மேலும் அறிய

Odisha Train Accident: ஒடிசா ரயில் விபத்து.. சிக்கிய மூன்று அதிகாரிகள்.. சிபிஐ குற்றப்பத்திரிகையில் பகீர்

இந்திய வரலாற்றின் மோசமான விபத்தாக ஒடிசா ரயில் விபத்து கருதப்படுகிறது.

கடந்த ஜூன் மாதம் 2ஆம் தேதி, ஒடிசா மாநிலம் பாலசோரில் மூன்று ரயில்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் நாட்டு மக்களை சோகத்தில் ஆழ்த்தியது. பஹானாகா பஜார் ரயில் நிலையம் அருகே ஷாலிமார்-சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூரு-ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் மற்றும் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் ஆகியவை விபத்துக்குள்ளானது.

உலகை சோகத்தில் ஆழ்த்திய ஒடிசா ரயில் விபத்து:

இதில், 293 பேர் உயிரிழந்தனர். 1000க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தொடர் விசாரணை நடந்து வந்த நிலையில், சிபிஐ அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டது.

இந்திய ரயில்வே துறையில் பணியாற்றி வரும் மூன்று அதிகாரிகளை சிபிஐ சமீபத்தில் கைது செய்தது. இந்த விபத்துக்கு சதி செயல் ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில்,  ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட மூன்று ரயில்வே அதிகாரிகளுக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

ரயில் சிக்னல் பிரிவின் பொறுப்பாளரும் மூத்த பொறியாளருமான அருண் குமார் மஹந்தா, சிக்னல் பிரிவின் மூத்த பொறியாளர் அமீர் கான் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர் பப்பு குமார் யாதவ் ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை:

இதுகுறித்து மூத்த அதிகாரி பேசுகையில், "இந்திய தண்டனை சட்டப் பிரிவு 304 (மரணத்தை உண்டாக்கும் நோக்கில் செயல்பட்டது), 201 (ஆதாரங்களை அழித்தது, தவறான தகவல்களை அளித்தது), ரயில்வே சட்டப் பிரிவு 153 (ரயிலில் பயணிக்கும் நபர்களின் பாதுகாப்பிற்கு வேண்டுமென்றே ஆபத்தை விளைவிப்பது) ஆகியவற்றின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது" என்றார்.

இதுகுறித்து மூத்த சிபிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், "மூவர் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் கிடைத்துள்ளன" என்றார்.

முன்னதாக, பாலசோர் காவல் நிலையத்தில் ரயில்வே காவல்துறையால் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில், இந்திய தண்டனை சட்டப் பிரிவுகள் 304A (அலட்சியமாக செயல்பட்டு மரணத்தை விளைவித்தது), 337 (அலட்சியமான செயலால் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தியது), 338 (கடுமையான காயத்தை ஏற்படுத்துதல்) ஆகியவற்றின் கீழ் சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது.

பின்னர் மூவருக்கும் எதிரான ஆதாரங்கள் கிடைத்ததை அடுத்து, இந்திய தண்டனை சட்டப் பிரிவு 304 இன் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதன் கீழ் 10 ஆண்டுகள் வரை தண்டனை வழங்கப்படும். விசாரணையில், விபத்து நடந்த இடத்தை தடயவியல் நிபுணர்களுடன் சிபிஐ நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தது. சிபிஐ அதிகாரிகள், ரயில்வே துறையிடம் இருந்து ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் பதிவுகளையும் சேகரித்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
6133
Active
6237
Recovered
65
Deaths
Last Updated: Sun 8 June, 2025 at 03:09 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

EPS ADMK: அடிச்சு தூக்கும் பாஜக, மதிக்காத அமித் ஷா? அதிமுகவை காப்பாற்றுவாரா? விட்டுக்கொடுப்பாரா ஈபிஎஸ்?
EPS ADMK: அடிச்சு தூக்கும் பாஜக, மதிக்காத அமித் ஷா? அதிமுகவை காப்பாற்றுவாரா? விட்டுக்கொடுப்பாரா ஈபிஎஸ்?
Lending Rates: அடி தூள்..! கடன்களுக்கான வட்டி குறைப்பு, எந்தெந்த வங்கிகளில் தெரியுமா? ரூ.37 ஆயிரம் வரை லாபம்
Lending Rates: அடி தூள்..! கடன்களுக்கான வட்டி குறைப்பு, எந்தெந்த வங்கிகளில் தெரியுமா? ரூ.37 ஆயிரம் வரை லாபம்
French Open 2025: 43 வருட சாதனை முறியடிப்பு... 5.29 நிமிடங்கள் நீடித்த இறுதிப்போட்டி.. சாம்பியனான கார்லோஸ் அல்கராஸ்
French Open 2025: 43 வருட சாதனை முறியடிப்பு... 5.29 நிமிடங்கள் நீடித்த இறுதிப்போட்டி.. சாம்பியனான கார்லோஸ் அல்கராஸ்
Tata Harrier EV: கிங்குடா..! இந்திய கார்களில் இதுவரை இல்லாத அம்சங்கள் - சம்மன் மோட், ஹாரியரில் டாடா சம்பவம்
Tata Harrier EV: கிங்குடா..! இந்திய கார்களில் இதுவரை இல்லாத அம்சங்கள் - சம்மன் மோட், ஹாரியரில் டாடா சம்பவம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

மோடியை திட்டிய ராகுல்! எதிர்த்து நிற்கும் சசி தரூர்! ஷாக்கில் காங்கிரஸ் கட்சியினர்TVK Vijay Alliance | பாமக - தேமுதிக  - தவெக! உருவாகும் மெகா கூட்டணி? விஸ்வரூபம் எடுக்கும் விஜய்தங்கத்தின் மதிப்பில் 85% கடன் அள்ளிக் கொடுக்க RBI அனுமதி  பிரச்னை ஓவர்..! RBI Gold Loan Rules”வைரமுத்து சமரசம் பேசுனாரு என்கிட்ட ஆதாரம் இருக்கு” சீறிய சின்மயி Chinmayi on Vairamuthu

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS ADMK: அடிச்சு தூக்கும் பாஜக, மதிக்காத அமித் ஷா? அதிமுகவை காப்பாற்றுவாரா? விட்டுக்கொடுப்பாரா ஈபிஎஸ்?
EPS ADMK: அடிச்சு தூக்கும் பாஜக, மதிக்காத அமித் ஷா? அதிமுகவை காப்பாற்றுவாரா? விட்டுக்கொடுப்பாரா ஈபிஎஸ்?
Lending Rates: அடி தூள்..! கடன்களுக்கான வட்டி குறைப்பு, எந்தெந்த வங்கிகளில் தெரியுமா? ரூ.37 ஆயிரம் வரை லாபம்
Lending Rates: அடி தூள்..! கடன்களுக்கான வட்டி குறைப்பு, எந்தெந்த வங்கிகளில் தெரியுமா? ரூ.37 ஆயிரம் வரை லாபம்
French Open 2025: 43 வருட சாதனை முறியடிப்பு... 5.29 நிமிடங்கள் நீடித்த இறுதிப்போட்டி.. சாம்பியனான கார்லோஸ் அல்கராஸ்
French Open 2025: 43 வருட சாதனை முறியடிப்பு... 5.29 நிமிடங்கள் நீடித்த இறுதிப்போட்டி.. சாம்பியனான கார்லோஸ் அல்கராஸ்
Tata Harrier EV: கிங்குடா..! இந்திய கார்களில் இதுவரை இல்லாத அம்சங்கள் - சம்மன் மோட், ஹாரியரில் டாடா சம்பவம்
Tata Harrier EV: கிங்குடா..! இந்திய கார்களில் இதுவரை இல்லாத அம்சங்கள் - சம்மன் மோட், ஹாரியரில் டாடா சம்பவம்
DMK Slams Amit Shah: ”தமிழர்களை கேவலப்படுத்திய மோடி” அமித் ஷா என்னமா உழைக்கிறாரு - திமுக தடாலடி அட்டாக்
DMK Slams Amit Shah: ”தமிழர்களை கேவலப்படுத்திய மோடி” அமித் ஷா என்னமா உழைக்கிறாரு - திமுக தடாலடி அட்டாக்
தமிழில் பேச முடியவில்லை என்பதை நினைத்து வருந்துகிறேன் -  மதுரையில் அமித்ஷா உருக்கம் !
தமிழில் பேச முடியவில்லை என்பதை நினைத்து வருந்துகிறேன் - மதுரையில் அமித்ஷா உருக்கம் !
BJP's South Plan: பாஜக-வின் தெற்கத்தி பிளான்; ஐடியா உடன் வந்த அமித் ஷா - பலிக்குமா தேர்தல் திட்டம்.?
பாஜக-வின் தெற்கத்தி பிளான்; ஐடியா உடன் வந்த அமித் ஷா - பலிக்குமா தேர்தல் திட்டம்.?
TNEA 2025:பொறியியல் மாணவர் சேர்க்கை; சான்றிதழ் பதிவேற்றம், தரவரிசை பட்டியல்- A- Z அலசல்!
TNEA 2025:பொறியியல் மாணவர் சேர்க்கை; சான்றிதழ் பதிவேற்றம், தரவரிசை பட்டியல்- A- Z அலசல்!
Embed widget