மேலும் அறிய

PM Modi-Xi Jinping: ”பீஸ் வந்தா மாஸ் காட்டலாம்” சீன அதிபரிடம் எடுத்துச் சொன்ன பிரதமர் மோடி - நட்பு முக்கியம்

PM Modi-Xi Jinping: சீன அதிபர் ஜி ஜிங் பிங்கை சந்தித்த இந்திய பிரதமர் மோடி, இருநாட்டு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

PM Modi-Xi Jinping: சீன அதிபர் ஜி ஜிங் பிங் உடனனான பேச்சுவார்த்தையின் போது எல்லையில் அமைதியை நிலைநாட்டுவது, நேரடி விமான சேவை போன்ற பல விஷயங்களை பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

சீன அதிபருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை:

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக தியான்ஜின் சென்ற பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜிங் பிங்கை சந்தித்து  பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். கடந்த சில வருடங்களாக ஆசியாவின் மிகப்பெரிய நாடுகளான இந்தியா மற்றும் சீனா இடையே நிலவி வரும் பதற்றத்திற்கு மத்தியில் அரங்கேறியுள்ள சந்திப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கஜானில் நடந்த சந்திப்பிற்குப் பிறகு இருநாட்டு தலைவர்களும் சந்தித்துக் கொண்டனர். அப்போது வளர்ச்சியில் இருவரும் வளர்ச்சியில் கூட்டாளிகளே தவிர போட்டியாளர்கள் அல்ல என்பதை மீண்டும் உறுதி செய்தனர். தங்களுக்கு இடையேயான வித்தியாசங்கள் பிரச்னைகளாகக் கூடாது எனவும் இரு நாட்டு தலைவர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

நேரடி விமான சேவை

இருநாடுகளுக்கு இடையேயான உறவை மேம்படுத்தும் விதமாக, இந்தியா மற்றும் சீனா இடையே மீண்டும் நேரடி விமான சேவை தொடங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்தார். ஆனால், அதற்கான உறுதியான தேதி குறித்து எந்த தகவலும் இல்லை. கொரோனா காலத்தில் நேரடி விமான சேவை தடை செய்யப்பட்டு, சிங்கப்பூர் அல்லது ஹாங் காங் வழியே பயணம் செய்ய அறிவுறுத்தப்பட்டனர். கைலாஷ் மன்ச்ரோவர் யாத்ரா மற்றும் சுற்றுலா விசாக்களை வழங்குவதை குறித்தும் இருநாட்டு தலைவர்களும் வலியுறுத்தியுள்ளனர். இந்த சேவைகளுக்கு பகுதி அளவும் அண்மையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அதனை விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுவும் 2020ம் ஆண்டில் கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்டது.

”உறவு மேம்பட அமைதி அவசியம்”

இருநாடுகளும் சுயாட்சியை பின்பற்ற வேண்டும் என்றும் தங்கள் இடையேயான உறவை மூன்றாவது நாட்டின் பார்வையில் பார்கக்க்கூடாது என்றும், எல்லையில் அமைதி நிலைநாட்டப்பட வேண்டும் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். இந்தியாவும் சீனாவும் நண்பர்களாகவும் நல்ல அண்டை நாடுகளாகவும்" தொடர்ந்து இருக்க வேண்டும் என்றும் சீன அதிபர்ஜீ ஜிங்பிங் வலியுறுத்தினார். இருவரும் உலகளாவிய தெற்கின் முக்கியமான உறுப்பினர்கள் என்றும், இரு நாடுகளின் குடிமக்களின் நல்வாழ்வை மேம்படுத்தும் பொறுப்பை இரு தரப்பும் ஏற்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.  எல்லைப் பிரச்சினை நம்மிடையேயான ஒட்டுமொத்த உறவை வரையறுக்க இந்தியாவும் சீனாவும் அனுமதிக்கக்கூடாது என்றும், அமைதியை பராமரிக்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார். இரு நாடுகளும் தங்கள் உறவுகளை ஒரு மூலோபாய மற்றும் நீண்டகால கண்ணோட்டத்தில் கையாள வேண்டும் என்றும், நமது இருதரப்பு உறவுகளின் நிலையான, ஆரோக்கியமான வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டும் என்றும்ஜி ஜிங்பிங்வலியுறுத்தினார்.

முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு:

அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கைகளால் இந்தியாவின் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சீன அதிபர் உடனான இந்த சந்திப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.  உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட இருநாடுகள் இடையேயான உறவு மேம்பட்டால், இருநாட்டிற்கும் நன்மை பயக்கும். சீன நிறுவனங்கள் இந்திய சந்தையில் முதலீட்டை பெருக்கி பலன பெற முடியும்,. அதேநேரம், அரிய வகை கனிமங்கள், உரங்கள் மற்றும் சுரங்கப் பணிகளுக்கான இயந்திரங்கள் ஆகியவற்றில் இந்தியாவிற்கு ஆதரவு அளிப்போம் என சீனா உறுதி அளித்துள்ளது. 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Jana Nayagan Audio Launch Live: பாட்டு பாடி மகனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய் அம்மா ஷோபா
Jana Nayagan Audio Launch Live: பாட்டு பாடி மகனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய் அம்மா ஷோபா
TVK Vijay: மீண்டும் நடிக்க வருகிறாரா விஜய்? தீர்மானிக்கப்போவது எது தெரியுமா?
TVK Vijay: மீண்டும் நடிக்க வருகிறாரா விஜய்? தீர்மானிக்கப்போவது எது தெரியுமா?
EPS: நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா? மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி சவால்!
EPS: நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா? மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி சவால்!
TVK Sengottaiyan: எனது உடலில் ஓடும் ஒவ்வொரு சொட்டு ரத்தமும் விஜய்க்குதான்.! டோட்டலாக தளபதி வெறியராக மாறிய செங்கோட்டையன்
எனது உடலில் ஓடும் ஒவ்வொரு சொட்டு ரத்தமும் விஜய்க்குதான்.! டோட்டலாக தளபதி வெறியராக மாறிய செங்கோட்டையன்
ABP Premium

வீடியோ

Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்
தஞ்சாவூர் டூ சென்னை.. ஹெலிகாப்டரில் பறந்து வந்த இதயம்! திக் திக் நிமிடங்கள்!
இடைக்கால ஜாமீன் READYகுஷியில் சவுக்கு சங்கர் சாட்டையை சுழற்றிய HIGH COURT | Savukku Shankar
GK Mani Expelled from PMK | ‘’ஜி.கே.மணி GET OUT’’தூக்கியடித்த அன்புமணி பாமகவில் இருந்து நீக்கம்!
மூர்த்தியுடன் ரகசிய DEAL? தவெக மா.செ மீது புகார்! சொந்த கட்சியினரே போர்க்கொடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Jana Nayagan Audio Launch Live: பாட்டு பாடி மகனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய் அம்மா ஷோபா
Jana Nayagan Audio Launch Live: பாட்டு பாடி மகனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய் அம்மா ஷோபா
TVK Vijay: மீண்டும் நடிக்க வருகிறாரா விஜய்? தீர்மானிக்கப்போவது எது தெரியுமா?
TVK Vijay: மீண்டும் நடிக்க வருகிறாரா விஜய்? தீர்மானிக்கப்போவது எது தெரியுமா?
EPS: நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா? மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி சவால்!
EPS: நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா? மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி சவால்!
TVK Sengottaiyan: எனது உடலில் ஓடும் ஒவ்வொரு சொட்டு ரத்தமும் விஜய்க்குதான்.! டோட்டலாக தளபதி வெறியராக மாறிய செங்கோட்டையன்
எனது உடலில் ஓடும் ஒவ்வொரு சொட்டு ரத்தமும் விஜய்க்குதான்.! டோட்டலாக தளபதி வெறியராக மாறிய செங்கோட்டையன்
Tamilnadu Round Up: வாக்காளர் சிறப்பு, புதிய உச்சத்தில் தங்கம்,வெள்ளி, விஜய் ஜனநாயகன் ஆடியோ லாஞ்ச்- தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: வாக்காளர் சிறப்பு, புதிய உச்சத்தில் தங்கம்,வெள்ளி, விஜய் ஜனநாயகன் ஆடியோ லாஞ்ச்- தமிழ்நாட்டில் இதுவரை
ராணிப்பேட்டை: குரோமியம் கழிவுகள், கஞ்சா விற்பனை, உரிமைத் தொகை... சௌமியா அன்புமணி பரபரப்பு குற்றச்சாட்டு!
ராணிப்பேட்டை: குரோமியம் கழிவுகள், கஞ்சா விற்பனை, உரிமைத் தொகை... சௌமியா அன்புமணி பரபரப்பு குற்றச்சாட்டு!
ENG vs AUS: டி20-ஐ விட விறுவிறுப்பு.. இரண்டே நாளில் முடிந்த டெஸ்ட்.. ஆஸ்திரேலியாவை பழிவாங்கிய இங்கிலாந்து!
ENG vs AUS: டி20-ஐ விட விறுவிறுப்பு.. இரண்டே நாளில் முடிந்த டெஸ்ட்.. ஆஸ்திரேலியாவை பழிவாங்கிய இங்கிலாந்து!
Ration Shop: ரேஷன் கடையில் உணவு பொருட்கள்.! புதிய நடைமுறை அறிவிப்பு- ஊழியர்களுக்கு பறந்த உத்தரவு
ரேஷன் கடையில் உணவு பொருட்கள்.! புதிய நடைமுறை அறிவிப்பு- ஊழியர்களுக்கு பறந்த உத்தரவு
Embed widget