மேலும் அறிய

சரத் பவார்- பிரஷாந்த் கிஷோர் சந்திப்பு: என்ன நடக்கிறது மகாராஷ்டிரா அரசியலில்?

முன்னதாக, தேசியவாத காங்கிரசை சேர்ந்த மூத்த தலைவர் ஏக்நாத் கட்சேவை ஃபட்னாவிஸ் சந்தித்தார். பாஜகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக கருதப்பட்ட ஏக்நாத் கட்சே, கடந்தாண்டு அக்கட்சியில் இருந்து விலகி சரத் பவார் கட்சியில் தன்னை இனைத்துக் கொண்டார்.

மேற்கு வங்க, தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் நேற்று முதன்முறையாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை சந்தித்து பேசியுள்ளார். 

முன்னதாக, மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசியிருந்த நிலையில், பிரஷாந்த் கிஷோரின் இந்த அரசியல் நகர்வுகள் முக்கியத்துவம் பெறத் தொடங்கியுள்ளன. 

ஆனால், இந்த சந்திப்பு அரசியல் கண்ணோட்டத்தோடு பார்க்கத் தேவையில்லை என்று மகாராஷ்டிரா மாநில துணை முதல்வர் அஜித் பவார் தெரிவித்தார். இதுகுறித்து, அவர் கூறுகையில், "மேற்கு வங்கசட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அரசியல் ஆலோசகர் பணியில் இருந்து ஓய்வு பெறுவதாக பிரஷாந்த் கிஷோர் ஏற்கனவே அறிவித்து விட்டார். எனவே, இது இயல்பான சந்திப்பு தான். மேலும், சரத் பவார் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த தலைவர். எனவே, வாழ்கையின் பலதரப்பட்ட மக்கள் அவரை சந்திப்பது இயல்பு தான்" என்று தெரிவித்தார்.      

கடந்த சில மாதங்களாக மகாராஷ்டிரா அரசியலில்  பல்வேறு முன்னேற்றங்கள் காணப்படுகின்றன.

உதாரணமாக, கடந்த மே 31ம் தேதி, மகாராஷ்டிரா சட்டபேரவை எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான தேவேந்திர ஃபட்னாவிஸ், சரத் பவாரை அவர் இல்லத்தில் சந்தித்து பேசினார். இது, மகாராஷ்டிரா அரசியலில் பேசும் பொருளாகியது. ஏனெனில், இந்த சந்திப்புக்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக, மாரட்டிய மக்களின் இடஒதுக்கீட்டை உறுதி செய்வதில் உத்தவ தாக்கேரே படுதோல்வி அடைந்து விட்டதாக ட்விட்டரில் ஃபட்னாவிஸ் கருத்து பதிவிட்டிருந்தார்.           

இந்த சர்ச்சை முடிவடைவதற்குள், தேசியவாத காங்கிரசை சேர்ந்த மூத்த தலைவர் ஏக்நாத் கட்சேவை ஃபட்னாவிஸ் சந்தித்தார். பாஜகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக கருதப்பட்ட ஏக்நாத் கட்சே, கடந்தாண்டு அக்கட்சியில் இருந்து விலகி, சரத் பவாரோடு தன்னை இணைத்துக் கொண்டார். மகாராஷ்டிராவின் வட மாவட்டங்களில் மறுக்கமுடியாத ஒரு அரசியல் தலைவராக இருப்பவர் ஏக்நாத் கட்சே. மேலும், இன்றைய தேதியில் அம்மமாநிலத்தின் ஒபிசி தலைவர்களில் முக்கியமான ஒருவராகவும் கருதப்படுகிறார்.  ஃபட்னாவிஸிடம் கொண்ட முரண்பாடுகள் காரணமாக, பாஜகவில் இருந்து வெளியேறினார். 

              சரத் பவார்- பிரஷாந்த் கிஷோர் சந்திப்பு: என்ன நடக்கிறது மகாராஷ்டிரா அரசியலில்?

இதன் தொடர்ச்சியாக, கடந்த ஜூன் 2ம் தேதி, சரத் பவாருடன், ஏக்நாத் கட்சே அவரின் இல்லத்தில் சென்று கலந்துரையாடினார்.  இதனைத் தொடர்ந்து,  சரத் பவாரின் மகள் சுப்ரியா சூலே, ஏக்நாத் கட்சேவை அவரின் இல்லத்தில் சென்று சந்தித்தார். இவை அனைத்தும், மரியாதை நிமித்தமான சந்திப்பு எனக் கூறப்பட்டாலும், மகாராஷ்டிரா அரசியலில் அதிகாரம் மாற்றத்திற்கான தொடக்கப்புள்ளியாகவே கருதப்பட்டது.      

