மேலும் அறிய

Arvind Kejriwal: ”பாகிஸ்தானியர்களுக்கு பாதுகாப்பு; விவசாயிகளுக்கு துப்பாக்கிச்சூடா “- அரவிந்த் கெஜ்ரிவால் காட்டம்

Arvind Kejriwal Slams CAA: குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கருத்து தெரிவித்த அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டின் முன் பாகிஸ்தான் குடியேறிகள் போராட்டம் நடத்தியதற்கு, கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்தார்.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கருத்து தெரிவித்த அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டின் முன் சிஏஏ ஆதாரவாளர்கள் போராட்டம் நடத்தியதற்கு, ”பாகிஸ்தானியர்களுக்கு பாதுகாப்பு; விவசாயிகளுக்கு துப்பாக்கிச்சூடா என கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்தார். 

குடியுரிமை திருத்த சட்டம் 2019:

மத்திய அரசு சில தினங்களுக்கு முன்பு குடியுரிமை திருத்த சட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்தியது. இதையடுத்து, இச்சட்ட திருத்திற்கு நேர்மறையான மற்றும் எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்தன.

குடியுரிமை திருத்த சட்டமானது, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இருந்து வெளியேறி இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினர்களான இந்து, சீக்கியர்கள், ஜைனர்கள், பௌத்தர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்கள் ஆகியோர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வழிவகை செய்கிறது. இச்சட்டமானது, சில நாட்களுக்கு முன்பு நாடு முழுவதும் அமலுக்கு வந்தது. இதையடுத்து, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் , மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட பல மாநில தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

அரவிந்த் கெஜ்ரிவால் கடும் கண்டனம்:

இச்சட்டம் குறித்து கடும் கண்டனம் தெரிவித்த கெஜ்ரிவால்,  குடியுரிமை திருத்த சட்டமானது, நாட்டை பாதுகாப்பற்றதாகவும் மற்றும் சட்டம்-ஒழுங்கு நிலையை சீர்குலைக்கும் சூழ்நிலையை உருவாக்கும். மற்ற  நாடுகளில் இருந்து  வரும் சிறுபான்மையினருக்கு, இந்திய நாட்டின் குடிமக்கள் செலுத்துவோர் வரி பணத்தை செலவிடுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று கூறினார்.

மேலும் பாகிஸ்தானியர்களை எங்களது வீடுகளில் குடியேற மத்திய அரசாங்கம் விரும்புகிறது என்றும், எங்கள் குடும்பங்கள் மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்பட வேண்டிய இந்திய அரசின் பணமானது, பாகிஸ்தானியர்களின் குடியேற்றத்திற்கு பயன்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

பாகிஸ்தான் குடியேறிகள் போராட்டம்:

இந்நிலையில் பாகிஸ்தான் மற்றும் ஆஃப்கானிஸ்தான் நாடுகளிலிருந்து வெளியேறிய இந்துக்கள், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இப்போராட்டத்துக்கு கண்டனம் தெரிவித்த கெஜ்ரிவால், ஏபிபி வெளியிட்ட செய்தியை மேற்கோள்காட்டி ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில் தெரிவித்ததாவது,  பாகிஸ்தானியர்களுக்கு காவல்துறையினுடைய பாதுகாப்பு மற்றும் மரியாதையுடன், எனது வீட்டிற்கு வெளியே ஆர்ப்பாட்டம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால் நம் நாட்டின் விவசாயிகள் டெல்லிக்கு வருவதற்கு கூட அனுமதிக்கப்படுவதில்லை, இந்திய விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகள், தடிகள் மற்றும் துப்பாக்கிகளை பயன்படுத்துகின்றனர் என்று தெரிவித்தார்.  

தலைப்பு செய்திகள்

இந்திய ரயில்வே புதிய அறிவிப்பு!.. கடைசி நேர டிக்கெட் புக்கிங்கிற்கு அனுமதி!.விபரம் இதோ..
இந்திய ரயில்வே புதிய அறிவிப்பு!.. கடைசி நேர டிக்கெட் புக்கிங்கிற்கு அனுமதி!.விபரம் இதோ..
வணிக சிலிண்டர் விலை குறைந்தது... ஆனால் வீட்டு LPG விலையில் மாற்றமா? இதோ பதில்!!!
வணிக சிலிண்டர் விலை குறைந்தது... ஆனால் வீட்டு LPG விலையில் மாற்றமா? இதோ பதில்!!!
Domestic Violence: மனைவியின் மென்டல் டார்ச்சர்.. ஒரே வருடத்தில் 27 வயது இளைஞர் மரணம் - லாஸ்ட்ல ட்விஸ்ட்
மனைவியின் மென்டல் டார்ச்சர்.. ஒரே வருடத்தில் 27 வயது இளைஞர் மரணம் - லாஸ்ட்ல ட்விஸ்ட்
Commercial Cooking Gas Price: காலையிலேயே குஷி.! அதிரடியாக குறைந்தது சிலிண்டர் விலை- எவ்வளவு தெரியுமா.?
காலையிலேயே குஷி.! அதிரடியாக குறைந்தது சிலிண்டர் விலை- எவ்வளவு தெரியுமா.?

வீடியோ

DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
​
​வீரப்பன் மட்டும் உயிரோடு இருந்திருந்தா..! மேகதாது விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் அதிரடி பேச்சு!
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
அரசு பள்ளிகளில்
அரசு பள்ளிகளில் "மகிழ் முற்றம்"- மாணவர் பாராளுமன்றம்: எதிர்கால தலைவர்கள் உருவாகும் களம்!
"நான் இணைவது என்ன குதிரை பேரமா?" - காட்டமாக கேள்வி எழுப்பிய ஒரத்தநாடு மா.சேகர்
Embed widget