மேலும் அறிய

"விவசாயிகளை வைத்து சிலர் அரசியல் செய்தனர்" யாரை சொல்கிறார் பிரதமர் மோடி?

மகாராஷ்டிராவில் இன்று 7,500 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி பணி திட்டங்களை பிரதமர் மோடி  தொடங்கி வைத்தார்.

உத்தர பிரதேசத்துக்கு பிறகு அதிக மக்களவை உறுப்பினர்களை கொண்ட மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமான மகாராஷ்டிராவில் தற்போது, பாஜக - சிவசேனா (உத்தவ் தாக்கரே) - தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது.

வளர்ச்சி பணி திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி:

இன்னும் 5 மாதங்களில் மக்களவை தேர்தலும் அடுத்தாண்டு அக்டோபர் மாதம் மகாராஷ்டிராவில் சட்டப்பேரவை தேர்தலும் நடத்தப்பட உள்ளது. இந்த சூழலில், மகாராஷ்டிராவில் இன்று 7,500 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி பணி திட்டங்களை பிரதமர் மோடி  தொடங்கி வைத்தார். நமோ ஷேத்காரி மஹாசன்மன் நிதி யோஜனா என்ற திட்டமும் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் மகாராஷ்டிராவில் 86 லட்சம் விவசாயிகள் பயன் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர், அகமதுநகர் சிவில் மருத்துவமனையின் தாய் மற்றும் குழந்தைகள் நலப் பிரிவுக்கு மோடி அடிக்கல் நாட்டினார்.

இதை தொடர்ந்து, அகமதுநகர் மாவட்டத்துக்கு சென்ற பிரதமர் மோடி ஷீரடியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவாரை மறைமுகமாக விமர்சித்த அவர், "மகாராஷ்டிராவைச் சேர்ந்த சிலர் விவசாயிகள் பெயரில் அரசியல் செய்தார்கள்" என குற்றம் சுமத்தினார்.

சரத் பவார் பற்றி விமர்சனம்:

"எனது அரசாங்கம் விவசாயிகளின் நலனுக்காக அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது. விவசாயிகள் இப்போது தங்கள் விளைபொருட்களுக்கான எம்எஸ்பி (குறைந்தபட்ச ஆதரவு விலை) பணத்தை அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகப் பெறுகிறார்கள். ஆனால், மகாராஷ்டிராவில் சிலர் விவசாயிகள் பெயரில் அரசியல் மட்டுமே செய்தார்கள். 

மகாராஷ்டிராவின் மூத்த தலைவர் ஒருவர் நாட்டின் விவசாய அமைச்சராகப் பதவி வகித்தார். நான் தனிப்பட்ட முறையில் அவரை மதிக்கிறேன். ஆனால், அவர் விவசாயிகளுக்கு என்ன செய்தார்? அவர் மத்திய வேளாண் அமைச்சராக இருந்தபோது, இடைத்தரகர்களின் தயவில் விவசாயிகள் இருக்க வேண்டியிருந்தது.

பல மாதங்களாக விவசாயிகள் பணத்திற்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. விவசாயிகளின் வங்கிக் கணக்கில் எங்கள் அரசு எம்எஸ்பி பணத்தை நேரடியாக வழங்கி வருகிறது" என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவின் முதலமைச்சராக 4 முறையும், கடந்த 1991ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை, பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் கடந்த 2004ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரையில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் மத்திய வேளாண்துறை அமைச்சராகவும் சரத் பவார் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ஸ்கெட்ச் ஆந்திராவுக்கு இல்ல தெலங்கானாவுக்கு.. காய் நகர்த்திய பவன் கல்யாண் - செம்ம ட்விஸ்ட்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget