மேலும் அறிய

NEET UG Row: நீட் முறைகேடு; எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் விடமாட்டோம்- மத்தியக் கல்வி அமைச்சர் உறுதி

நீட் முறைகேடு விவகாரத்தில் ஏமாற்றியவர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் விடமாட்டோம் என்று மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உறுதி அளித்துள்ளார்.

நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகக் கூறி, நாளுக்கு நாள் நாடு முழுவதும் போராட்டங்கள் அதிகரித்து வருகின்றன. நீட் தேர்வு வினாத்தாள் லீக், ஆள் மாறாட்டம், தேர்வு முடிவுகளில் கருணை மதிப்பெண்கள் வழங்கிய விதம், ஒரே தேர்வறையைச் சேர்ந்த 8 மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்றது உள்ளிட்ட பல்வேறு குளறுபடிகளைக் குறிப்பிட்டு, இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் மாணவர்கள் நீட் தேர்வுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

கருணை மதிப்பெண் பெற்ற தேர்வர்களுக்கு மட்டும் நீட் மறு தேர்வு

இந்த நிலையில், தேர்வறையில் மாற்று வினாத்தாள் வழங்கப்பட்டதால் ஏற்பட்ட நேரக் குறைவால் பாதிக்கப்பட்டதால் கருணை மதிப்பெண்கள் பெற்ற 1,563 மாணவர்களுக்கு மட்டும் நீட் மறு தேர்வு நடத்தப்படும் என்று தேசியத் தேர்வுகள் முகமை உச்ச நீதிமன்றத்தில் ஜூன் 13ஆம் தேதி தெரிவித்தது. இந்த மாணவர்களுக்கு ஜூன் 23ஆம் தேதி மறு தேர்வு நடைபெற உள்ளது.

எனினும் நீட் தேர்வு முறைகேடு தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கில் கலந்தாய்வுக்குத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதன்படி ஜூலை 6ஆம் தேதி மருத்துவக் கலந்தாய்வு தொடங்க உள்ளது. 

இந்த நிலையில் நீட் முறைகேடு விவகாரத்தில் ஏமாற்றியவர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் விடமாட்டோம் என்று மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உறுதி அளித்துள்ளார். நீட் விவகாரத்தில் மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும்போது, ‘’எவ்வளவு பெரிய உயர் அதிகாரியாக இருந்தாலும் அவர் தவறு செய்தது கண்டுபிடிக்கப்பட்டால், அவரை சும்மா விடமாட்டோம். தேசியத் தேர்வுகள் முகமைக்குள் போதிய வளர்ச்சி தேவை. தவறு செய்தவர்களுக்குக் கட்டாயம் கடுமையான தண்டனை கிடைக்கும் என்று உறுதி கூறுகிறேன்.

உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்படி 2 இடங்களில் தேர்வெழுதிய 1,563 மாணவர்களுக்கு மீண்டும் நீட் தேர்வு நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசு இந்த விவகாரத்தை மிகவும் சீரிய முறையில் விசாரித்து வருகிறது என்பதை மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் உறுதிப்படுத்த விரும்புகிறேன்.

உயர் அதிகாரிகள் தவறு இழைத்திருந்தாலும் கடும் நடவடிக்கை

தேசியத் தேர்வுகள் முகமைக்குள்ளேயே உயர் அதிகாரிகள் யாராவது தவறு இழைத்திருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று தெரிவித்தார்.

நீட் தேர்வில் குறிப்பிட்ட இடங்களில் மட்டும் முறைகேடு நடந்ததாகக் கூறப்படுகிறதே என்று கேள்வி எழுப்பப்பட்டதற்கு, ’’அரசு தீர்வு மற்றும் சீர்திருத்தத்தைக் கொண்டுவரும் பணியில் ஈடுபட்டுள்ளது. உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்படி, முறையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அனைத்து முயற்சிகளும் உச்ச நீதிமன்றத்தால் கண்காணிக்கப்பட்டு வருகின்றன’’ என்று அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.  

