மேலும் அறிய

ராஜஸ்தானில் குழந்தைகளை அதிகம் தாக்கும் கொரோனா தொற்று; 3-வது அலையின் பாதிப்பா? அச்சத்தில் மக்கள்..

ராஜஸ்தான் மாநிலத்தில் குழந்தைகள் பெரும்பாலும் வைரஸ் தொற்றினால் பாதிப்படைந்துவருகின்றனர்.

ராஜஸ்தான் மாநிலம் துங்கர்பூர் மற்றும் தவுசா மாவட்டத்தில் சுமார் 600-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரொனா தொற்று உறுதியான நிலையில் 3-வது அலையின் பாதிப்பு தொடங்கிவிட்டதோ? என்ற பீதியில்  மக்கள் உள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை பரவலை எதிர்த்து இந்தியா முழுவதும் தீவிர சுகாதார போராட்டம் நடைபெற்றுவருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதிதாக 2 லட்சத்து 22 ஆயிரத்து 315 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  இதோடு மட்டுமின்றி ஒரே நாளில் 4 ஆயிரத்து 454 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பாதிப்பினை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு மாநிலங்களில் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்த போதும் மக்களிடையே கொரோனா பற்றிய அச்ச உணர்வு இல்லாத காரணத்தினால்  தான் நாடு முழுவதும் பாதிப்பின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அரசு ஒருபுறம் குற்றம்சாட்டி வருகின்றது. குறிப்பாக கொரொனா தொற்றின் முதல் அலையினை விட இரண்டாவது அலையின் பாதிப்பு கிராமப்புற பகுதிகளிலும் தீயாய் பரவிவருகிறது.


ராஜஸ்தானில் குழந்தைகளை அதிகம் தாக்கும் கொரோனா தொற்று; 3-வது அலையின் பாதிப்பா? அச்சத்தில் மக்கள்..

இந்த நிலையில் தான் மேலும் அதிர்ச்சியளிக்கும் விதமாக ராஜஸ்தான் மாநிலத்தில் குழந்தைகள் பெரும்பாலும் வைரஸ் தொற்றினால் பாதிப்படைந்து வருகின்றனர். குறிப்பாக கடந்த சில நாட்களில் ராஜஸ்தானின் துங்கர்பூர் மாவட்டத்தில்  325 குழந்தைகளுக்கு  கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனையடுத்து  தவுசா மாவட்டத்திலும் சுமார் 300 குழந்தைகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். தற்போது குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருவதால் மூன்றாவது அலையின் தாக்கம் தொடங்கிவிட்டதோ? என்ற அச்சம் மக்களிடையே அதிகளவில் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே குழந்தைகள் நல அமைப்பான தேசிய குழந்தைகள் உரிமைகள் ஆணையம், நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 3-வது அலை அதிகளவில் பாதிப்பினை ஏற்படுத்துவதோடு குழந்தைகளையும் அதிகளவில் தாக்கும் என எச்சரித்துள்ளது. எனவே குழந்தைளை தொற்றில் இருந்து பாதுகாப்பதற்கான மருத்துவ வசதிகளை அதிகரிக்கவேண்டும் என மத்திய மற்றும் மாநில அரசுகளை குழந்தைகள் நல ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.


ராஜஸ்தானில் குழந்தைகளை அதிகம் தாக்கும் கொரோனா தொற்று; 3-வது அலையின் பாதிப்பா? அச்சத்தில் மக்கள்..

இந்த பதற்றமான சூழலில்தான், பாரத் பயோடெக் அதன் கொரோனா தடுப்பூசியான கோவாக்சினை குழந்தைகளுக்கு செலுத்தி மெற்கொள்ளும் பரிசோதனையை ஜூன் 1-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. பரிசோதனையை அடுத்து தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும் என்று கூறப்பட்டுவரும் நிலையில், குழந்தைகளை இதிலிருந்து பாதுகாக்கலாம் என்ற நம்பிக்கை  ஓரளவுக்கு மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

ஓணம் பண்டிகை: சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!
ஓணம் பண்டிகை: சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: ஆவணி, ஓணம் தரிசனத்திற்கு பக்தர்கள் குவிந்தனர்!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: ஆவணி, ஓணம் தரிசனத்திற்கு பக்தர்கள் குவிந்தனர்!
ஆதார் கார்டு தொலைந்தாலும் கவலையில்லை! வாட்ஸ்அப்பில் நொடியில் டவுன்லோட் செய்யுங்கள்!
ஆதார் கார்டு தொலைந்தாலும் கவலையில்லை! வாட்ஸ்அப்பில் நொடியில் டவுன்லோட் செய்யுங்கள்!
BJP: டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
உழைக்கும் வர்க்கத்தின் தோழன்... ஹெவி ஃபெர்பார்மன்ஸ் பண்ணும் TVS XL 100 Heavy Duty வாங்கலாமா?
உழைக்கும் வர்க்கத்தின் தோழன்... ஹெவி ஃபெர்பார்மன்ஸ் பண்ணும் TVS XL 100 Heavy Duty வாங்கலாமா?
SUV Rivals: எஸ்யுவி தான் வேணும்னு அடம்பிடிக்காதிங்க..! இந்த 4 கார் மாடல்களை ஓட்டியதுண்டா? - விலை, மைலேஜ், வசதி
SUV தான் வேணும்னு அடம்பிடிக்காதிங்க..! இந்த 4 கார் மாடல்களை ஓட்டியதுண்டா? - விலை, மைலேஜ், வசதி
TN Weather News: இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
Hybrid SUV: இனி பட்ஜெட்டில் ஸ்ட்ராங்கான ஹைப்ரிட்னா நாங்க தான்..! பட்டையை கிளப்பும் 3 எஸ்யுவிக்கள் - முழு விவரம்
இனி பட்ஜெட்டில் ஸ்ட்ராங்கான ஹைப்ரிட்னா நாங்க தான்..! பட்டையை கிளப்பும் 3 எஸ்யுவிக்கள் - முழு விவரம்
Embed widget