மேலும் அறிய

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: காத்திருப்பு, தரிசனம், சிறப்பு ஏற்பாடுகள்! முழு விவரம் இதோ!

சபரிமலையில் இந்த ஆண்டுக்கான மண்டல, மகர விளக்கு பூஜைக்காக கோயில் நடை நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது.

பிற கோயில்கள் போல ஐயப்பன் கோயில் அனைத்து நாட்களும் திறக்கப்படாது. கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றவையாகும். இந்த கோயிலுக்குச் செல்ல மாலை அணிந்து கடுமையான விரதம் இருந்து மலையேறி பக்தர்கள் ஐயப்பன் சாமியை வழிபடுவார்கள். ஒவ்வொரு மாதத்தின்  5  நாட்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை திறக்கப்படுவது வழக்கம். சபரிமலையில் ஐயப்பனுக்கு 41 நாட்கள் நடைபெற்ற சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் தங்க அங்கி அணிவிக்கப்பட்டு மண்டலபூஜை நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சரண கோஷத்துடன் தரிசனம் செய்வார்கள்.

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: காத்திருப்பு, தரிசனம், சிறப்பு ஏற்பாடுகள்! முழு விவரம் இதோ!

இதையொட்டி ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தையொட்டி மண்டல மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை கோயிலில் நடை திறக்கப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான மண்டல, மகர விளக்கு பூஜைக்காக கோயில் நடை நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்ப சாமி கோயிலில் 41 நாட்கள் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். ஐயப்ப பக்தர்கள் விரதம் இருந்து, கருப்பு உடை அணிந்து இருமுடி கட்டி தலையில் சுமந்து பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்ய மணிக்கணக்கில் வரிசையில் நின்று சரண கோஷம் முழங்க 18 படி ஏறி ஐயப்பனை இன்று தரிசனம் செய்தனர்.

அதிகாலை முதலே, தரிசனத்துக்காக ஏராளமான பக்தர்கள் சபரிமலையில் குவிந்தனர். அதிகாலை 3 மணிக்கு கோயில் திறக்கப்பட்டபோது, நடைபாதை மற்றும் புனித படிகள் முழுவதும் தரிசனம் செய்ய பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்றனர். சுமார் 6 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். கருவறை திறக்கப்பட்ட பிறகு, நிர்மால்ய அபிஷேகம், கணபதி ஹோமம் மற்றும் நெய் அபிஷேகம் போன்ற சடங்குகள் நடத்தப்பட்டன. கோயில் 41 நாட்களும் மதியம் 1 மணிக்கு மூடப்பட்டு, மீண்டும் 3 மணிக்கு திறக்கப்பட்டு, இரவு 11 மணிக்கு ஐயப்பனின் தாலாட்டு பாடலான ஹரிவராசனம் பாடலுடன் மூடப்படும். தினமும் 18 மணி நேரம் நடை திறந்திருக்கும். நடை சார்த்தப்பட்டிருக்கும் சமயத்திலும் பக்தர்கள் 18-ம் படிவழியாக அனுமதிக்கப்படுகின்றனர்.


சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: காத்திருப்பு, தரிசனம், சிறப்பு ஏற்பாடுகள்! முழு விவரம் இதோ!

சபரிமலை கோயிலில் டிசம்பர் 27-ந் தேதி மண்டல பூஜை நடைபெற உள்ளது. அன்று இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும். அதன் பிறகு மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பர் 30-ந் தேதி நடை மீண்டும் திறக்கப்படும். ஜனவரி 14-ந்தேதி மகரவிளக்கு பூஜை நடைபெறும். மகரவிளக்கு ஜோதி திருவிழா டிசம்பர் 30-ந்தேதி முதல் ஜனவரி 19-ந் தேதி வரை நடைபெறும். சபரிமலை பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தினமும் கோயிலில் 90 ஆயிரம் பக்தர்கள் வரை அனுமதிக்கப்பட உள்ளனர்.

இதில் 70 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் மூலமாகவும், 20 ஆயிரம் பக்தர்கள் ஸ்பாட் புக்கிங் மூலமாகவும் அனுமதிக்கப்பட உள்ளனர். தமிழ்நாடு ஐயப்ப பக்தர்களுக்கு உதவுவதற்காக தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்திலும், கேரள மாநில எல்லையான களியக்காவிளையிலும், சபரிமலையிலும்  24 மணி நேரமும் இயங்கும் தகவல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

