மேலும் அறிய

மும்பை: நாயை நாய்ன்னு சொன்னது ஒரு குத்தமா? - முதியவரை தாக்கிய நாயின் உரிமையாளர்!

குற்றம் சாட்டப்பட்டவர் தனது செல்ல நாயை "குட்டா (நாய்)" என்று குறிப்பிட வேண்டாம், அதன் பெயரை - லூசி என்று குறிப்பிடுமாறு கூறியுள்ளார்.

மும்பையில் தான் செல்லமாக வளர்க்கும் நாயை "குட்டா (நாய்)" என்று அழைத்ததைக் கண்டு ஆத்திரமடைந்த 25 வயது நபர் ஒருவர், 60 வயது ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநரை தாக்கி, முகத்தில் காயம் ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

செல்லபிராணியை நாய் என்று அழைத்ததால் அடி

குற்றம் சாட்டப்பட்ட ராகுல் போஸ்லே என்னும் நபர், தனது செல்லப்பிராணியின் பெயரை லூசி என்று அழைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். போலீஸ் அதிகாரிகளின் கூற்றுப்படி, போஸ்லேவுக்கு எதிராக ஐந்து முதல் ஆறு குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன, மேலும் அவர் மே 2021 முதல் மே 2022 வரை மும்பை நகரத்திலிருந்து தலைமறைவாக இருந்துள்ளார். "எப்.ஐ.ஆர்.க்குப் பிறகு, போஸ்லே கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார்" என்று பாண்டுப் காவல் நிலையத்தின் காவல் துணை ஆய்வாளர் அபிஜித் தெகாவாடே கூறினார். 

மும்பை: நாயை நாய்ன்னு சொன்னது ஒரு குத்தமா? - முதியவரை தாக்கிய நாயின் உரிமையாளர்!

நாயை தேடிய போஸ்லே

செவ்வாய்க்கிழமை இரவு 10.30 மணியளவில் 60 வயது சிவசாகர் பாட்டீல், வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அவர் பாண்டுப்பில் உள்ள MHADA காலனியை அடைந்தபோது, அங்கு தனது நாயை தேடிக்கொண்டிருந்த ராகுல் போஸ்லே அவரை அழைத்து சாலையில் ஏதாவது நாய் செல்வதை பார்த்தீர்களா என்று கேட்டுள்ளார். பாட்டீல் "குட்டாவை (நாயை)" பார்க்கவில்லை என்று பதிலளித்தார். இது போஸ்லேவுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. 

தொடர்புடைய செய்திகள்: மருமகளால் வந்த வில்லங்கம்..! ரோஜர் பின்னியின் பி.சி.சி.ஐ. தலைவர் பதவி பறிபோகிறதா..? நடந்தது என்ன..?

நாய் இல்லை… லூசி

குற்றம் சாட்டப்பட்டவர் தனது செல்ல நாயை "குட்டா (நாய்)" என்று குறிப்பிட வேண்டாம், அதன் பெயரை - லூசி என்று குறிப்பிடுமாறு கூறியுள்ளார். பாட்டீலின் கூற்றுப்படி, ஆத்திரம் அடைந்த போஸ்லே தனது ஆட்டோவை உதைக்கத் தொடங்கியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. அவரை தகாத வார்த்தைகளில் திட்டிய போஸ்லே அவரது காலரைப் பிடித்து கொலை மிரட்டல் விடுத்ததாக பாதிக்கப்பட்டவர் குற்றம் சாட்டினார்.

மும்பை: நாயை நாய்ன்னு சொன்னது ஒரு குத்தமா? - முதியவரை தாக்கிய நாயின் உரிமையாளர்!

வழக்குப்பதிவு செய்து கைது

இந்த சண்டையின் போது, ​​போஸ்லே 60 வயது முதியவரின் முகத்தில் குத்தியதாகவும், அவரது உடலில் பலத்த அடிகளை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. "எனக்கு காயங்கள் ஏற்பட்டன மற்றும் என் முகத்தில் இருந்து இரத்தம் வர ஆரம்பித்தது," என்று முதியவர் காவல்துறைக்கு அளித்த வாக்குமூலத்தில் கூறினார். பிறகு சுற்றி இருந்தவர்கள் தலையிட்டு தடுத்துள்ளனர். மேலும் பாட்டீல் முலுண்ட் பொது மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றுள்ளார். நள்ளிரவில், பாதிக்கப்பட்டவர் பாண்டுப் காவல்துறையை அணுகி தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்தார். அவரது அறிக்கை மற்றும் மருத்துவ அறிக்கையின் அடிப்படையில், இந்திய தண்டனை சட்டப் பிரிவுகள் 324 (அபாயகரமான ஆயுதங்கள் அல்லது வழிமுறைகளால் தானாக முன்வந்து காயப்படுத்துதல்), 506(2) (கொலைமிரட்டல்) 504 (அமைதியைக் கெடுக்கும் நோக்கில் அவமதிப்பு) ஆகியவற்றின் கீழ் போலீஸார் எஃப்ஐஆர் பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து போஸ்லே கைது செய்யப்பட்டதாக பாண்டுப் காவல் நிலைய மூத்த ஆய்வாளர் நிதின் உன்ஹானே தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
காதலியை உறைய வைத்து கொலை செய்த கொடூர காதலன்? நம்பிச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
காதலியை உறைய வைத்து கொலை செய்த கொடூர காதலன்? நம்பிச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
Tata Sierra Rivals: ஆன் - ரோட் வராத காருக்கு இவ்ளோ போட்டியா? சந்தைக்கு வரும் 3 புதிய SUVக்கள்- சமாளிக்குமா டாடா?
Tata Sierra Rivals: ஆன் - ரோட் வராத காருக்கு இவ்ளோ போட்டியா? சந்தைக்கு வரும் 3 புதிய SUVக்கள்- சமாளிக்குமா டாடா?
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
காதலியை உறைய வைத்து கொலை செய்த கொடூர காதலன்? நம்பிச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
காதலியை உறைய வைத்து கொலை செய்த கொடூர காதலன்? நம்பிச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
Tata Sierra Rivals: ஆன் - ரோட் வராத காருக்கு இவ்ளோ போட்டியா? சந்தைக்கு வரும் 3 புதிய SUVக்கள்- சமாளிக்குமா டாடா?
Tata Sierra Rivals: ஆன் - ரோட் வராத காருக்கு இவ்ளோ போட்டியா? சந்தைக்கு வரும் 3 புதிய SUVக்கள்- சமாளிக்குமா டாடா?
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
Embed widget