மேலும் அறிய

"இது, அப்துல் கலாமின் புண்ணிய பூமி" ராமேஸ்வரத்தில் உணர்ச்சிவசப்பட்டு பேசிய பிரதமர் மோடி

2014க்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடுகையில் மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு மூன்று மடங்கு அதிக நிதியை ஒதுக்கியுள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ராமேஸ்வரத்தில் புதிய பாம்பன் பாலத்தை திறந்து வைத்துவிட்டு பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, "இன்று ராமநாதசுவாமி கோவிலில் பிரார்த்தனை செய்ய முடிந்ததை நான் பாக்கியமாக உணர்கிறேன். இந்த சிறப்பு வாய்ந்த நாளில், ரூ.8,300 கோடி மதிப்புள்ள வளர்ச்சிப் பணிகளை திறந்து வைக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

"பொறியியல் அதிசயம்"

தொடங்கி வைக்கப்பட்ட ரயில் மற்றும் சாலைத் திட்டங்கள் தமிழ்நாட்டில் இணைப்பை அதிகரிக்கும். இந்தத் திட்டங்களுக்காக தமிழ்நாட்டில் உள்ள எனது சகோதர சகோதரிகளை நான் வாழ்த்துகிறேன். இது பாரத ரத்னா டாக்டர் கலாமின் புண்ணிய பூமி.

அறிவியலும் ஆன்மீகமும் ஒன்றையொன்று பூர்த்தி செய்கின்றன என்பதை அவரது வாழ்க்கை நமக்குக் காட்டியது. அதேபோல், ராமேஸ்வரத்திற்குச் செல்லும் புதிய பாம்பன் பாலம் தொழில்நுட்பத்தையும் பாரம்பரியத்தையும் ஒன்றாகக் கொண்டுவருகிறது.

ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான ஒரு நகரம் 21 ஆம் நூற்றாண்டின் பொறியியல் அதிசயத்தால் இணைக்கப்பட்டுள்ளது. எங்கள் பொறியாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் கடின உழைப்புக்கு நான் நன்றி கூறுகிறேன். இந்தப் பாலம் இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு ரயில்வே கடல் பாலமாகும்.

புதிய ரயில் சேவை ராமேஸ்வரத்திலிருந்து சென்னை மற்றும் நாட்டின் பிற பகுதிகளுக்கான இணைப்பை மேம்படுத்தும். இது தமிழ்நாட்டில் வர்த்தகம் மற்றும் சுற்றுலா இரண்டிற்கும் பயனளிக்கும். இளைஞர்களுக்கு புதிய வேலைகள் மற்றும் வாய்ப்புகள் உருவாக்கப்படும்.

பிரதமர் மோடி என்ன பேசினார்?

கடந்த 10 ஆண்டுகளில், இந்தியா அதன் பொருளாதாரத்தின் அளவை இரட்டிப்பாக்கியுள்ளது. இத்தகைய விரைவான வளர்ச்சிக்கு நமது அற்புதமான நவீன உள்கட்டமைப்பும் ஒரு முக்கிய காரணம். கடந்த 10 ஆண்டுகளில், ரயில், சாலை, விமான நிலையங்கள், நீர், துறைமுகங்கள், மின்சாரம், எரிவாயு குழாய் இணைப்புகள் போன்ற உள்கட்டமைப்புகளுக்கான பட்ஜெட்டை கிட்டத்தட்ட 6 மடங்கு அதிகரித்துள்ளோம்.

இன்று, நாடு முழுவதும் பெரிய கட்டுமானத் திட்டங்கள் நடந்து வருகின்றன. வடக்கில் ஜம்மு-காஷ்மீரில், உலகின் மிக உயரமான ரயில் பாலங்களில் ஒன்றான செனாப் பாலத்தின் கட்டுமான பணி நிறைவடைந்துள்ளது. மேற்கில், மும்பையில், இந்தியாவின் மிக நீளமான கடல் பாலமான அடல் சேது கட்டப்பட்டுள்ளது. கிழக்கில், அசாமில், போகிபீல் பாலத்தைக் காணலாம். தெற்கில், உலகின் சில செங்குத்து தூக்கு பாலங்களில் ஒன்றான பாம்பன் பாலம் கட்டப்பட்டுள்ளது.

வளர்ந்த இந்தியா அல்லது விசித் பாரதத்தை நோக்கிய பயணத்தில் தமிழ்நாடு குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கிறது. தமிழ்நாட்டின் ஆற்றல் உணரப்படும்போது நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி மேம்படும் என்று நான் நம்புகிறேன்.

கடந்த பத்தாண்டுகளில், 2014க்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடுகையில் மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு மூன்று மடங்கு அதிக நிதியை ஒதுக்கியுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் இருந்தபோது மோடி அரசு தமிழ்நாட்டிற்கு மூன்று மடங்கு நிதியை வழங்கியுள்ளது. இந்த ஆதரவு மாநிலத்தின் பொருளாதாரம் மற்றும் தொழில்துறை வளர்ச்சிக்கு பங்களித்துள்ளது" என்றார்.

 

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Bangladesh Election: வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Mexico Vs India Tariff: ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
ABP Premium

வீடியோ

Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Bangladesh Election: வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Mexico Vs India Tariff: ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
Trump ‘Gold Card‘ Visa: 1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
Top 5 Cars India: டாடா நெக்ஸான் முதல் ஹூண்டாய் க்ரெட்டா வரை; மக்கள் விரும்பும் டாப் 5 கார்கள் இவை தான்.?
டாடா நெக்ஸான் முதல் ஹூண்டாய் க்ரெட்டா வரை; மக்கள் விரும்பும் டாப் 5 கார்கள் இவை தான்.?
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
98 அடி உயர மெகா சுனாமி வரப்போகுது.. 2லட்சம் பேர் இறக்க போறாங்க... எச்சரித்த அரசு- அலறும் மக்கள்
98 அடி உயர மெகா சுனாமி வரப்போகுது.. 2லட்சம் பேர் இறக்க போறாங்க... எச்சரித்த அரசு- அலறும் மக்கள்
Embed widget