மேலும் அறிய

நாட்டுக்கு நல்ல எதிர்க்கட்சி தேவை: நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை!

எதிர்க்கட்சியாக ஆற்ற வேண்டிய கடமைகளை செய்யாமல் எதிர்க்கட்சிகள் தோல்வி அடைந்துவிட்டது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சியாக ஆற்ற வேண்டிய கடமைகளை செய்யாமல் எதிர்க்கட்சிகள் தோல்வி அடைந்துவிட்டது என்றும் நாட்டுக்கு நல்ல எதிர்க்கட்சி தேவை என்றும் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

"தொகுதிகளை மாற்ற நினைக்கும் எதிர்க்கட்சி தலைவர்கள்"

குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர், "உங்களில் பலர் (எதிர்க்கட்சி) தேர்தலில் போட்டியிடும் தைரியத்தை கூட இழந்துவிட்டதை நான் காண்கிறேன். கடந்த முறையும் சிலர் தொகுதிகளை மாற்றினர். இந்த முறையும் பலர் தொகுதிகளை மாற்ற முயல்வதாக கேள்விப்பட்டேன்.

மக்களவைக்கு பதிலாக மாநிலங்களவைக்கு இப்போது பலர் செல்ல விரும்புவதாகவும் கேள்விப்பட்டிருக்கிறேன். நிலைமையை மதிப்பிடுவதன் மூலம் அவர்கள் தங்கள் பாதைகளைத் தேடுகிறார்கள்" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "மூன்றாவது அரசை அமைப்பதற்கான காலம் வெகு தொலைவில் இல்லை. அதிகபட்சம் 100-125 நாட்கள். நாட்டின் திறனை காங்கிரஸ் ஒருபோதும் நம்பவில்லை. இதுவே காங்கிரஸின் மனநிலை. அது தன்னை ஆட்சியாளர்களாகவும், பொதுமக்களை குறைந்தவராகவும், யாரோ சிறியவராகவும் கருதியது.

"மூன்றாவது பெரிய பொருளாதார சக்தியாக இருக்கும்"

2014ல் இந்தியா 11வது பெரிய பொருளாதாரமாக இருந்தது. இன்று இந்தியா 5வது பெரிய பொருளாதாரமாக இருக்கிறது. அவர்கள் (காங்கிரஸ்) மௌனமாக இருக்கிறார்கள். கனவு காணும் திறனை கூட இழந்துவிட்டனர். நான் உத்தரவாதம் அளிக்கிறேன். நமது மூன்றாவது ஆட்சியில் இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதார சக்தியாக இருக்கும்.

ஏழைகளுக்கு 4 கோடி வீடுகளை கட்டி கொடுத்தோம். நகர்ப்புற ஏழைகளுக்கு, 80 லட்சம் வீடுகளை கட்டி கொடுத்துள்ளோம். காங்கிரசின் வேகத்தில் இவை கட்டப்பட்டிருந்தால். இந்த வேலையைச் செய்ய 100 ஆண்டுகள் ஆகியிருக்கும். அப்போது ஐந்து தலைமுறைகள் கடந்திருக்கும்" என்றார்.

சிறுபான்மை சமூகத்திற்கு எதுவும் செய்யவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகிறது. ஒருவேளை மீனவர்கள் உங்கள் இடத்தில் சிறுபான்மையினராக இல்லாமல் இருக்கலாம். விலங்குகளை மேய்ப்பவர்கள் சிறுபான்மையினராக இல்லாமல் இருக்கலாம். உங்களுக்கு விவசாயிகள் சிறுபான்மையினராக இல்லாமல் இருக்கலாம். உங்களுக்கு பெண்கள் சிறுபான்மையினராக இல்லாமல் இருக்கலாம். என்னாச்சு உங்களுக்கு? பிரிவுகளைப் பற்றி எவ்வளவு காலம் யோசிப்பீர்கள்? இன்னும் எவ்வளவு காலம் சமூகத்தை பிளவுபடுத்துவீர்கள்?

நீண்ட காலம் எதிர்க்கட்சியாக இருக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சியின் உறுதியை நான் பாராட்டுகிறேன். பல ஆண்டுகளாக நீங்கள் இங்கு (அரசாங்கத்தில்) அமர்ந்திருந்த விதத்தை, அங்கேயே (எதிர்க்கட்சியில்) உட்கார தீர்மானித்த விதத்தை. பொதுமக்கள் நிச்சயம் தருவார்கள். உங்களுக்கு அதற்கான ஆசீர்வாதங்களை மக்கள் தருவார்கள்.

இந்தப் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்திற்கு குடியரசுத் தலைவர் உரையாற்ற வந்தபோது, ​​அவர்களை செங்கோல் வழிநடத்தியது பெருமையாகவும் மரியாதையாகவும் இருந்தது. நாங்கள் அதன் பின்னால் நடந்து கொண்டிருந்தோம். இந்தியா சுதந்திரம் பெற்ற அந்த புனிதத் தருணத்தை இந்தப் புதிய பாரம்பரியத்தில் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் பிரதிபலிக்கும் போது, ஜனநாயகத்தின் மாண்பு உயரும்" என்றார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
ABP Premium

வீடியோ

தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்
”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
Crime: கணவரை துண்டு துண்டாக வெட்டி கிரைண்டரில் அரைத்த மனைவி.. கள்ளக்காதல் விபரீதம்!
Crime: கணவரை துண்டு துண்டாக வெட்டி கிரைண்டரில் அரைத்த மனைவி.. கள்ளக்காதல் விபரீதம்!
Embed widget