மேலும் அறிய

"இன்னும் எந்தளவுக்கு கீழ்த்தரமா இறங்குவாங்களோ" பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து - வெளுத்து வாங்கிய பிரதமர்

அந்தரங்க விவகாரங்கள் தொடர்பாக பிகார் சட்டப்பேரவையிலேயே, சைகைகளுடன் முதலமைச்சர் பேசியதற்கு அவையில் இருந்த பெண் உறுப்பினர்கள் அப்போதே ஆட்சேபனை தெரிவித்தனர்.

சர்ச்சையில் சிக்கிய பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார்:

பிகார் சட்டப்பேரவையில் நேற்று பேசிய அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார், “பிகாரில் பெண் கல்வி உயர்ந்துள்ளது. இது மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துவதிலும் உதவிகரமாக உள்ளது. ஒரு படித்த பெண் திருமணம் செய்துகொள்ளும்போது, கருவுறுதலை தடுப்பதற்கான வழிமுறகளை கணவருக்கு கற்று கொடுக்க முடியும். இது மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த உதவுகிறது” என கூறினார். 

அதுமட்டும் இன்றி, கணவன் - மனைவி இடையேயான சில அந்தரங்க விவகாரங்களை பற்றி பேசினார். அந்தரங்க விவகாரங்கள் தொடர்பாக பிகார் சட்டப்பேரவையிலேயே, சைகைகளுடன் முதலமைச்சர் பேசியதற்கு அவையில் இருந்த பெண் உறுப்பினர்கள் அப்போதே ஆட்சேபனை தெரிவித்தனர். இந்த விவகாரம் தேசிய அளவில் பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், தான் தெரிவித்த கருத்துக்கு நிதிஷ் குமார், பகிரங்க மன்னிப்பு கோரினார்.

வெளுத்து வாங்கிய பிரதமர் மோடி:

இந்த நிலையில், மத்திய பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி, இந்த விவகாரத்தை கையில் எடுத்து, INDIA கூட்டணியை கடுமையாக சாடினார்.

"INDIA கூட்டணியின் (28 எதிர்க்கட்சிகளை உள்ளடக்கிய மெகா கூட்டணி) ஒரு முக்கியத் தலைவர், அநாகரீகமான வார்த்தைகளை வெட்கமின்றி சட்டமன்றத்தில் பயன்படுத்தினார். INDIA கூட்டணியை சேர்ந்த ஒரு தலைவர் கூட அவருக்கு எதிராக பேசவில்லை. எவ்வளவு கீழ்த்தரமாக பேசி நாட்டுக்கு அவமானத்தை ஏற்படுத்துகிறார்கள்.

அது, திமிர்பிடித்த கூட்டணி. டிவி பார்ப்பவர்கள் நேற்று பார்த்திருப்பார்கள். தாய்மார்கள், சகோதரிகள் இருந்த சட்டசபையில் வெட்கமே இல்லாமல் வெட்கக்கேடான வார்த்தையை INDIA கூட்டணியின் பெரிய தலைவர் பயன்படுத்தினார். அத்தகையவர்கள் உங்களுக்காக வேலை செய்வார்களா? அவர்களை மதிக்க வேண்டுமா?" என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

"சோனியா காந்தி குறித்து பேசியதற்காக பிரதமர் மன்னிப்பு கேட்டாரா?"

இதற்கு பதிலடி தந்த ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் மூத்த தலைவர் சிவானந்த் திவாரி, "மூத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை ஜெர்சி மாடு என்று அழைத்ததற்காக பிரதமர் மன்னிப்பு கேட்டாரா என்பதை அறிய விரும்புகிறேன். சோனியா காந்தி மற்றும் சசி தரூரின் காதலிக்கு எதிராக பயன்படுத்தப்பட்ட மோசமான வார்த்தைகளுக்கு பிரதமர் (எப்போதாவது) மன்னிப்பு கேட்டாரா?

நிதிஷ் குமார் தனது கருத்துக்காக உள்ளேயும் வெளியேயும் மன்னிப்பு கேட்டுவிட்டார். அது தவறு என்று ஒப்புக்கொண்டார். நிதிஷ் குமார் உணர்ந்தவுடன் மன்னிப்பு கேட்டார். ஆனால், பிரதமர் நிதிஷ்குமாரை விமர்சிக்கிறார். அவர், எந்தளவுக்கு பெண்களுக்கு மரியாதை கொடுக்கிறார்?  இந்திரா காந்தியின் மருமகள் என்பதையும் ராஜீவ் காந்தியின் மனைவி என்பதை அவர்கள் மறந்துவிட்டார்களா?" என்றார்.

