மேலும் அறிய

PM Modi-Xi Jinping: ”பீஸ் வந்தா மாஸ் காட்டலாம்” சீன அதிபரிடம் எடுத்துச் சொன்ன பிரதமர் மோடி - நட்பு முக்கியம்

PM Modi-Xi Jinping: சீன அதிபர் ஜி ஜிங் பிங்கை சந்தித்த இந்திய பிரதமர் மோடி, இருநாட்டு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

PM Modi-Xi Jinping: சீன அதிபர் ஜி ஜிங் பிங் உடனனான பேச்சுவார்த்தையின் போது எல்லையில் அமைதியை நிலைநாட்டுவது, நேரடி விமான சேவை போன்ற பல விஷயங்களை பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

சீன அதிபருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை:

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக தியான்ஜின் சென்ற பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜிங் பிங்கை சந்தித்து  பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். கடந்த சில வருடங்களாக ஆசியாவின் மிகப்பெரிய நாடுகளான இந்தியா மற்றும் சீனா இடையே நிலவி வரும் பதற்றத்திற்கு மத்தியில் அரங்கேறியுள்ள சந்திப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கஜானில் நடந்த சந்திப்பிற்குப் பிறகு இருநாட்டு தலைவர்களும் சந்தித்துக் கொண்டனர். அப்போது வளர்ச்சியில் இருவரும் வளர்ச்சியில் கூட்டாளிகளே தவிர போட்டியாளர்கள் அல்ல என்பதை மீண்டும் உறுதி செய்தனர். தங்களுக்கு இடையேயான வித்தியாசங்கள் பிரச்னைகளாகக் கூடாது எனவும் இரு நாட்டு தலைவர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

நேரடி விமான சேவை

இருநாடுகளுக்கு இடையேயான உறவை மேம்படுத்தும் விதமாக, இந்தியா மற்றும் சீனா இடையே மீண்டும் நேரடி விமான சேவை தொடங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்தார். ஆனால், அதற்கான உறுதியான தேதி குறித்து எந்த தகவலும் இல்லை. கொரோனா காலத்தில் நேரடி விமான சேவை தடை செய்யப்பட்டு, சிங்கப்பூர் அல்லது ஹாங் காங் வழியே பயணம் செய்ய அறிவுறுத்தப்பட்டனர். கைலாஷ் மன்ச்ரோவர் யாத்ரா மற்றும் சுற்றுலா விசாக்களை வழங்குவதை குறித்தும் இருநாட்டு தலைவர்களும் வலியுறுத்தியுள்ளனர். இந்த சேவைகளுக்கு பகுதி அளவும் அண்மையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அதனை விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுவும் 2020ம் ஆண்டில் கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்டது.

”உறவு மேம்பட அமைதி அவசியம்”

இருநாடுகளும் சுயாட்சியை பின்பற்ற வேண்டும் என்றும் தங்கள் இடையேயான உறவை மூன்றாவது நாட்டின் பார்வையில் பார்கக்க்கூடாது என்றும், எல்லையில் அமைதி நிலைநாட்டப்பட வேண்டும் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். இந்தியாவும் சீனாவும் நண்பர்களாகவும் நல்ல அண்டை நாடுகளாகவும்" தொடர்ந்து இருக்க வேண்டும் என்றும் சீன அதிபர்ஜீ ஜிங்பிங் வலியுறுத்தினார். இருவரும் உலகளாவிய தெற்கின் முக்கியமான உறுப்பினர்கள் என்றும், இரு நாடுகளின் குடிமக்களின் நல்வாழ்வை மேம்படுத்தும் பொறுப்பை இரு தரப்பும் ஏற்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.  எல்லைப் பிரச்சினை நம்மிடையேயான ஒட்டுமொத்த உறவை வரையறுக்க இந்தியாவும் சீனாவும் அனுமதிக்கக்கூடாது என்றும், அமைதியை பராமரிக்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார். இரு நாடுகளும் தங்கள் உறவுகளை ஒரு மூலோபாய மற்றும் நீண்டகால கண்ணோட்டத்தில் கையாள வேண்டும் என்றும், நமது இருதரப்பு உறவுகளின் நிலையான, ஆரோக்கியமான வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டும் என்றும்ஜி ஜிங்பிங்வலியுறுத்தினார்.

முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு:

அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கைகளால் இந்தியாவின் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சீன அதிபர் உடனான இந்த சந்திப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.  உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட இருநாடுகள் இடையேயான உறவு மேம்பட்டால், இருநாட்டிற்கும் நன்மை பயக்கும். சீன நிறுவனங்கள் இந்திய சந்தையில் முதலீட்டை பெருக்கி பலன பெற முடியும்,. அதேநேரம், அரிய வகை கனிமங்கள், உரங்கள் மற்றும் சுரங்கப் பணிகளுக்கான இயந்திரங்கள் ஆகியவற்றில் இந்தியாவிற்கு ஆதரவு அளிப்போம் என சீனா உறுதி அளித்துள்ளது. 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Iran Dubai Airport Attack: துபாயை துவம்சமாக்கும் ஈரான்; பற்றி எரியும் எண்ணெய் கிடங்கு; அலறும் அமெரிக்கா.!
துபாயை துவம்சமாக்கும் ஈரான்; பற்றி எரியும் எண்ணெய் கிடங்கு; அலறும் அமெரிக்கா.!
Top 10 News Headlines: சிபிஐ-யிடம் விஜய் கோரிக்கை, ட்ரம்ப்புக்கு நோ சொன்ன நாடுகள், நெதன்யாகு புதிய வீடியோ போலியா.? - 11 மணி செய்திகள்
சிபிஐ-யிடம் விஜய் கோரிக்கை, ட்ரம்ப்புக்கு நோ சொன்ன நாடுகள், நெதன்யாகு புதிய வீடியோ போலியா.? - 11 மணி செய்திகள்
Towel Dance: துண்டை கட்டிக்கொண்டு ஆடிய பள்ளி மாணவிகள்.. இணையத்தை ஆட்டம் காண வைத்த வீடியோ!
Towel Dance: துண்டை கட்டிக்கொண்டு ஆடிய பள்ளி மாணவிகள்.. இணையத்தை ஆட்டம் காண வைத்த வீடியோ!
சம்ருதி SM 46 லாட்டரி: ரூ.1 கோடி பரிசு யாருக்கு? அதிர்ஷ்டசாலி யார்? உடனே தெரிந்து கொள்ளுங்கள்!
சம்ருதி SM 46 லாட்டரி: ரூ.1 கோடி பரிசு யாருக்கு? அதிர்ஷ்டசாலி யார்? உடனே தெரிந்து கொள்ளுங்கள்!
ABP Premium

வீடியோ

Vilathikulam | விளாத்திகுளம் மாணவி கொலை! 27 வயது இளைஞர் மீது சந்தேகம்! குற்றவாளியை நெருங்கிய POLICE?
TVK BJP Alliance | விஜய் பாஜகவுடன் கூட்டணி? ராமதாஸ் உடன் பேச்சுவார்த்தையா? உண்மைகளை உடைத்த தவெக
Thoppai Ganesan Encounter | தேர்தல் நேரத்தில் ENCOUNTER!யார் இந்த தொப்பை கணேசன்?பரபரக்கும் சென்னை
Vijay CBI Investigation | 7 மணிநேர CBI விசாரணை HAPPY-ஆ வெளியே வந்த விஜய்! பாஜக-வுக்கு SUCCESSஆ ஏமாற்றமா?
Tamilnadu Election | அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிகள் கட்டுப்பாடுகள் என்னென்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iran Dancing Missile: ஈரானின் ‘டான்ஸிங் ரோஸ்.!‘; முதல் முறையாக செஜ்ஜில் ஏவுகணையை வீசி தாக்குதல்; சிதறிய இஸ்ரேல்
ஈரானின் ‘டான்ஸிங் ரோஸ்.!‘; முதல் முறையாக செஜ்ஜில் ஏவுகணையை வீசி தாக்குதல்; சிதறிய இஸ்ரேல்
Ration Card Fingerprint: ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு! கைரேகை பதிவு கட்டாயம்- தவறினால் என்ன நடக்கும்?
Ration Card Fingerprint: ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு! கைரேகை பதிவு கட்டாயம்- தவறினால் என்ன நடக்கும்?
TN Election: தேர்தல் நிதிக்காக நாடகம் போட்ட கருணாநிதி - 1967ல் நடந்தது என்ன?
TN Election: தேர்தல் நிதிக்காக நாடகம் போட்ட கருணாநிதி - 1967ல் நடந்தது என்ன?
Stalin warns DMK leaders : குழப்பம் செஞ்சா அவ்வளவு தான்.! எந்த பதவியாக இருந்தாலும் பார்க்க மாட்டேன்- சாட்டையை சுழற்றிய ஸ்டாலின்
கட்சியில் குழப்பம் செஞ்சா அவ்வளவு தான்.! எந்த பதவியாக இருந்தாலும் பார்க்க மாட்டேன்- சாட்டையை சுழற்றிய ஸ்டாலின்
IPL 2026: ஆர்சிபி ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. வந்தது அனுமதி..28 ஆம் தேதி சம்பவம் இருக்கு.. ரெடியா இருங்க கோலி ரசிகர்களே
ஆர்சிபி ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. வந்தது அனுமதி..28 ஆம் தேதி சம்பவம் இருக்கு.. ரெடியா இருங்க கோலி ரசிகர்களே
Vishwanath & Sons Teaser : விரட்டி விரட்டி காதலிக்கும் மமிதா..ஒதுங்கி போகும் சூர்யா..விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் டீசர் இதோ
Vishwanath & Sons Teaser : விரட்டி விரட்டி காதலிக்கும் மமிதா..ஒதுங்கி போகும் சூர்யா..விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் டீசர் இதோ
தனியார் மருத்துவமனை டாக்டரை ஏமாற்றி ரூ.6.90 லட்சம் மோசடி: சைபர் க்ரைம் போலீசார் விசாரணை
தனியார் மருத்துவமனை டாக்டரை ஏமாற்றி ரூ.6.90 லட்சம் மோசடி: சைபர் க்ரைம் போலீசார் விசாரணை
TN Election 2026: உஷார்.. இனி கூகுள் பேவும் கண்காணிக்கப்படும், ரூ.1.26 கோடி பறிமுதல்- அதிரடி காட்டிய அர்ச்சனா!
TN Election 2026: உஷார்.. இனி கூகுள் பேவும் கண்காணிக்கப்படும், ரூ.1.26 கோடி பறிமுதல்- அதிரடி காட்டிய அர்ச்சனா!
Embed widget