மேலும் அறிய

Presidential Polls 2022: இந்தியாவின் அடுத்த ஜனாதிபதி யார்? இன்று வாக்கு எண்ணிக்கை! நடைமுறை என்ன? முடிவு எப்போது?

குடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 11 மணி முதல் எண்ணப்படும்.

இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் திங்கட்கிழமை நடைபெற்றது. இந்தத் தேர்தலில் ஆளும் பாஜக சார்பில் திரௌபதி முர்மு மற்றும் எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் களமிறங்கியிருந்தனர். இந்தியா முழுவதும் சுமார் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றம் உட்பட 31 இடங்களில் இந்தத் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் நேற்று முதல் டெல்லிக்கு கொண்டு வரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

இந்நிலையில் இன்று காலை குடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளன. இந்த வாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெறுபவர் இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவராக வரும் 25ஆம் தேதி பதவியேற்க உள்ளார். இதனால் குடியரசுத் தலைவர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

வாக்கு எண்ணும் முறை:

குடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 11 மணி முதல் எண்ணப்பட உள்ளன. முதலில் நாடாளுமன்ற எம்பிக்கள் பதிவு செய்த வாக்குகள் எண்ணப்படும். அதன்பின்னர் வரிசைப்படி உள்ள முதல் 10 மாநிலங்களின் எம்.எல்.ஏக்கள் பதிவு செய்திருந்த வாக்குகள் எண்ணப்படும். அதன்பின்னர் அடுத்த 10 மாநிலங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். இப்படி அனைத்து மாநிலங்கள் சட்டப்பேரவையில் பதிவான வாக்குகள் அனைத்தும் மாலைக்குள் எண்ணப்பட்டு இறுதி முடிவுகள் அறிவிக்கப்படும்.

இந்நிலையில் பாஜக சார்பில் களமிறங்கியுள்ள வேட்பாளரான திரெளபதி முர்முவுக்கே வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது

முதல் பழங்குடியின வேட்பாளர் திரௌபதி முர்மு:

இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜகவின் ஆதரவு பெற்ற வேட்பாளராக திரௌபதி முர்மு களமிறங்கியுள்ளார். ஒடிசா மாநிலத்தின் மையூர்கஞ் மாவட்டத்தில் சந்தால் என்ற பழங்குடியின வகுப்பில் தௌரபதி முர்மு பிறந்தார். இவருடைய தந்தை கிராம் குழுவின் தலைவராக இருந்தார். இவர் சிறுவயதில் மிகவும் கடினமான சூழல்களை எதிர்கொண்டு படிப்பை முடித்தார். 1979 ஆண்டு முதல் 1983ஆம் ஆண்டு வரை இவர் கிளர்காக அரசுத் துறையில் பணியாற்றினார். 

 


Presidential Polls 2022: இந்தியாவின் அடுத்த ஜனாதிபதி யார்? இன்று வாக்கு எண்ணிக்கை! நடைமுறை என்ன?  முடிவு எப்போது?

அதன்பின்னர் தன்னுடைய சொந்த காரணங்களுக்காக அந்தப் பணியை ராஜினாமா செய்தார். அதன்பின்னர் இவர் ஒரு பள்ளியில் ஆசிரியராக பணிப்புரிந்தார். அப்போது இவர் சம்பளமே வாங்காமல் அப்பள்ளியில் வேலை செய்தார். அதற்கு அவர்,”நான் செய்வது வேலையில்லை அது ஒரு பொது சேவை. என்னுடைய குடும்பத்தை பார்த்து கொள்ள என்னுடைய கணவரின் சம்பளம் மட்டும் போதுமானது” எனத் தெரிவித்திருந்தார். 