 

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Cong Slams MODI: ”வாய திறந்தாலே பொய்யா” உளறிய பிரதமர் மோடி? ரவுண்டு கட்டி வெளுத்து வாங்கிய காங்கிரஸ்
Cong Slams MODI: ”வாய திறந்தாலே பொய்யா” உளறிய பிரதமர் மோடி? ரவுண்டு கட்டி வெளுத்து வாங்கிய காங்கிரஸ்
சிபிஎஸ்இ எச்சரிக்கை! மதிப்பெண் சான்றிதழ் திருத்தம்: பெற்றோர்களே உஷார்! போலி வாக்குறுதிகள் & ஆபத்துகள்!
சிபிஎஸ்இ எச்சரிக்கை! மதிப்பெண் சான்றிதழ் திருத்தம்: பெற்றோர்களே உஷார்! போலி வாக்குறுதிகள் & ஆபத்துகள்!
Sudarshan Chakra Mission: இந்தியாவின் அயர்ன் டோம்..சுதர்ஷன் சக்ரா மிஷன் - வான் பரப்பை காக்க கிருஷ்ணரின் ஆயுதம்
Sudarshan Chakra Mission: இந்தியாவின் அயர்ன் டோம்..சுதர்ஷன் சக்ரா மிஷன் - வான் பரப்பை காக்க கிருஷ்ணரின் ஆயுதம்
ஆளுநர் vs அமைச்சர் அன்பில்: அரசுப் பள்ளிகள் மீதான விவாதத்தில் வெடித்த மோதல்! கல்வி நிதி எங்கே?
ஆளுநர் vs அமைச்சர் அன்பில்: அரசுப் பள்ளிகள் மீதான விவாதத்தில் வெடித்த மோதல்! கல்வி நிதி எங்கே?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP vs OPS | மீண்டும் கூட்டணியில் OPS? நிராகரித்த பி.எல். சந்தோஷ்! தூது போன அண்ணாமலை!
Independence Day 2025: சுதந்திர தின விழா கொண்டாட்டம் ஜொலிக்கும் சென்னை 10,000 போலீசார் குவிப்பு
வகுப்பறைக்கு வந்த மாணவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு பதற வைக்கும் CCTV காட்சி | Student Died Classroom
முதல் மனைவியுடன் மாதம்பட்டி 2-வது மனைவியின் நிலைமை? | Joy Crizildaa | Madhampatti Rangaraj Marriage
Independence Day Rehearsal : 79-வது சுதந்திர தின விழா காவல்துறை அணிவகுப்பு ஒத்திகை தயாராகும்  கோட்டை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cong Slams MODI: ”வாய திறந்தாலே பொய்யா” உளறிய பிரதமர் மோடி? ரவுண்டு கட்டி வெளுத்து வாங்கிய காங்கிரஸ்
Cong Slams MODI: ”வாய திறந்தாலே பொய்யா” உளறிய பிரதமர் மோடி? ரவுண்டு கட்டி வெளுத்து வாங்கிய காங்கிரஸ்
சிபிஎஸ்இ எச்சரிக்கை! மதிப்பெண் சான்றிதழ் திருத்தம்: பெற்றோர்களே உஷார்! போலி வாக்குறுதிகள் & ஆபத்துகள்!
சிபிஎஸ்இ எச்சரிக்கை! மதிப்பெண் சான்றிதழ் திருத்தம்: பெற்றோர்களே உஷார்! போலி வாக்குறுதிகள் & ஆபத்துகள்!
Sudarshan Chakra Mission: இந்தியாவின் அயர்ன் டோம்..சுதர்ஷன் சக்ரா மிஷன் - வான் பரப்பை காக்க கிருஷ்ணரின் ஆயுதம்
Sudarshan Chakra Mission: இந்தியாவின் அயர்ன் டோம்..சுதர்ஷன் சக்ரா மிஷன் - வான் பரப்பை காக்க கிருஷ்ணரின் ஆயுதம்
ஆளுநர் vs அமைச்சர் அன்பில்: அரசுப் பள்ளிகள் மீதான விவாதத்தில் வெடித்த மோதல்! கல்வி நிதி எங்கே?
ஆளுநர் vs அமைச்சர் அன்பில்: அரசுப் பள்ளிகள் மீதான விவாதத்தில் வெடித்த மோதல்! கல்வி நிதி எங்கே?
PM Modi: ”தீபாவளிக்கு பரிசு காத்திருக்கு”சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி அறிவிப்பு
PM Modi: ”தீபாவளிக்கு பரிசு காத்திருக்கு”சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி அறிவிப்பு
PM Modi Speech: மோடிக்கு என்ன ஆச்சு? நேருவை புகழ்ந்த பிரதமர் - ”யார மிரட்டுறீங்க” பாக்., பதிலடி தந்த பேச்சு
PM Modi Speech: மோடிக்கு என்ன ஆச்சு? நேருவை புகழ்ந்த பிரதமர் - ”யார மிரட்டுறீங்க” பாக்., பதிலடி தந்த பேச்சு
Top 10 News Headlines: போட்டி போட்டு அறிவிப்புகளை வெளியிட்ட PM, CM, சுதந்திர தின கொண்டாட்டம்   - 11 மணி செய்திகள்
Top 10 News Headlines: போட்டி போட்டு அறிவிப்புகளை வெளியிட்ட PM, CM, சுதந்திர தின கொண்டாட்டம் - 11 மணி செய்திகள்
Tata Punch EV: சும்மாவே பஞ்ச் காருக்கு செம்ம டிமேண்ட்.. இப்ப புதுசா 2 அப்டேட்கள், ஏசி சார்ஜருடன் கூடுதலாக..
Tata Punch EV: சும்மாவே பஞ்ச் காருக்கு செம்ம டிமேண்ட்.. இப்ப புதுசா 2 அப்டேட்கள், ஏசி சார்ஜருடன் கூடுதலாக..
Embed widget