சரத் பவார்- பிரஷாந்த் கிஷோர் சந்திப்பு: என்ன நடக்கிறது மகாராஷ்டிரா அரசியலில்?       

இந்த அரசியல் சூழ்நிலையில் தான், மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். இந்த சந்திப்பில், சரத் பவாரின் அண்ணன் மகனும்,  மாநிலத்தின் துணை முதல்வருமான அஜித் பவார் உடனிருந்தார். இந்த சந்திப்பிக்குப் பிறகு, நரேந்திர மோடிக்கு சாதகமான கருத்துக்களை சிவசேனத் தலவைர்கள் பதிவிட ஆரம்பித்தனர். பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் ஒப்பில்லா தலைவர் என்றும், பாஜக கட்சி பிரதமர் மோடிக்கு கடமைப்பட்டிருப்பதாகவும்  சிவசேனா தலைவர் சஞ்சய் ரவுத் கூறினார்.சரத் பவார்- பிரஷாந்த் கிஷோர் சந்திப்பு: என்ன நடக்கிறது மகாராஷ்டிரா அரசியலில்?

எனவே, அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் சரத் பவாரை அவரின் இல்லத்தில் சென்று சந்தித்திருப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகவே கருதப்படுகிறது.         

2019 சட்டமன்றத்தேர்தலில் பாஜக அதிக தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. ஆனால் அதற்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனையடுத்து, காங்கிரஸ்,தேசியவாத காங்கிரஸ்  சிவசேனா மூன்று கட்சிகளும் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி அமைத்து, பாஜகவை வெளியேற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.  

மேலும், வாசிக்க: 

பிரசாந்த் கிஷோர் வாழ்க்கையை வெப் சிரீஸாக எடுக்கும் ஷாருக்கான்!

Assembly Elections 2021 | IPAC-இல் இருந்து விலகுகிறாரா பிரஷாந்த் கிஷோர்?

தலைப்பு செய்திகள்

திடீரென மாமல்லபுரம் வரும் அமித் ஷா.. நேரில் சந்திக்கும் தென் மாநில முதல்வர்கள்! நடப்பது என்ன?
திடீரென மாமல்லபுரம் வரும் அமித் ஷா.. நேரில் சந்திக்கும் தென் மாநில முதல்வர்கள்! நடப்பது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
கேப் டிரைவருக்கு 100 ஆண்டு ஓட்ட தடை.. ரேபிடோவின் அநியாயம்.. கொதிக்கும் நெட்டிசன்கள் - நடந்தது என்ன?
கேப் டிரைவருக்கு 100 ஆண்டு ஓட்ட தடை.. ரேபிடோவின் அநியாயம்.. கொதிக்கும் நெட்டிசன்கள் - நடந்தது என்ன?
ஓணம் பண்டிகை: சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!
ஓணம் பண்டிகை: சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
சிபிஐ, சிபிஎம் என்ன தடை செய்யப்பட்ட அமைப்புகளா? - வட்டாட்சியர் செயலுக்கு அன்புமணி ராமதாஸ் கொந்தளிப்பு!
சிபிஐ, சிபிஎம் என்ன தடை செய்யப்பட்ட அமைப்புகளா? - வட்டாட்சியர் செயலுக்கு அன்புமணி ராமதாஸ் கொந்தளிப்பு!
CM Joseph Vijay: பெரம்பூரில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை.. 7 புதிய செவிலியர் கல்லூரிகள்.. அறிவிப்புகளை அள்ளி வீசிய முதலமைச்சர்!
CM Joseph Vijay: பெரம்பூரில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை.. 7 புதிய செவிலியர் கல்லூரிகள்.. அறிவிப்புகளை அள்ளி வீசிய முதலமைச்சர்!
Free Health Insurance: அடி தூள்.! இலவசமாக ரூ.25 லட்சத்திற்கு மருத்துவ காப்பீடு- விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள் என்ன?
அடி தூள்.! இலவசமாக ரூ.25 லட்சத்திற்கு மருத்துவ காப்பீடு- விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள் என்ன?
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
பறக்கும் ரயில் மெட்ரோ ரயிலாக மாறுது.! பீச், வேளச்சேரி, பரங்கிமலையில் புதிய திட்டம்- என்ன தெரியுமா.?
பறக்கும் ரயில் மெட்ரோ ரயிலாக மாறுது.! பீச், வேளச்சேரி, பரங்கிமலையில் புதிய திட்டம்- என்ன தெரியுமா.?
Embed widget