மேலும் அறிய

மணிப்பூரில் இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்த ராகுல் காந்தி!

மணிப்பூர் சூரசந்த்பூர் மாவட்டத்தில் நிவாரண முகாமுக்கு சென்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து உரையாடினார்.

மணிப்பூரில் இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். சூரசந்த்பூர் மாவட்டத்தில் உள்ள நிவாரண முகாமுக்கு சென்ற அவர், அங்குள்ள மக்களை சந்தித்து உரையாடினார்.

பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்த ராகுல் காந்தி: கடந்த 2023ஆம் ஆண்டு, மே மாதம் முதல் அங்கு கலவரங்களும் வன்முறை சம்பவங்களும் நிகழ்ந்து வருகின்றன. இனக்கலவரம் வெடித்த பிறகு, மூன்றாவது முறையாக ராகுல் காந்தி அங்கு சென்றுள்ளார. கலவரம் வெடித்த சில வாரங்களிலேயே அவர் சென்றிருந்தார்.

இதையடுத்து, பாரத் ஜோடோ நியாய யாத்திரையின்போது, கடந்த ஜனவரி மாதம் இரண்டாவது முறையாக சென்றார். மணிப்பூரில் சென்று இறங்கியதுமே, ஜிரிபாம் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமை பார்வையிட்டார்.

ராகுல் காந்தியின் பயணம் குறித்து பேசிய மணிப்பூர் மாநில காங்கிரஸ் தலைவர் கெய்ஷாம் மேகசந்திரா, "ஜிரிபாமில் உள்ள மக்கள், தாங்களுக்கு நேர்ந்தவற்றை ராகுல் காந்தியிடன் கூறினார்கள். அவர்களுக்கு என்ன தேவை என்பதையும் கேட்டறிந்தார்.

பிரதமரோ, முதலமைச்சரோ தங்களைப் பார்க்க வரவில்லை என்று ஒரு சிறுமி ராகுல் காந்தியிடம் கூறினார். இந்த விஷயத்தை நாடாளுமன்றத்தில் எழுப்ப அவரை வலியுறுத்தினார்கள். ஜிரிபாமில் ராகுல் காந்தியை பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் வந்திருந்தனர். அவர்களில் பலர் அவருடன் அழுதபடியே பேசினர்.

ஜிரிபாமில் இருந்து, அசாமில் உள்ள சில்சார் வழியாக இம்பால் விமான நிலையத்திற்கு வந்து, சாலை வழியாக சுராசந்த்பூர் மாவட்டம் துய்போங் கிராமத்தில் உள்ள நிவாரண முகாமை வந்தடைந்தார்.

மக்களுக்கு ஆதரவாக இருப்பதற்கும் களத்தில் நிலவும் நிலைமையை ஆராய்வதற்காகவும் ராகுல் காந்தி மணிப்பூர் வந்துள்ளார். சமீபத்திய வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களின் கவலைகளை நிவர்த்தி செய்வதற்கான கட்சியின் உறுதிப்பாட்டை அவரது வருகை பிரதிபலிக்கிறது" என்றார்.

இதையடுத்து, இம்பாலில் மணிப்பூர் ஆளுநர் அனுசுயா உய்கேயை ராகுல் காந்தி சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். கடந்தாண்டு மே மாதம் 3ஆம் தேதி வெடித்த இனக்கலவரத்தால் இதுவரை 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”இந்த நாளில் தான் உதயநிதி துணை முதல்வர் அறிவிப்பு” தேதியை குறிப்பிட்ட அமைச்சர்..!
”இந்த நாளில் தான் உதயநிதி துணை முதல்வர் அறிவிப்பு” தேதியை குறிப்பிட்ட அமைச்சர்..!
ஒரு பள்ளிகள் விடமால் ஆய்வு செய்வேன்- எச்சரித்த ஆட்சியர்....!
”எஸ்.பி.வேலுமணிக்காக களமிறங்கிய ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப்” தமிழக அரசு மீது பரபரப்பு புகார்..!
”எஸ்.பி.வேலுமணிக்காக களமிறங்கிய ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப்” தமிழக அரசு மீது பரபரப்பு புகார்..!
சென்னையை அதிர வைத்த சூட்கேஸ் கொலை.. பெண்ணை வீட்டிற்கு வரவைத்த இளைஞர்.. நடந்தது என்ன ?
சென்னையை அதிர வைத்த சூட்கேஸ் கொலை.. பெண்ணை வீட்டிற்கு வரவைத்த இளைஞர்.. நடந்தது என்ன ?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Trichy bike stunt apology : வம்பிழுத்த இளைஞர்! சுளுக்கெடுத்த வருண் SP! திருச்சியில் பரபரப்புTirupati laddu animal fat : ”திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு” சந்திரபாபு பகீர்Kuraishi on Manimegalai Priyanka : Govt Bus Damage : படிக்கட்டு உடைந்த பஸ்” உயிரோடு விளையாடலாமா” ஆத்திரத்தில் பயணிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”இந்த நாளில் தான் உதயநிதி துணை முதல்வர் அறிவிப்பு” தேதியை குறிப்பிட்ட அமைச்சர்..!
”இந்த நாளில் தான் உதயநிதி துணை முதல்வர் அறிவிப்பு” தேதியை குறிப்பிட்ட அமைச்சர்..!
ஒரு பள்ளிகள் விடமால் ஆய்வு செய்வேன்- எச்சரித்த ஆட்சியர்....!
”எஸ்.பி.வேலுமணிக்காக களமிறங்கிய ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப்” தமிழக அரசு மீது பரபரப்பு புகார்..!
”எஸ்.பி.வேலுமணிக்காக களமிறங்கிய ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப்” தமிழக அரசு மீது பரபரப்பு புகார்..!
சென்னையை அதிர வைத்த சூட்கேஸ் கொலை.. பெண்ணை வீட்டிற்கு வரவைத்த இளைஞர்.. நடந்தது என்ன ?
சென்னையை அதிர வைத்த சூட்கேஸ் கொலை.. பெண்ணை வீட்டிற்கு வரவைத்த இளைஞர்.. நடந்தது என்ன ?
Breaking News LIVE : சூர்யா நடிக்கும் கங்குவா படத்தின் ரிலீஸ் தேதி நவம்பர் 14 என அறிவிப்பு
Breaking News LIVE : சூர்யா நடிக்கும் கங்குவா படத்தின் ரிலீஸ் தேதி நவம்பர் 14 என அறிவிப்பு
”தொழிலாளர்களை விவசாயிகளாக மாற்றி புரட்சி செய்த புது ஆறு” இப்போ வயசு 91ங்க!!!
”தொழிலாளர்களை விவசாயிகளாக மாற்றி புரட்சி செய்த புது ஆறு” இப்போ வயசு 91ங்க!!!
7 ஆண்டு குழந்தை இல்லாமல் பெற்ற குழந்தைகள்; 4 சிறுவர்கள் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சோகம்
7 ஆண்டு குழந்தை இல்லாமல் பெற்ற குழந்தைகள்; 4 சிறுவர்கள் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சோகம்
CM Stalin: சாத்தியம் இல்லாதது; பாஜக ஈகோவை திருப்திப்படுத்தவே ஒரே நாடு ஒரே தேர்தல் முறை- முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு
CM Stalin: சாத்தியம் இல்லாதது; பாஜக ஈகோவை திருப்திப்படுத்தவே ஒரே நாடு ஒரே தேர்தல் முறை- முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு
Embed widget