மேலும் அறிய

NEET UG Row: நீட் முறைகேடு; எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் விடமாட்டோம்- மத்தியக் கல்வி அமைச்சர் உறுதி

நீட் முறைகேடு விவகாரத்தில் ஏமாற்றியவர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் விடமாட்டோம் என்று மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உறுதி அளித்துள்ளார்.

நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகக் கூறி, நாளுக்கு நாள் நாடு முழுவதும் போராட்டங்கள் அதிகரித்து வருகின்றன. நீட் தேர்வு வினாத்தாள் லீக், ஆள் மாறாட்டம், தேர்வு முடிவுகளில் கருணை மதிப்பெண்கள் வழங்கிய விதம், ஒரே தேர்வறையைச் சேர்ந்த 8 மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்றது உள்ளிட்ட பல்வேறு குளறுபடிகளைக் குறிப்பிட்டு, இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் மாணவர்கள் நீட் தேர்வுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

கருணை மதிப்பெண் பெற்ற தேர்வர்களுக்கு மட்டும் நீட் மறு தேர்வு

இந்த நிலையில், தேர்வறையில் மாற்று வினாத்தாள் வழங்கப்பட்டதால் ஏற்பட்ட நேரக் குறைவால் பாதிக்கப்பட்டதால் கருணை மதிப்பெண்கள் பெற்ற 1,563 மாணவர்களுக்கு மட்டும் நீட் மறு தேர்வு நடத்தப்படும் என்று தேசியத் தேர்வுகள் முகமை உச்ச நீதிமன்றத்தில் ஜூன் 13ஆம் தேதி தெரிவித்தது. இந்த மாணவர்களுக்கு ஜூன் 23ஆம் தேதி மறு தேர்வு நடைபெற உள்ளது.

எனினும் நீட் தேர்வு முறைகேடு தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கில் கலந்தாய்வுக்குத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதன்படி ஜூலை 6ஆம் தேதி மருத்துவக் கலந்தாய்வு தொடங்க உள்ளது. 

இந்த நிலையில் நீட் முறைகேடு விவகாரத்தில் ஏமாற்றியவர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் விடமாட்டோம் என்று மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உறுதி அளித்துள்ளார். நீட் விவகாரத்தில் மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும்போது, ‘’எவ்வளவு பெரிய உயர் அதிகாரியாக இருந்தாலும் அவர் தவறு செய்தது கண்டுபிடிக்கப்பட்டால், அவரை சும்மா விடமாட்டோம். தேசியத் தேர்வுகள் முகமைக்குள் போதிய வளர்ச்சி தேவை. தவறு செய்தவர்களுக்குக் கட்டாயம் கடுமையான தண்டனை கிடைக்கும் என்று உறுதி கூறுகிறேன்.

உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்படி 2 இடங்களில் தேர்வெழுதிய 1,563 மாணவர்களுக்கு மீண்டும் நீட் தேர்வு நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசு இந்த விவகாரத்தை மிகவும் சீரிய முறையில் விசாரித்து வருகிறது என்பதை மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் உறுதிப்படுத்த விரும்புகிறேன்.

உயர் அதிகாரிகள் தவறு இழைத்திருந்தாலும் கடும் நடவடிக்கை

தேசியத் தேர்வுகள் முகமைக்குள்ளேயே உயர் அதிகாரிகள் யாராவது தவறு இழைத்திருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று தெரிவித்தார்.

நீட் தேர்வில் குறிப்பிட்ட இடங்களில் மட்டும் முறைகேடு நடந்ததாகக் கூறப்படுகிறதே என்று கேள்வி எழுப்பப்பட்டதற்கு, ’’அரசு தீர்வு மற்றும் சீர்திருத்தத்தைக் கொண்டுவரும் பணியில் ஈடுபட்டுள்ளது. உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்படி, முறையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அனைத்து முயற்சிகளும் உச்ச நீதிமன்றத்தால் கண்காணிக்கப்பட்டு வருகின்றன’’ என்று அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.  

