மேலும் அறிய

Disconnect Bill: அலுவலக நேரம்.. வேலை முடிஞ்சா நீ யாரோ? நான் யாரோ? ஊழியர்களுக்கான மசோதா சட்டமாகுமா?

Disconnect Rights Bill: பணி நேரத்திற்குப் பிறகு அலுவலக வேலை தொடர்பான அழைப்புகளை துண்டிப்பதற்கான உரிமையை வழங்கும், தனிநபர் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Disconnect Rights Bill: பணி நேரத்திற்குப் பிறகு அலுவலகத்தில் இருந்து வரும் அழைப்புகளை துண்டிக்க புதிய மசோதா வழிவகை செய்துள்ளது.

ஊழியர்களுக்கான தனிநபர் மசோதா:

அலுவலக நேரம் முடிவடைந்ததற்கு பிறகு பணி தொடர்பான அழைப்புகள் மற்றும் மின்னஞ்சல்களுக்கு ஊழியர்கள் பதிலளிப்பதை தவிர்ப்பதை நோக்கமாகக் கொண்ட, தனியார் உறுப்பினர் மசோதா வெள்ளிக்கிழமை மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் இருவருமே அரசாங்க சட்டம் தேவை என்று நம்பும் பிரச்னைகளில் மசோதாக்களை அறிமுகப்படுத்தலாம். இருப்பினும், பெரும்பாலான சந்தர்ப்பங்களில், முன்மொழியப்பட்ட மசோதாவிற்கு அரசாங்கம் பதிலளித்த பிறகு தனிநபர் மசோதாக்கள் திரும்பப் பெறப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய மசோதா என்ன?

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரியா சுலே, "தொடர்பை துண்டிக்கும் உரிமை மசோதா, 2025 (Disconnected Rights Bill)"-ஐ அறிமுகப்படுத்தினார். இது ஊழியர் நல ஆணையத்தை நிறுவ முயல்கிறது. இந்த மசோதா, ஒவ்வொரு பணியாளருக்கும் உத்தியோகபூர்வ வேலை நேரத்திற்கு அப்பால் மற்றும் விடுமுறை நாட்களில் வேலை தொடர்பான அழைப்புகள் மற்றும் மின்னஞ்சல்களுக்கு பதிலளிக்கும் நெருக்கடியை தவிர்க்கும் உரிமையை வழங்க முன்மொழிகிறது. மேலும், ஊழியர்கள் அத்தகைய தகவல்தொடர்புகளுக்கு பதிலளிக்க மறுப்பதற்கும் தொடர்புடைய விஷயங்களை நிவர்த்தி செய்வதற்கும் அனுமதிக்கும் விதிகள் இடம்பெற்றுள்ளன.

கடந்த ஆண்டு ஆஸ்திரேலியா இத்தகைய விதிகளை நிறைவேற்றியது. இதனால் இந்தியாவில் வேலை-வாழ்க்கை சமநிலையில் கவனம் செலுத்துவது தொடர்பான பேச்சு மீண்டும் அதிகரித்தது. புனே EY ஊழியரின் மரணம் மற்றும் தொழில்துறை தலைவர்களின் மாறுபட்ட கருத்துக்களைத் தொடர்ந்து நீண்ட நேரம் வேலை செய்வது குறித்த விவாதங்கள் இந்தியாவில் அதிகரித்துள்ளன.

எப்போதும் இணைக்கப்பட்டு இருக்கும் டிஜிட்டல் சூழலில், வேலை நேரங்களுக்குப் பிறகு அழைப்புகள் அல்லது செய்திகளை நிராகரிக்க ஆஸ்திரேலிய சட்டம் தொழிலாளர்களை அனுமதிக்கிறது, இது ஒரு முக்கிய பாதுகாப்பாகும். இந்நிலையில் இந்திய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மசோதா, சட்டமாகுமா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

ஆய்வுகள் சொல்வது என்ன?