விஜய்யோடு கை கோர்க்கும் செங்கோட்டையன்.! ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் சொன்ன முக்கிய தகவல்
விஜய்யோடு கை கோர்க்கும் செங்கோட்டையன்.! ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் சொன்ன முக்கிய தகவல்
TN Weather Update: இன்று உருவாகிறது சென்யார் புயல் - எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: இன்று உருவாகிறது சென்யார் புயல் - எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? தமிழக வானிலை அறிக்கை
IND Vs SA Test: சரித்திரம் படைக்குமா? அவமானத்தை தவிர்க்குமா? 522 ரன்கள் தேவை? கடைசி நாளில் இந்திய அணி
IND Vs SA Test: சரித்திரம் படைக்குமா? அவமானத்தை தவிர்க்குமா? 522 ரன்கள் தேவை? கடைசி நாளில் இந்திய அணி
T20 world cup 2026: டி20 உலகக் கோப்பை அட்டவணை - எங்கு? எப்போது? யார் யாருடன் மோதல்? இந்தியா - பாக்., போட்டி
T20 world cup 2026: டி20 உலகக் கோப்பை அட்டவணை - எங்கு? எப்போது? யார் யாருடன் மோதல்? இந்தியா - பாக்., போட்டி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கோவைக்கு அடுத்த பெருமை உலகத்தரத்தில் செம்மொழி பூங்கா திறந்து வைத்த முதல்வர் | Coimbatore | Semmozhi Poonga
தீவிரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் வெடித்து சிதறிய ராணுவ பகுதி பாகிஸ்தானில் பயங்கரம்  | Pakistan Peshawar Blast
தவெகவில் செங்கோட்டையன்? Deal- ஐ முடித்த விஜய் ஆபரேஷன் கொங்கு மண்டலம் | TVK | Sengottaiyan Joins TVK
நேருக்கு நேர் மோதிய 2 பஸ்கள் துடிதுடித்து போன உயிர்கள் சோகத்தில் உறைந்த தென்காசி பகீர் காட்சி |Tenkasi Bus Accident
”SPEAKER பதவி எனக்கு தான்” நிதிஷ் GAME STARTS பாஜக வைக்கும் செக் | Bihar | NDA | Nitish Kumar

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய்யோடு கை கோர்க்கும் செங்கோட்டையன்.! ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் சொன்ன முக்கிய தகவல்
விஜய்யோடு கை கோர்க்கும் செங்கோட்டையன்.! ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் சொன்ன முக்கிய தகவல்
TN Weather Update: இன்று உருவாகிறது சென்யார் புயல் - எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: இன்று உருவாகிறது சென்யார் புயல் - எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? தமிழக வானிலை அறிக்கை
IND Vs SA Test: சரித்திரம் படைக்குமா? அவமானத்தை தவிர்க்குமா? 522 ரன்கள் தேவை? கடைசி நாளில் இந்திய அணி
IND Vs SA Test: சரித்திரம் படைக்குமா? அவமானத்தை தவிர்க்குமா? 522 ரன்கள் தேவை? கடைசி நாளில் இந்திய அணி
T20 world cup 2026: டி20 உலகக் கோப்பை அட்டவணை - எங்கு? எப்போது? யார் யாருடன் மோதல்? இந்தியா - பாக்., போட்டி
T20 world cup 2026: டி20 உலகக் கோப்பை அட்டவணை - எங்கு? எப்போது? யார் யாருடன் மோதல்? இந்தியா - பாக்., போட்டி
Vande Bharat Express: வந்தே பாரத் மோசம்.. ரயிலை உருவாக்கியவர் முதல்முறை பயணம் செய்து அதிருப்தி!
Vande Bharat Express: வந்தே பாரத் மோசம்.. ரயிலை உருவாக்கியவர் முதல்முறை பயணம் செய்து அதிருப்தி!
Tata Sierra vs Hyundai Creta: க்ரேட்டாவை விட பெரிய காரா சியாரா? விலை, அம்சங்களில் சம்பவம் செய்த டாடா - பெஸ்ட் எஸ்யுவி?
Tata Sierra vs Hyundai Creta: க்ரேட்டாவை விட பெரிய காரா சியாரா? விலை, அம்சங்களில் சம்பவம் செய்த டாடா - பெஸ்ட் எஸ்யுவி?
Tirunelveli: வீட்டுல ஒரு ரூபாய் கூட இல்ல.. இப்படி பண்ணாதீங்க.. ஓனருக்கு கடிதம் எழுதிய திருடன்!
Tirunelveli: வீட்டுல ஒரு ரூபாய் கூட இல்ல.. இப்படி பண்ணாதீங்க.. ஓனருக்கு கடிதம் எழுதிய திருடன்!
1 லட்சம் பேருக்கு வேலை.. 43 ஆயிரம் கோடி முதலீடு.. 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மாஸ் காட்டிய தமிழக அரசு
1 லட்சம் பேருக்கு வேலை.. 43 ஆயிரம் கோடி முதலீடு.. 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மாஸ் காட்டிய தமிழக அரசு
Embed widget