1997ஆம் ஆண்டு அரசியலில் இவர் நுழைந்தார். முதலில் ராய்ரங்கப்பூர் பகுதியின் கவுன்சிலராக தேர்வாகினார். அதன்பின்னர் 2000 மற்றும் 2009 ஆகிய இரண்டு தேர்தல்களில் பாஜக சார்பில் சட்டமன்ற உறுப்பினராக தேர்வாகியிருந்தார். அதைத் தொடர்ந்து 2015ஆம் ஆண்டு ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல் பெண் ஆளுநராக நியமிக்கப்பட்டார். அந்தப் பதவியில் இவர் 2021ஆம் ஆண்டு வரை நீடித்தார். இந்தச் சூழலில் தற்போது அவர் பாஜகவின் ஆதரவு வேட்பாளராக குடியரசுத் தலைவர் தேர்தலில் களமிறங்கியுள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"உங்க அப்பன் வீட்டு காச கேட்கல" ஆர்ப்பாட்டத்தில் பொளந்து கட்டிய துணை முதல்வர் உதயநிதி!
18 மாவட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் ஓரிரு நாட்களில் பணம் வரும் - குட் நியூஸ் சொன்ன முதலமைச்சர்
18 மாவட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் ஓரிரு நாட்களில் பணம் வரும் - குட் நியூஸ் சொன்ன முதலமைச்சர்
Minister Anbil Mahesh: ’’உங்கள் அப்பன் வீட்டுப் பணமா? ஸ்டாலினை ஏமாற்ற பிறந்துதான் வரணும்’’- அமைச்சர் அன்பில் மகேஸ் ஆவேசம்!
’’உங்கள் அப்பன் வீட்டுப் பணமா? ஸ்டாலினை ஏமாற்ற பிறந்துதான் வரணும்’’- அமைச்சர் அன்பில் மகேஸ் ஆவேசம்!
உஷார்! தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? செய்ய வேண்டியது என்ன?
உஷார்! தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? செய்ய வேண்டியது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tiruppur : ”துப்பாக்கி வச்சி மிரட்டுறாங்க” ஜெய் பீம் பட பாணியில் போலீஸ்! கதறி அழும் குறவர் பெண்கள்!Avadi Murder CCTV: பட்டப்பகலில் வெட்டிக்கொலை!பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்!ஆவடியில் நடந்த பயங்கரம்Chengalpattu News: ”நீதான கட்டிங் கேட்ட”நடுரோட்டில் நடந்த சண்டை ஊராட்சி அலுவலகத்தில் பரபரப்புChengalpattu News | ”நீதான கட்டிங் கேட்ட”நடுரோட்டில் நடந்த சண்டை ஊராட்சி அலுவலகத்தில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"உங்க அப்பன் வீட்டு காச கேட்கல" ஆர்ப்பாட்டத்தில் பொளந்து கட்டிய துணை முதல்வர் உதயநிதி!
18 மாவட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் ஓரிரு நாட்களில் பணம் வரும் - குட் நியூஸ் சொன்ன முதலமைச்சர்
18 மாவட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் ஓரிரு நாட்களில் பணம் வரும் - குட் நியூஸ் சொன்ன முதலமைச்சர்
Minister Anbil Mahesh: ’’உங்கள் அப்பன் வீட்டுப் பணமா? ஸ்டாலினை ஏமாற்ற பிறந்துதான் வரணும்’’- அமைச்சர் அன்பில் மகேஸ் ஆவேசம்!
’’உங்கள் அப்பன் வீட்டுப் பணமா? ஸ்டாலினை ஏமாற்ற பிறந்துதான் வரணும்’’- அமைச்சர் அன்பில் மகேஸ் ஆவேசம்!
உஷார்! தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? செய்ய வேண்டியது என்ன?
உஷார்! தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? செய்ய வேண்டியது என்ன?
CBSE: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள்கள் கசிவா? சிபிஎஸ்இ பரபரப்பு விளக்கம்!
CBSE: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள்கள் கசிவா? சிபிஎஸ்இ பரபரப்பு விளக்கம்!
முஸ்லீம்கள் ஓட்டு கிடைக்குமா? தவெக விஜய்யின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. திமுக கோட்டையில் ஓட்டை!
முஸ்லீம்கள் ஓட்டு கிடைக்குமா? தவெக விஜய்யின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. திமுக கோட்டையில் ஓட்டை!
Watch video: பாலத்தை எல்லாம் கும்பிட்றீங்க? மகா கும்பமேளாவில் நடக்கும் மூடநம்பிக்கையின் உச்சம்
Watch video: பாலத்தை எல்லாம் கும்பிட்றீங்க? மகா கும்பமேளாவில் நடக்கும் மூடநம்பிக்கையின் உச்சம்
Coimbatore Shutdown: கோவையில் எங்கெல்லாம் மின்தடை (20.02.2025 ): செக் பன்னிக்கோங்க.!
Coimbatore Shutdown: கோவையில் எங்கெல்லாம் மின்தடை (20.02.2025 ): செக் பன்னிக்கோங்க.!
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.