13 பேர் கைது

ஏற்கெனவே பிஹாரின் பாட்னா பகுதியில் உள்ள சில மையங்களில் வினாத்தாள் கசிவுக்குக் காரணமாக இருந்ததாகக் கூறி, பொருளாதாரக் குற்றப் பிரிவு 13 பேரைக் கைது செய்தது. இதில் 4 தேர்வர்களும் அவர்களின் குடும்பத்தினரும் இருந்தனர். இதுகுறித்து மத்தியக் கல்வி அமைச்சகமும் தேசியத் தேர்வுகள் முகமையும் விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Bike Challan: பைக்கில் செல்பவரா நீங்கள்? இனி ஒரு தப்பு செஞ்சா கூட ₹10,000 அபராதம் - உடனே இதைப் படிங்க!
Bike Challan: பைக்கில் செல்பவரா நீங்கள்? இனி ஒரு தப்பு செஞ்சா கூட ₹10,000 அபராதம் - உடனே இதைப் படிங்க!
Top 10 News Headlines: முதல்வர் விஜய் ஆலோசனை, தங்கம் விலை உயர்வு, கச்சா எண்ணெய் விலை சரிவு, ட்ரம்ப் அச்சுறுத்தல் - 11 மணி செய்திகள்
முதல்வர் விஜய் ஆலோசனை, தங்கம் விலை உயர்வு, கச்சா எண்ணெய் விலை சரிவு, ட்ரம்ப் அச்சுறுத்தல் - 11 மணி செய்திகள்
பெற்றோர் இல்லாத நேரத்தில் வீட்டிற்கு வந்த காதலன் ! துண்டு துண்டாக வெட்டி கிணற்றில் வீசிய தந்தை
பெற்றோர் இல்லாத நேரத்தில் வீட்டிற்கு வந்த காதலன் ! துண்டு துண்டாக வெட்டி கிணற்றில் வீசிய தந்தை
மதுரையில் “காக்ரோச்” அமைப்பின் பேரணி: வேலைவாய்ப்பு, ஊழல் எதிர்ப்பு கோரிக்கைகள் வலியுறுத்தல் !
மதுரையில் “காக்ரோச்” அமைப்பின் பேரணி: வேலைவாய்ப்பு, ஊழல் எதிர்ப்பு கோரிக்கைகள் வலியுறுத்தல் !
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

3 அதிமுக MLA ராஜினாமா ஆட்டத்தை தொடங்கிய தவெக அதிர்ச்சியில் SP வேலுமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ARUN IPS: தவெகவை சுத்துபோட்டு அடித்த அருண் ஐபிஎஸ்? CM விஜய் பதவி கொடுத்தது ஏன்? திருமா தலையீடு?
ARUN IPS: தவெகவை சுத்துபோட்டு அடித்த அருண் ஐபிஎஸ்? CM விஜய் பதவி கொடுத்தது ஏன்? திருமா தலையீடு?
தவெகவில் அதிமுக MLAக்கள்.. நீங்க ஏன் கதறுறீங்க? .. ஸ்டாலினை விளாசிய மாணிக்கம் தாகூர்!
தவெகவில் அதிமுக MLAக்கள்.. நீங்க ஏன் கதறுறீங்க? .. ஸ்டாலினை விளாசிய மாணிக்கம் தாகூர்!
TN Weather Update: இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு, 8 மாவட்டங்களுக்கு அலெர்ட், சென்னை நிலவரம்? தமிழக வானிலை
இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு, 8 மாவட்டங்களுக்கு அலெர்ட், சென்னை நிலவரம்? தமிழக வானிலை
Jose Charles Martin: மதத்தைக் காட்டி ஜோஸ் மார்ட்டினுக்கு அமைச்சர் பதவி மறுப்பா? பாண்டிச்சேரியில் நடப்பது என்ன?
Jose Charles Martin: மதத்தைக் காட்டி ஜோஸ் மார்ட்டினுக்கு அமைச்சர் பதவி மறுப்பா? பாண்டிச்சேரியில் நடப்பது என்ன?
Horse Trading : ‘குதிரை பேரம்’ என்றால் என்ன ? எதற்கு அரசியலில் இந்த வார்த்தை பயன்படுத்தப்படுகிறது..?
‘குதிரை பேரம்’ என்றால் என்ன ? சொல்ல காரணம் இதுதான்!
Junior NTR: அரைச்ச மாவையே அரைக்காதீங்க! கேஜிஎஃப் இயக்குனர் பிரசாந்த் நீலை கழுவி ஊற்றும் ரசிகர்கள்!
Junior NTR: அரைச்ச மாவையே அரைக்காதீங்க! கேஜிஎஃப் இயக்குனர் பிரசாந்த் நீலை கழுவி ஊற்றும் ரசிகர்கள்!
" அப்பா ஆட்சி நடப்பதாக உதயநிதி நினைக்கிறார் " அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமார் பதிலடி
Edappadi Palanisami: புதிய கரகாட்ட கோஷ்டிக்கு விரைவில் பாடம்.. தவெக-வை வறுத்தெடுத்த எடப்பாடி பழனிசாமி!
Edappadi Palanisami: புதிய கரகாட்ட கோஷ்டிக்கு விரைவில் பாடம்.. தவெக-வை வறுத்தெடுத்த எடப்பாடி பழனிசாமி!
Embed widget