மேலும் அறிய

முற்பட்ட வகுப்பினருக்கான (EWS) ரூ.8 லட்சம் வருமான வரம்பு சரியானதே - அரசு திட்டவட்டம்

கடந்த ஆண்டு ஜூலை 29 ஆம் தேதி மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீதமும், EWS-க்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட சாதி ஏழைகளுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இதற்கு மத்திய அமைச்சரவை முழு ஒப்புதல் அளித்தது. இதற்காக சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கான நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மசோதாவாக நிறைவேற்றப்பட்டு திருத்தமும் செய்யப்பட்டது. ஆனால் இது பல்வேறு சர்ச்சைகள் எழும்பின.

மத்திய அரசால் ஏழைகள் என குறிப்பிடப்படுபவர்களின் ஆண்டு வருமானம் ரூ. 8 லட்சத்துக்கு குறைவாக உள்ளவர்கள். 5 ஏக்கர் விவசாய நிலமும் 1,000 சதுர அடிக்கு குறைவான வீடு அல்லது பிளாட்டை கொண்டவர்கள் எனக் கூறியது. அதேபோல பொருளாதார அடிப்படையில் இதுவரை இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதில்லை. அரசியலமைப்புச் சட்டத்திலும் அது போன்று இல்லை. இதனை எப்படி செயல்படுத்தலாம் எனவும் எதிர்ப்பு எழுந்தது. இது ஒருபுறமிருக்க இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு மண்டல் குழு பரிந்துரைகளின் படி 27% இடஒதுக்கீடு வழங்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

இதற்கு எதிராக அரசியல் கட்சிகளும் போராட்டம் நடத்தின. இருப்பினும் இந்த இடஒதுக்கீட்டை எதிர்த்தும் 10% முற்பட்ட சாதி ஏழைகளுக்கான இடஒதுக்கீட்டை எதிர்த்தும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுக்கள் கடந்த முறை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் மத்திய அரசிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

முற்பட்ட வகுப்பினருக்கான (EWS) ரூ.8 லட்சம் வருமான வரம்பு சரியானதே - அரசு திட்டவட்டம்

 முற்பட்ட சாதி ஏழைகளுக்கு வருமான வரம்பாக ரூ. 8 லட்சம் எப்படி நிர்ணயிக்கப்பட்டது எனவும் அதற்காக என்ன ஆய்வுகளை மத்திய அரசு மேற்கொண்டது என்றும் கேட்டனர். அதேபோல மத்திய அரசு தரப்பில் சினோ கமிட்டி அடிப்படையில் தான் 10% இடஒதுக்கீடு வழங்க முடிவு எடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. அந்த அறிக்கையை ஏன் தாக்கல் செய்யவில்லை என்று நீதிபதிகள் கேள்விகளை எழுப்பினார். இதையொட்டி நீட் பிஜி கவுன்சிலிங்கையும் நிறுத்திவைத்து உத்தரவிட்டனர்.

இதையடுத்து 10% இடஒதுக்கீடு குறித்து ஆராய மூன்று நபர்கள் கொண்ட ஸ்பெஷல் குழு மத்திய அரசு உருவாக்கியது. அந்தக் குழு ஆய்வுசெய்து அறிக்கையைச் சமர்ப்பித்திருக்கிறது. அதனை மத்திய அரசு நேற்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில், ரூ.8 லட்சம் என்ற நிபந்தனையில் மாற்றமில்லை எனவும் அதே வரம்பு தான் தொடரும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ரூ.8 லட்சத்துக்கும் குறைவான ஆண்டு வருமானம் கொண்டவர்கள் இந்த இடஒதுக்கீட்டின் கீழ் பயன்பெற முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
ABP Premium

வீடியோ

PC Sreeram supports Vijay|‘’அதிகார துஷ்பிரயோகம்!இது டிரம்ப் மண் கிடையாதுவிஜய்க்கு PC ஸ்ரீராம்SUPPORT
Vijay CBI Enquiry | CBI விசாரணையில் TWIST தேர்தலுக்கு முன் குற்றப்பத்திரிகை? அடுத்த சிக்கலில் விஜய்?
Villupuram News|முளைப்பாரி..கும்மியாட்டம்!களைகட்டிய பேரங்கியூர் தென்பெண்ணை ஆற்று திருவிழா
Woman Police with Baby|Traffic-ல் சிக்கிய ஆம்புலன்ஸ்!கைக்குழந்தையுடன் கடமை! மாஸ் காட்டிய பெண் காவலர்
”முடிவு என்கிட்ட தான்” ராகுல் போட்ட ORDER! டெல்லி MEETING-ல் நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
HC Judge Vs Savukku Shankar: “நீதிமன்றத்தையும் நீங்கள் மிரட்ட முடியாது“; சவுக்கு சங்கரை விளாசிய நீதிபதி; கடும் எச்சரிக்கை
“நீதிமன்றத்தையும் நீங்கள் மிரட்ட முடியாது“; சவுக்கு சங்கரை விளாசிய நீதிபதி; கடும் எச்சரிக்கை
Tata Punch vs Nexon: டாடா பஞ்ச் டாப் எண்ட்-ஆ.? மிட்-ஸ்பெக் நெக்ஸான்-ஆ.? உங்கள் பணத்திற்கு சிறந்த SUV எது.?
டாடா பஞ்ச் டாப் எண்ட்-ஆ.? மிட்-ஸ்பெக் நெக்ஸான்-ஆ.? உங்கள் பணத்திற்கு சிறந்த SUV எது.?
தைலாபுரத்தில் திடீர் நிலநடுக்கம்! - மூத்த நிர்வாகிகள் கொடுத்த தவறான தகவல்? ராமதாஸ் குழப்பம்!
தைலாபுரத்தில் திடீர் நிலநடுக்கம்! - மூத்த நிர்வாகிகள் கொடுத்த தவறான தகவல்? ராமதாஸ் குழப்பம்!
திருமணம் ஆகாதவர்களுக்கு அவசர கால சேமிப்பு ஏன் அவசியம்?
திருமணம் ஆகாதவர்களுக்கு அவசர கால சேமிப்பு ஏன் அவசியம்?
Embed widget