மேலும் அறிய

PM Modi: ராகுல்காந்தி, கெஜ்ரிவாலுக்கு பாகிஸ்தானில் இருந்து ஆதரவு வருவது ஏன்? பிரதமர் மோடி பரபரப்பு குற்றச்சாட்டு!

Lok Shaba Election 2024: 18வது மக்களவைப் பொதுத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டு, அதில் 6 கட்ட தேர்தல்கள் நிறைவடைந்துவிட்டது.

காங்கிரஸின் ராகுல் காந்தி மற்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பாகிஸ்தான் தலைவரிடமிருந்து வெளிப்படையான ஆதரவு உள்ளது என பிரதமர் நரேந்திர மோடி தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் குற்றம் சாட்டியுள்ளார். 

 

 பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் சவுத்ரி ஃபவாத் ஹுசைன் சமீபத்தில் தனது எக்ஸ் பக்கத்தில் ராகுல் காந்தியின் வீடியோவைப் பகிர்ந்தது மட்டும் இல்லாமல் அவரைப் பாராட்டினார். அதேபோல் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கிடைத்தபோதும் சவுத்ரி ஃபவாத் ஹுசைன் தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார். 

அவர்களுக்கு ஏன் ஆதரவு?

இதனைச் சுட்டிக்காட்டிப் பேசிய பிரதமர் மோடி, “பாஜகவை எதிர்ப்பவர்களை மட்டும் எப்படி அவர்களுக்கு (பாகிஸ்தான் முன்னாள் அமைச்சருக்கு) பிடிக்கின்றது, அவர்களுக்கு மட்டும் எதனால் இந்த ஆதரவு கிடைக்கின்றது. இது கவலைக்குரிய விஷயமாக இருந்தாலும், இந்தியாவில் உள்ள வாக்காளர்கள் அரசியல் தெளிவுடைய வாக்காளர்கள். இவர்களிடையே வெளிநாடுகளில் இருப்பவரிகளின் அறிக்கைகள் எந்தவகையிலும் தாக்கத்தை ஏற்படுத்தாது. இந்தியாவில் நடத்தப்படும் தேர்தல் மட்டும் இல்லாமல் இந்தியாவின் ஜனநாயகமே மிகவும் முதிர்ச்சி அடைந்தது. இந்திய வாக்காளர்களும் அவ்வாறுதான். இவர்களை வெளிப்புற காரணங்கள் எந்தவகையிலும் பாதிக்காது” எனக் கூறினார். 

பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் ஆதரவு:

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் அமைச்சரவையில் இருந்த முன்னாள் அமைச்சர் சவுத்ரி ஃபவாத் ஹுசைன் சமீபத்தில் தனது எக்ஸ் பக்கத்தில் ராகுல் காந்தியின் வீடியோவைப் பகிர்ந்திருந்தார். இதனை பாஜகவினர் ராகுல் காந்திக்கு எதிரி நாடான பாகிஸ்தானில் இருந்து ஆதரவு உள்ளது எனக் கூறி பிரச்சாரம் மேற்கொண்டனர்.

இதுமட்டும் இல்லாமல், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் உச்சநீதிமன்றம் வழங்கியதும் தனது எக்ஸ் பக்கத்தில் தம்ஸ் அப் பதிவைப் போட்டார். இத்துடன், ”மோடி அரசுக்கு மற்றொரு பின்னடைவு, கெஜ்ரிவால் ரிலீஸ் செய்யப்படுகின்றார்” என பதிவிட்டிருந்தார். மேலும், கெஜ்ரிவால் மற்றும் அவரது குடும்பத்தினர் வாக்குச் சாவடியில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, "அமைதியும் நல்லிணக்கமும் வெறுப்பு மற்றும் தீவிரவாத சக்திகளை தோற்கடிக்கட்டும்” என குறிப்பிட்டுருந்தார். 

இந்த பதிவுக்கு, கெஜ்ரிவால் தரப்பில் இருந்து மிகவும் காட்டமான பதில் கொடுக்கப்பட்டிருந்தது. அதில், “சௌத்ரி சாஹிப், நானும் எனது நாட்டு மக்களும் எங்கள் பிரச்சனைகளை தீர்க்க நாங்கள் திறமையானவர்கள். உங்கள் ட்வீட் எங்களுக்கு தேவையில்லை. தற்போது, ​​பாகிஸ்தான் மோசமான நிலையில் உள்ளது. உங்கள் சொந்த நாட்டை நீங்கள் கவனியுங்கள்” என பதில் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தமிழகத்திற்கு நிதி கிடையாது” தர்மேந்திர பிரதான் பேசியது என்ன? தமிழில் முழு வீடியோNamakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | CollectorNainar Nagendran Join ADMK : அதிமுகவில் மீண்டும் நயினார்?பாஜகவில் வெடித்த கலகம்!அ.மலை பக்கா ஸ்கெட்ச்Mayiladuthurai Murder | சாராய விற்ற கும்பல் தட்டிக்கேட்ட இளைஞர்கள் படுகொலை செய்த சம்பவம் | Crime

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
குறைவான பேலன்ஸ் வைத்திருந்தால் கூடுதல் அபராதம்.. புதிய FASTag விதிகள் நாளை முதல் அமல்!
குறைவான பேலன்ஸ் வைத்திருந்தால் கூடுதல் அபராதம்.. புதிய FASTag விதிகள் நாளை முதல் அமல்!
பரீட்சைக்கு லேட் ஆச்சி; மகாராஷ்டிராவை வாட்டும் ட்ராஃபிக்! மாணவர் எடுத்த அதிரடி முடிவு! நீங்களே பாருங்க!
பரீட்சைக்கு லேட் ஆச்சி; மகாராஷ்டிராவை வாட்டும் ட்ராஃபிக்! மாணவர் எடுத்த அதிரடி முடிவு! நீங்களே பாருங்க!
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.