Sabarimala Temple: ஓணம் வந்தல்லோ.. சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு...யாருக்கெல்லாம் அனுமதி?
திருவோணம் பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.
![Sabarimala Temple: ஓணம் வந்தல்லோ.. சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு...யாருக்கெல்லாம் அனுமதி? Sabarimala Temple onam festival sabarimala temple today opened evening 5 Sabarimala Temple: ஓணம் வந்தல்லோ.. சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு...யாருக்கெல்லாம் அனுமதி?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/27/a6bb5e16eacef8f306ee82025424d9711693107064983572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Sabarimala Temple: திருவோணம் பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயில்:
கேரள மாநிலம் பத்தினம்திட்டாவில் அமைந்துள்ளது சபரிமலை. உலகப்புகழ்பெற்ற சபரிமலை கோயிலில் ஐயப்பனை தரிசனம் செய்ய ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். சபரிமலை அய்யப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகரஜோதி பூஜையை தவிர்த்து ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட நாட்களுக்கு நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படும்.
கார்த்திகை மாதத்தில் மட்டும் முதல் நாள் தொடங்கி மண்டல பூஜை காலம் வரை 41 நாட்கள் ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டிருக்கும். மார்கழி மாதத்திலும் தை மாதத்திலும் மகர விளக்கு பூஜைக்காக கோயில் நடை திறக்கப்பட்டிருக்கும். பங்குனி மாத ஆராட்டு விழாவும், சித்திரை மாத விஷூகனி காணும் விழாவும் கோயிலில் சிறப்பாக நடைபெறும்.
இன்று நடை திறப்பு:
கேரளாவில் கொண்டாட்டப்படும் முக்கிய பண்டிகையான ஓணம் கடந்த 20ஆம் தேதி தொடங்கியது. வரும் 29ஆம் தேதி திருவோணம் கொண்டாடப்படுகிறது. ஓணம் கொண்டாட்டப்படும் 10 நாட்ககளும் அம்மாநிலம் களைகட்டி காணப்படும். இந்நிலையில், திருவோணம் பண்டிக்கைக்காக, சபரிமலை கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையை திறந்து வைக்கிறார்.
இன்று மாலை நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடந்ததும் நடை அடைக்கப்படும். பின்னர் ஆகஸ்ட் 28ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை 5 நாட்கள் கோயிலில் சிறப்பு பூஜைகளுடன் நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாரதனை, புஷ்பாபிஷேகம், களபாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை நடைபெறும். தினசரி ஆலயத்தில் அதிகாலை 5 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது.
யாருக்கெல்லாம் அனுமதி:
சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். முன்பதிவு செய்யும் அனைவருக்கும் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் ஆன்லைனில் முன்பதிவு செய்யாத பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கும் வகையில், நிலக்கல் மற்றும் பம்பையில் உடனடி முன்பதிவு செய்யும் வசதியும் செய்யப்பட்டுள்ளது என தேவசம்போர்டு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் https://sabarimalaonline.org/#/login எனும் இணையதள முகவரியில் தரிசனத்திற்கான முன்பதிவை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)