மேலும் அறிய

பாலியல் குற்றவாளிகளுக்கு ஆதரவாக ராஜஸ்தான் முதலமைச்சர் பேசினாரா? நிர்பயாவின் தாய் சரமாரி கேள்வி

பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை தூக்கிலிடும் சட்டத்திற்கு எதிராக ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் பேசியிருப்பது வேதனையாகவும் சங்கடமாகவும் இருப்பதாக நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி தெரிவித்துள்ளார்.

கடந்த 2012ஆம் ஆண்டு, டெல்லியில் இளம்பெண் ஒருவர் கொடூரமாக கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்து, நிர்பயா சட்டம் அமல்படுத்தப்பட்டது. 

 

இந்நிலையில், பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை தூக்கிலிடும் சட்டத்திற்கு எதிராக ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் பேசியிருப்பது வேதனையாகவும் சங்கடமாகவும் இருப்பதாக நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி தெரிவித்துள்ளார். கெலாட்டின் கருத்து குற்றவாளிகளை ஆதரிக்கும் மனநிலையை பிரதிபலிப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்படும் சம்பவங்கள் நிர்பயா சட்டம் இயற்றப்பட்ட பிறகு அதிகரித்திருப்பதாக கெலாட் கூறியிருந்தார். “நிர்பயா வழக்குக்குப் பிறகு குற்றவாளிகளைத் தூக்கில் போடும் சட்டத்தின் காரணமாக, பாலியல் வன்கொடுமைக்கு பிறகு கொலைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இது நாட்டில் காணப்படும் ஆபத்தான போக்கு” ​​என கெலாட் பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இதுகுறித்து ஆஷா தேவி பேசுகையில், "அன்றைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை தூக்கிலிடுவதற்கான சட்டத்தை கொண்டுவருவதற்கு முன்பே சிறுமிகள் கொல்லப்பட்டனர். கெலாட்டின் கருத்துக்களுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும். மக்களின் மனநிலைதான் மோசமானது. சட்டம் அல்ல" என்றார்.

ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், "இது மிகவும் சங்கடமான கருத்து. குறிப்பாக இதுபோன்ற கொடூரமான குற்றங்களில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் சிறுமிகளுக்கும் இது வேதனையளிக்கும். அவர் (கெலாட்) நிர்பயாவை கேலி செய்திருந்தார். அவரின் அரசுதான் இந்த சட்டத்தை இயற்றியது.

இந்த சட்டம் வருவதற்கு முன்பே, சிறுமிகள் கொல்லப்பட்டனர். இது அவரின் (கெலாட்) குற்றவாளிகளை ஆதரிக்கும் மனநிலையை காட்டுகிறது. சட்டம் மோசமானதல்ல. மக்களின் மனநிலைதான் மோசமாக உள்ளது. அவர் மன்னிப்பு கேட்டு ராஜினாமா செய்ய வேண்டும்" என்றார்.

கெலாட்டின் கருத்து சர்ச்சையானதை தொடர்ந்து இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள கெலாட், "நான் உண்மையை மட்டுமே பேசுகிறேன். ஒரு பாலியல் வன்கொடுமை குற்றவாளி ஒரு குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்யும் போதெல்லாம், அவர்கள் அடையாளம் காணப்படுவார்கள் என்ற பயத்தில் அவர்களைக் கொல்கிறார்கள். இவ்வளவு மரணங்கள் இதற்கு முன்பு ஏற்பட்டதில்லை" என்றார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CBSE: பூதாகரமாகும் நாய்க்கடி; பள்ளிகளில் மாணவர் பாதுகாப்பு- சிபிஎஸ்இ அதிரடி உத்தரவு- புது வழிகாட்டல்கள்
CBSE: பூதாகரமாகும் நாய்க்கடி; பள்ளிகளில் மாணவர் பாதுகாப்பு- சிபிஎஸ்இ அதிரடி உத்தரவு- புது வழிகாட்டல்கள்
ஆசிரியர்கள் கைது; அடக்குமுறைதான் பரிசா? 13% தேர்தல் வாக்குறுதிகளே நிறைவேற்றம்- அன்புமணி கண்டனம்!
ஆசிரியர்கள் கைது; அடக்குமுறைதான் பரிசா? 13% தேர்தல் வாக்குறுதிகளே நிறைவேற்றம்- அன்புமணி கண்டனம்!
வெடிக்கும் டயர்கள், பறிபோகும் உயிர்கள், பணியாளர்கள் பற்றாக்குறை - போக்குவரத்து ஊழியர்கள் சங்கம்
வெடிக்கும் டயர்கள், பறிபோகும் உயிர்கள், பணியாளர்கள் பற்றாக்குறை - போக்குவரத்து ஊழியர்கள் சங்கம்
Mhindra Cars 2026: 7 சீட்டர் உட்பட 3 எஸ்யுவிக்கள் - புத்தாண்டிற்கான மஹிந்த்ராவின் ப்ளான் - விலை, வெளியீடு
Mhindra Cars 2026: 7 சீட்டர் உட்பட 3 எஸ்யுவிக்கள் - புத்தாண்டிற்கான மஹிந்த்ராவின் ப்ளான் - விலை, வெளியீடு
ABP Premium