13 பேர் கைது

ஏற்கெனவே பிஹாரின் பாட்னா பகுதியில் உள்ள சில மையங்களில் வினாத்தாள் கசிவுக்குக் காரணமாக இருந்ததாகக் கூறி, பொருளாதாரக் குற்றப் பிரிவு 13 பேரைக் கைது செய்தது. இதில் 4 தேர்வர்களும் அவர்களின் குடும்பத்தினரும் இருந்தனர். இதுகுறித்து மத்தியக் கல்வி அமைச்சகமும் தேசியத் தேர்வுகள் முகமையும் விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

India vs Australia LIVE SCORE: 206 ரன்கள் இலக்கு.. பேட்டிங்கை தொடங்கியது ஆஸ்திரேலியா!
India vs Australia LIVE SCORE: 206 ரன்கள் இலக்கு.. பேட்டிங்கை தொடங்கியது ஆஸ்திரேலியா!
ரூ.50 லட்சம் செலவில் இந்திரா காந்திக்கு சிலை, அரசு விழாவாக அப்துல் கலாம் பிறந்தநாள்- தமிழ் வளர்ச்சித் துறை
ரூ.50 லட்சம் செலவில் இந்திரா காந்திக்கு சிலை, அரசு விழாவாக அப்துல் கலாம் பிறந்தநாள்- தமிழ் வளர்ச்சித் துறை
TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
India Squad For Zimbabwe Series Announced: ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடர்.. ரோஹித், கோலிக்கு இடம் இல்லை..கேப்டனாக சுப்மன் கில்!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடர்.. ரோஹித், கோலிக்கு இடம் இல்லை..கேப்டனாக சுப்மன் கில்!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Accident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?Amudha IAS Transfer? : இப்படி பண்ணிட்டிங்களே. அமுதா IAS Transfer? அப்செட்டில் ஸ்டாலின்!Trichy Surya |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
India vs Australia LIVE SCORE: 206 ரன்கள் இலக்கு.. பேட்டிங்கை தொடங்கியது ஆஸ்திரேலியா!
India vs Australia LIVE SCORE: 206 ரன்கள் இலக்கு.. பேட்டிங்கை தொடங்கியது ஆஸ்திரேலியா!
ரூ.50 லட்சம் செலவில் இந்திரா காந்திக்கு சிலை, அரசு விழாவாக அப்துல் கலாம் பிறந்தநாள்- தமிழ் வளர்ச்சித் துறை
ரூ.50 லட்சம் செலவில் இந்திரா காந்திக்கு சிலை, அரசு விழாவாக அப்துல் கலாம் பிறந்தநாள்- தமிழ் வளர்ச்சித் துறை
TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
India Squad For Zimbabwe Series Announced: ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடர்.. ரோஹித், கோலிக்கு இடம் இல்லை..கேப்டனாக சுப்மன் கில்!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடர்.. ரோஹித், கோலிக்கு இடம் இல்லை..கேப்டனாக சுப்மன் கில்!
பிறப்புறுப்பில் மிளகாய் தூள் தடவி டார்ச்சர்! பொது இடத்தில் பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த அநீதி!
பிறப்புறுப்பில் மிளகாய் தூள் தடவி டார்ச்சர்! பொது இடத்தில் பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த அநீதி!
'இத்தனை நாளா எங்கய்யா இருந்தே'... ரூ.600 செலவில் தஞ்சை பள்ளி மாணவரின் அட்டகாச கண்டுபிடிப்பு கருவி
'இத்தனை நாளா எங்கய்யா இருந்தே'... ரூ.600 செலவில் தஞ்சை பள்ளி மாணவரின் அட்டகாச கண்டுபிடிப்பு கருவி
Breaking News LIVE:நாகையில் கள்ளச்சாராயம் விற்ற 21 பேர் கைது - போலீஸ் அதிரடி
Breaking News LIVE: நாகையில் கள்ளச்சாராயம் விற்ற 21 பேர் கைது - போலீஸ் அதிரடி
Vijay: பிறந்தநாள் வாழ்த்து! சீமான், திருமா, அன்புமணிக்கு சிறப்பு நன்றி - வியூகம் வகுக்கும் விஜய்
Vijay: பிறந்தநாள் வாழ்த்து! சீமான், திருமா, அன்புமணிக்கு சிறப்பு நன்றி - வியூகம் வகுக்கும் விஜய்
Embed widget