கடந்த ஆண்டு உலகளாவிய வேலைவாய்ப்பு தளமான இன்டீட் நடத்திய ஆய்வில் , இந்தியாவில் முறையான "துண்டிப்பு உரிமை (Disconnect Rights)" கொள்கைக்கு வலுவான ஆதரவு கிடைத்தது. வேலை நேரத்திற்குப் பிறகும் அலுவலக பணிகள் தொடர்பான இணைப்பு என்பது பரவலாக இருப்பதை ஆய்வு  காட்டுகிறது. 88 சதவீத ஊழியர்கள் வேலை நேரத்திற்கு பிறகும் அலுவலகத்தால் வழக்கமாகத் தொடர்பு கொள்ளப்படுவதாகவும், 85 சதவீதம் பேர் நோய்வாய்ப்பட்ட விடுப்பு அல்லது விடுமுறை நாட்களிலும் கூட அலுவலக தொடர்பை பெறுவதாகவும் தெரிவித்துள்ளனர் இக்கட்டான சூழலிலும் பலர் பதிலளிக்க வேண்டிய அழுத்தம் கொடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர். 79 சதவிகிதம் பேர் அத்தகைய தகவல்தொடர்புகளைப் புறக்கணிப்பது தங்களின் தொழில் வாய்ப்புகளுக்கு தீங்கு விளைவிக்கும், வேலையை தாமதப்படுத்தும் அல்லது எதிர்கால பதவி உயர்வுகளைப் பாதிக்கும் என்று அஞ்சுவதாக தெரிவித்துள்ளனர்.

புதிய தலைமுறைகளும்.. மாறுபடும் பார்வைகளும்..

ஆய்வின் போது, ​​ஒரு தெளிவான உண்மை வெளிப்பட்டது. 1946 மற்றும் 1964 க்கு இடையில் பிறந்த பேபி பூமர்கள் - அலுவலக நேரத்திற்கு அப்பால் தொடர்பு கொள்ளும்போது (88 சதவீதம்) பாராட்டப்பட்டதாக உணர அதிக வாய்ப்புள்ளது, ஜென் இசட் (1997-2012) பதிலளித்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பணி நேர எல்லைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். குறிப்பாக, ஜென் இசட் தொழிலாளர்களில் 63 சதவீதம் பேர் துண்டிக்கும் உரிமை மதிக்கப்படாவிட்டால் வேலையை விட்டு விலகுவது குறித்து பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளனர்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Minister KN Nehru: விடாமல் துரத்தும் ED..! கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
விடாமல் துரத்தும் ED..! கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
டிசம்பர் 9, 11, 16... அடுத்தடுத்து உருவாகும் காற்றழுத்த தாழ்வு- தமிழகத்திற்கு அலர்ட் விடுத்த வெதர்மேன்
டிசம்பர் 9, 11, 16... அடுத்தடுத்து உருவாகும் காற்றழுத்த தாழ்வு- தமிழகத்திற்கு அலர்ட் விடுத்த வெதர்மேன்
Indigo Flight: ரூ.610 கோடி கொடுத்தாச்சு.. இனியும் விமானங்கள் லேட்டாதான் புறப்படும் - இண்டிகோவால் தொடரும் அவதி
Indigo Flight: ரூ.610 கோடி கொடுத்தாச்சு.. இனியும் விமானங்கள் லேட்டாதான் புறப்படும் - இண்டிகோவால் தொடரும் அவதி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister KN Nehru: விடாமல் துரத்தும் ED..! கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
விடாமல் துரத்தும் ED..! கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
டிசம்பர் 9, 11, 16... அடுத்தடுத்து உருவாகும் காற்றழுத்த தாழ்வு- தமிழகத்திற்கு அலர்ட் விடுத்த வெதர்மேன்
டிசம்பர் 9, 11, 16... அடுத்தடுத்து உருவாகும் காற்றழுத்த தாழ்வு- தமிழகத்திற்கு அலர்ட் விடுத்த வெதர்மேன்
Indigo Flight: ரூ.610 கோடி கொடுத்தாச்சு.. இனியும் விமானங்கள் லேட்டாதான் புறப்படும் - இண்டிகோவால் தொடரும் அவதி
Indigo Flight: ரூ.610 கோடி கொடுத்தாச்சு.. இனியும் விமானங்கள் லேட்டாதான் புறப்படும் - இண்டிகோவால் தொடரும் அவதி
காதலியை உறைய வைத்து கொலை செய்த கொடூர காதலன்? நம்பிச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
காதலியை உறைய வைத்து கொலை செய்த கொடூர காதலன்? நம்பிச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
Hyundai Venue: ரூபாய் 10 லட்சம்தான் ஆரம்ப விலை.. Hyundai Venue கார் தரமும், மைலேஜும் எப்படி?
Hyundai Venue: ரூபாய் 10 லட்சம்தான் ஆரம்ப விலை.. Hyundai Venue கார் தரமும், மைலேஜும் எப்படி?
Tata Sierra Rivals: ஆன் - ரோட் வராத காருக்கு இவ்ளோ போட்டியா? சந்தைக்கு வரும் 3 புதிய SUVக்கள்- சமாளிக்குமா டாடா?
Tata Sierra Rivals: ஆன் - ரோட் வராத காருக்கு இவ்ளோ போட்டியா? சந்தைக்கு வரும் 3 புதிய SUVக்கள்- சமாளிக்குமா டாடா?
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
Embed widget