மேலும் அறிய

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய பாகிஸ்தான்? ஸ்ரீநகரில் குண்டுவெடிப்பு.. உச்சக்கட்ட பதற்றம்

ஜம்மு காஷ்மீரில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் ட்ரோன்களை அதிநவீன தொழில்நுட்பங்களை கொண்டு இந்தியா தாக்கி அழித்து வருகிறது.

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, ஜம்மு காஷ்மீருக்கு ட்ரோன்களை அனுப்பி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் ட்ரோன்களை அதிநவீன தொழில்நுட்பங்களை கொண்டு இந்தியா தாக்கி அழித்து வருகிறது. ட்ரோன் தாக்குதல் மட்டும் இன்றி ஸ்ரீநகரில் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டுள்ளது. இதில், பலர் உயிரிழந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. 

போர் நிறுத்த ஒப்பந்தத்தை காற்றில் பறக்கவிட்ட பாகிஸ்தான்!

Image

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா, "போர் நிறுத்த ஒப்பந்தம் என்ன ஆனது? ஸ்ரீநகரில் பல்வேறு இடங்களில் வெடி சத்தம் கேட்டு வருகிறது" என குறிப்பிட்டுள்ளார்.

இருளில் மூழ்கிய எல்லைப்பகுதிகள்:

உதம்பூருக்கு அனுப்பப்பட்ட ட்ரோன்களை இந்தியா ராணுவம் தாக்கி அழிக்கும் காட்சியினை ஏஎன்ஐ (ANI) செய்தி வெளியிட்டுள்ளது. தாக்குதலை தொடர்ந்து உதம்பூர் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானின் பார்மர், ஜெய்சால்மர், பஞ்சாபின் ஃபிரோஸ்பூர், மோகா, பதான்கோட் ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. 

காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா அதிரடி நடவடிக்கையில் இறங்கியது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தாக்குதல் நடத்தியதில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்திருந்தார்.

இதற்கு பழிவாங்கும் நோக்கில் இந்தியாவின் வடக்கு மற்றும் மேற்கு எல்லைப்பகுதிகளில் ட்ரோன்களையும் ஏவுகணைகளையும் அனுப்பி பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயற்சி செய்தது. இஸ்ரேல், ரஷியா, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களை பயன்படுத்தி, பாகிஸ்தானின் முயற்சியை இந்தியா தவிடுபொடியாக்கியது. தொடர்ந்து இரண்டு நாளாக நேற்று பாகிஸ்தான் நடத்திய தாக்குதல் முயற்சியை இந்தியா முறியடித்தது.

Image

காஷ்மீரில் உச்சக்கட்ட பதற்றம்:

இதையடுத்து, தொடர் பேச்சுவார்த்தைக்கு பிறகு, போர் நிறுத்தம் செய்வதாக இருநாடுகள் அறிவித்தன. போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு ஒரு சில மணி நேரங்களிலேயே, காஷ்மீரில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில், எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மேலும், 7 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் ட்ரோன்கள் தென்பட்டதாக அம்மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்வி தெரிவித்துள்ளார். இதையடுத்து, மாவட்டம் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என்றும் அச்சப்பட வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

 

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

திடீரென மாமல்லபுரம் வரும் அமித் ஷா.. நேரில் சந்திக்கும் தென் மாநில முதல்வர்கள்! நடப்பது என்ன?
திடீரென மாமல்லபுரம் வரும் அமித் ஷா.. நேரில் சந்திக்கும் தென் மாநில முதல்வர்கள்! நடப்பது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
கேப் டிரைவருக்கு 100 ஆண்டு ஓட்ட தடை.. ரேபிடோவின் அநியாயம்.. கொதிக்கும் நெட்டிசன்கள் - நடந்தது என்ன?
கேப் டிரைவருக்கு 100 ஆண்டு ஓட்ட தடை.. ரேபிடோவின் அநியாயம்.. கொதிக்கும் நெட்டிசன்கள் - நடந்தது என்ன?
ஓணம் பண்டிகை: சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!
ஓணம் பண்டிகை: சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
TN Weather News: சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
TN MTC Job: தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
Gold and silver rate today : இன்று நகை வாங்க சூப்பர் சான்ஸ்.! ஒரே நாளில் திடீர் ட்விஸ்ட்.- இன்றைய விலை நிலவரம் இதோ..
இன்று நகை வாங்க சூப்பர் சான்ஸ்.! ஒரே நாளில் திடீர் ட்விஸ்ட்.- இன்றைய விலை நிலவரம் இதோ..
Free Health Insurance: அடி தூள்.! இலவசமாக ரூ.25 லட்சத்திற்கு மருத்துவ காப்பீடு- விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள் என்ன?
அடி தூள்.! இலவசமாக ரூ.25 லட்சத்திற்கு மருத்துவ காப்பீடு- விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள் என்ன?
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Skoda Superb: 40KM மைலேஜ், 5 ஸ்டார் ரேட்டிங், ப்ரீமியம் டிசைன், வசதிகள் - ஸ்கோடா சூப்பர்ப் வந்தாச்சு - டெலிவரி எப்போ?
40KM மைலேஜ், 5 ஸ்டார் ரேட்டிங், ப்ரீமியம் டிசைன், வசதிகள் - ஸ்கோடா சூப்பர்ப் வந்தாச்சு - டெலிவரி எப்போ?
Embed widget