வீடியோ

Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு
Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்
தஞ்சாவூர் டூ சென்னை.. ஹெலிகாப்டரில் பறந்து வந்த இதயம்! திக் திக் நிமிடங்கள்!
இடைக்கால ஜாமீன் READYகுஷியில் சவுக்கு சங்கர் சாட்டையை சுழற்றிய HIGH COURT | Savukku Shankar
GK Mani Expelled from PMK | ‘’ஜி.கே.மணி GET OUT’’தூக்கியடித்த அன்புமணி பாமகவில் இருந்து நீக்கம்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CBSE: பூதாகரமாகும் நாய்க்கடி; பள்ளிகளில் மாணவர் பாதுகாப்பு- சிபிஎஸ்இ அதிரடி உத்தரவு- புது வழிகாட்டல்கள்
CBSE: பூதாகரமாகும் நாய்க்கடி; பள்ளிகளில் மாணவர் பாதுகாப்பு- சிபிஎஸ்இ அதிரடி உத்தரவு- புது வழிகாட்டல்கள்
ஆசிரியர்கள் கைது; அடக்குமுறைதான் பரிசா? 13% தேர்தல் வாக்குறுதிகளே நிறைவேற்றம்- அன்புமணி கண்டனம்!
ஆசிரியர்கள் கைது; அடக்குமுறைதான் பரிசா? 13% தேர்தல் வாக்குறுதிகளே நிறைவேற்றம்- அன்புமணி கண்டனம்!
வெடிக்கும் டயர்கள், பறிபோகும் உயிர்கள், பணியாளர்கள் பற்றாக்குறை - போக்குவரத்து ஊழியர்கள் சங்கம்
வெடிக்கும் டயர்கள், பறிபோகும் உயிர்கள், பணியாளர்கள் பற்றாக்குறை - போக்குவரத்து ஊழியர்கள் சங்கம்
Mhindra Cars 2026: 7 சீட்டர் உட்பட 3 எஸ்யுவிக்கள் - புத்தாண்டிற்கான மஹிந்த்ராவின் ப்ளான் - விலை, வெளியீடு
Mhindra Cars 2026: 7 சீட்டர் உட்பட 3 எஸ்யுவிக்கள் - புத்தாண்டிற்கான மஹிந்த்ராவின் ப்ளான் - விலை, வெளியீடு
Jana Nayagan Audio Launch: ஒன் லாஸ்ட் டைம்..! அரங்கம் அதிர, விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி - ஜனநாயகன் சம்பவம்
Jana Nayagan Audio Launch: ஒன் லாஸ்ட் டைம்..! அரங்கம் அதிர, விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி - ஜனநாயகன் சம்பவம்
Gambhir BCCI: கம்பீரை கழற்றிவிடும் முடிவில் பிசிசிஐ? ”நீங்க கோச்சா வரணும்” லெஜண்டை சந்தித்து பேச்சுவார்த்தை?
Gambhir BCCI: கம்பீரை கழற்றிவிடும் முடிவில் பிசிசிஐ? ”நீங்க கோச்சா வரணும்” லெஜண்டை சந்தித்து பேச்சுவார்த்தை?
TN Roundup: சிறப்பு வாக்காளர் முகாம், விஜயகாந்த் நினைவுநாள், ஏ.ஆர். ரஹ்மான் பேச்சு - தமிழகத்தில் இதுவரை
TN Roundup: சிறப்பு வாக்காளர் முகாம், விஜயகாந்த் நினைவுநாள், ஏ.ஆர். ரஹ்மான் பேச்சு - தமிழகத்தில் இதுவரை
Jana Nayagan Audio Launch: ”30 வருஷத்துக்கு இதுதான் ப்ளான்” விமர்சனங்களுக்கு பதிலடி தந்த ஜனநாயகன் விஜய்
Jana Nayagan Audio Launch: ”30 வருஷத்துக்கு இதுதான் ப்ளான்” விமர்சனங்களுக்கு பதிலடி தந்த ஜனநாயகன் விஜய்
Embed widget