப்பு கிளம்பும்! ரங்கசாமி ஆட்சியா? திமுக ஆட்சியா? தேதி அறிவிப்பு!
Election Dates 2026 LIVE: சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு! தமிழகம், மற்ற மாநிலங்கள் உடனடி அப்டேட்!
Election Dates 2026 LIVE: சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு! தமிழகம், மற்ற மாநிலங்கள் உடனடி அப்டேட்!
Netanyahu Dead.? Iran Pledge: கொல்லப்பட்டாரா நெதன்யாகு.? இஸ்ரேல் நடவடிக்கையில் டவுட்.! சூளுரைத்த ஈரான்; நடக்கப்போவது என்ன.?
கொல்லப்பட்டாரா நெதன்யாகு.? இஸ்ரேல் நடவடிக்கையில் டவுட்.! சூளுரைத்த ஈரான்; நடக்கப்போவது என்ன.?
DMK alliance : திமுக கூட்டணியில் இருந்து பல்டி அடித்த முக்கிய கட்சி.! தொகுதி பங்கீட்டில் திடீர் ட்விஸ்ட்
திமுக கூட்டணியில் இருந்து பல்டி அடித்த முக்கிய கட்சி.! தொகுதி பங்கீட்டில் திடீர் ட்விஸ்ட்
Election code of conduct : ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணம் கொண்டு சென்றால் பறிமுதல்.! இன்று மாலை முதல் அமல்- பொதுமக்களே அலர்ட்
ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணம் கொண்டு சென்றால் பறிமுதல்.! இன்று மாலை முதல் அமல்- பொதுமக்களே அலர்ட்
Embed widget