மேலும் அறிய

Rangasamy CM | கொரோனாவில் இருந்து மீண்ட முதல்வர் ரங்கசாமி புதுவை திரும்பினார்..

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சென்னையில் சிகிச்சை பெற்று வந்த பாண்டிச்சேரி முதல்வர் ரங்கசாமி இன்று சிகிச்சை முடிந்து பாண்டிச்சேரி திரும்பினார்.

கடந்த ஆண்டு பரவிய கொரோனா முதல் அலையை காட்டிலும் தற்போது பரவி வரும் கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக நாடு முழுவதம் பலரும் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலையில், தமிழகத்திற்கு சட்டசபை தேர்தல் நடைபெற்ற அதே நாளான ஏப்ரல் 6-ஆம் தேதி புதுவைக்கும் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் அந்த மாநிலத்தில் முன்னாள் முதல்வர் ரங்கசாமியின் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி, பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.


Rangasamy CM | கொரோனாவில் இருந்து மீண்ட முதல்வர் ரங்கசாமி புதுவை திரும்பினார்..

மொத்தம் 30 தொகுதியை உள்ளடக்கிய புதுச்சேரியில் பெரும்பான்மையான இடங்களை என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றியது. இதையடுத்து, அந்த மாநிலத்தின் முதல்-அமைச்சராக என்.ஆர்.ரங்கசாமி கடந்த 6-ஆம் தேதி பதவியேற்றார். இந்த நிலையில், அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதன்காரணமாக அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் கடந்த 9-ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில், கொரோனா தொற்றில் இருந்து மீண்ட புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி இன்று சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு திரும்பினார். கார் மூலமாகவே சென்னையில் இருந்து புதுவை சென்ற அவருக்கு, தமிழகம் – புதுவை எல்லையில் அவரது கட்சி தொண்டர்களும், நிர்வாகிகளும் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர், முதல்வர் ரங்கசாமி தனது வீட்டிலே தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார்.


Rangasamy CM | கொரோனாவில் இருந்து மீண்ட முதல்வர் ரங்கசாமி புதுவை திரும்பினார்..

புதுவை மாநிலத்தில் முதல்-அமைச்சர் ரங்கசாமி மட்டுமே பொறுப்பு ஏற்றுக்கொண்டுள்ளார். தேர்தலில் வெற்றிபெற்ற பிற எம்.எல்.ஏ.க்கள் யாரும் இதுவரை பதவியேற்கவில்லை. மேலும், என்.ஆர்.காங்கிரஸ்., பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணியில் உள்ளதால் அமைச்சர்கள் பட்டியலும் இதுவரை தயாராகவில்லை. தற்போதுவரை அந்த மாநிலத்தின் கொரோனா தடுப்புப்பணிகளை மாநில ஆளுநரான தமிழிசை சவுந்திரராஜன் கண்காணித்து வருகிறார். இதனால், விரைவில் அமைச்சர்கள் பதவியேற்பு நடைபெற்று, நிவாரண உதவிகள் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
Iran Erfan Soltani: ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
Part-time teachers salary: அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
TRB அலட்சியம் காட்டக்கூடாது! ஆசிரியர் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்
TRB அலட்சியம் காட்டக்கூடாது! ஆசிரியர் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்
ABP Premium

வீடியோ

’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா
Thackeray Vs Tamils | ”லுங்கியை கழட்டி ஓடவிடுவேன்” தமிழர்களுக்கு எதிரான தீ.. பற்றவைத்த பால் தாக்ரே!
H.ராஜா ARREST! போலீசாருடன் வாக்குவாதம்! ”உங்க வண்டில ஏன் ஏறணும்”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
Iran Erfan Soltani: ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
Part-time teachers salary: அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
TRB அலட்சியம் காட்டக்கூடாது! ஆசிரியர் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்
TRB அலட்சியம் காட்டக்கூடாது! ஆசிரியர் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்
iPhone 17 Price Drop: மக்களே முந்துங்க.!! அதிரடி சலுகை பெறும் ஐபோன் 17; இவ்ளோ விலை குறைவா.? எப்போ, எங்க தெரியுமா.?
மக்களே முந்துங்க.!! அதிரடி சலுகை பெறும் ஐபோன் 17; இவ்ளோ விலை குறைவா.? எப்போ, எங்க தெரியுமா.?
Iran Crisis: ஹார்முஸ் ஜலசந்தி..! ஈரான் கைவைத்தால் என்ன நடக்கும்? உலகின் எண்ணெய் குழாய்க்கு ஆபத்து?
Iran Crisis: ஹார்முஸ் ஜலசந்தி..! ஈரான் கைவைத்தால் என்ன நடக்கும்? உலகின் எண்ணெய் குழாய்க்கு ஆபத்து?
தண்டவாளம் மீது விழுந்த கிரேன்.. தூக்கி வீசப்பட்ட ரயில்.. 22 பேர் சம்பவ இடத்திலேயே பலி
தண்டவாளம் மீது விழுந்த கிரேன்.. தூக்கி வீசப்பட்ட ரயில்.. 22 பேர் சம்பவ இடத்திலேயே பலி
Chennai AQI: அடங்காத சென்னையன்ஸ்.. பனியுடன் சேர்ந்து சுத்துப்போட்ட போகி புகை.. மூச்சடைக்கும் தலைநகர்
Chennai AQI: அடங்காத சென்னையன்ஸ்.. பனியுடன் சேர்ந்து சுத்துப்போட்ட போகி புகை.. மூச்சடைக்கும் தலைநகர்
Embed widget