மேலும் அறிய

ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை ஏலம் விடக் கோரி மனு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடமிருந்து சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை ஏலம் விடக்கோரி உச்ச நீதிமன்றத்திற்கு பெங்களூருவைச் சேர்ந்த ஆர்.டி.ஐ ஆர்வலர் நரசிங்க மூர்த்தி மனு.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடமிருந்து சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட  பல கோடி மதிப்பிலான பொருட்களை ஏலம் விடக்கோரி உச்ச நீதிமன்றம், கர்நாடக உயர் நீதிமன்றம், பெங்களூரு முதன்மை உரிமையியல் நீதிமன்றத்திற்கு   பெங்களூருவைச் சேர்ந்த ஆர்.டி.ஐ ஆர்வலர் நரசிங்க மூர்த்தி என்பவர் மனு அளித்துள்ளார். 

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் செல்வி.ஜெ. ஜெயலலிதா அவர்கள், 1996ம் ஆண்டில் வருமானத்திற்கு மேலாக சொத்து குவித்ததிற்கு எதிராக எழுந்த வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார். இவருடன் இவரது தோழி சசிகலா மற்றும் அவரது உறவினர் இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அப்போது அவர்களிடமிருந்து பல கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அப்போதைய வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பல கோடி மதிப்பிலான பொருட்கள் பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் வைக்கப்பட்டுள்ளது. அந்த பொருட்களை ஏலத்தில் விட பெங்களூருவைச் சேர்ந்த ஆர்.டி.ஐ ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி என்பவர் உச்ச நீதிமன்றம், கர்நாடக உயர் நீதிமன்றம் மற்றும் பெங்களூரு முதன்மை உரிமையியல் நீதிமன்றத்திற்கு மனு அளித்துள்ளார். 

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிடம் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை ஏலம் விட்டால் அவரது ஆதரவாளர்கள் ஏலத்தில் மும்மறமாக கலந்து கொள்வர். இதனால் பொருட்கள் யாரும் எதிபார்க்காத விலைக்கு ஏலம் போகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

1991 முதல் 1996 வரை தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த செல்வி ஜெயலலிதா மாநிலம் முழுவதும் பல நிலங்களை வாங்கினார். ஜெயலலிதாவின் செல்வாக்கினைப் பயன்படுத்தி அவரது தோழி சசிகலா, சசிகலாவின்  உறவினர் இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோறும் தமிழகத்தின் பல பகுதிகளில் சொத்துக்கள் வாங்கி குவித்தனர். ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட 800 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் நகைகள், 28 கிலோ தங்க நகைகள், 750 ஜோடி காலணிகள், 10500 புடவைகள், 91 கைக்கடிகாரங்கள் மற்றும் விலையுர்ந்த பல பொருட்கள் ஏலத்தில் விடலாம். நரசிம்ம மூர்த்தி மனுவால் இப்பொருட்கள் ஏலத்திற்கு வரும்பட்சத்தில் ஜெயலலிதாவின் அபிமானிகள், அதிமுக பொருப்பாளர்கள், அடிமட்டத் தொண்டர்கள் என அனைவரும் கலந்து கொண்டு போட்டிபோட்டு பொருட்களை வாங்குவர் எனவும் எதிர்பார்கலாம்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
Tamilnadu Roundup: இன்று மதுரை முதலீட்டாளர்கள் மாநாடு, ஈரோட்டில் தவெக மாநாடு, சென்னையில் 100 இண்டிகோ விமானங்கள் ரத்து - 10 மணி செய்திகள்
இன்று மதுரை முதலீட்டாளர்கள் மாநாடு, ஈரோட்டில் தவெக மாநாடு, சென்னையில் 100 இண்டிகோ விமானங்கள் ரத்து - 10 மணி செய்திகள்
மதுரை மக்களே மகிழ்ச்சியான செய்தி.. ரூ.37 ஆயிரம் கோடி முதலீடு, 57 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - முழு விவரம் !
மதுரை மக்களே மகிழ்ச்சியான செய்தி.. ரூ.37 ஆயிரம் கோடி முதலீடு, 57 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - முழு விவரம் !
Ramadoss Statement: அன்புமணி தலைவர் இல்லை; கட்சியை பறிக்கும் சதித் திட்டம் முறியடிப்பு - பாமக நிறுவனர் ராமதாஸ்
அன்புமணி தலைவர் இல்லை; கட்சியை பறிக்கும் சதித் திட்டம் முறியடிப்பு - பாமக நிறுவனர் ராமதாஸ்
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
Tamilnadu Roundup: இன்று மதுரை முதலீட்டாளர்கள் மாநாடு, ஈரோட்டில் தவெக மாநாடு, சென்னையில் 100 இண்டிகோ விமானங்கள் ரத்து - 10 மணி செய்திகள்
இன்று மதுரை முதலீட்டாளர்கள் மாநாடு, ஈரோட்டில் தவெக மாநாடு, சென்னையில் 100 இண்டிகோ விமானங்கள் ரத்து - 10 மணி செய்திகள்
மதுரை மக்களே மகிழ்ச்சியான செய்தி.. ரூ.37 ஆயிரம் கோடி முதலீடு, 57 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - முழு விவரம் !
மதுரை மக்களே மகிழ்ச்சியான செய்தி.. ரூ.37 ஆயிரம் கோடி முதலீடு, 57 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - முழு விவரம் !
Ramadoss Statement: அன்புமணி தலைவர் இல்லை; கட்சியை பறிக்கும் சதித் திட்டம் முறியடிப்பு - பாமக நிறுவனர் ராமதாஸ்
அன்புமணி தலைவர் இல்லை; கட்சியை பறிக்கும் சதித் திட்டம் முறியடிப்பு - பாமக நிறுவனர் ராமதாஸ்
Watch Video: கோலியை மதிக்காத குட்டி கோலி.. தீயாய் பரவும் வீடியோ - லெஜண்டை அசிங்கப்படுத்திய ராகுல்?
Watch Video: கோலியை மதிக்காத குட்டி கோலி.. தீயாய் பரவும் வீடியோ - லெஜண்டை அசிங்கப்படுத்திய ராகுல்?
Goa Cylinder Blast: அடக்கடவுளே..! நைட் க்ளப்பில் வெடித்த சிலிண்டர் - தீ விபத்தில் 23 பேர் பலியான சோகம்
Goa Cylinder Blast: அடக்கடவுளே..! நைட் க்ளப்பில் வெடித்த சிலிண்டர் - தீ விபத்தில் 23 பேர் பலியான சோகம்
இளைஞர்களுக்கு ஜாக்பாட்.!  56,768 புதிய வேலைவாய்ப்பு... ரூ.36,860.36 கோடி முதலீடு- அசத்தும் தமிழக அரசு
இளைஞர்களுக்கு ஜாக்பாட்.! 56,768 புதிய வேலைவாய்ப்பு... ரூ.36,860.36 கோடி முதலீடு- அசத்தும் தமிழக அரசு
Gautam Gambhir: கப் வேணும்னா கோலி, ரோகித் இருக்கணும்.. பேட்டிங்கில் சொன்ன சேதி, கம்பீர் சொல்வது என்ன?
Gautam Gambhir: கப் வேணும்னா கோலி, ரோகித் இருக்கணும்.. பேட்டிங்கில் சொன்ன சேதி, கம்பீர் சொல்வது என்ன?
Embed widget