மேலும் அறிய

தீக்கிரையாகும் மகாராஷ்டிரா.. கொளுத்தப்பட்ட எம்.எல்.ஏ. வீடு! விஸ்வரூபம் எடுத்த இடஒதுக்கீடு விவகாரம்!

பீட் மாவட்டத்தில் உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. பிரகாஷ் சோலங்கியின் வீட்டை தாக்கி, போராட்டக்காரர்கள் தீ வைத்து கொளுத்தியுள்ளனர்.

மராத்தா சமூகத்தவருக்கு இடஒதுக்கீடு கோரி நடத்தப்பட்டு வரும் போராட்டம் மகாராஷ்டிராவை பதற்றத்தில் ஆழ்த்தி வருகிறது. மகாராஷ்டிர அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வரும் அவர்கள், அம்மாநில மக்கள் தொகையில் மூன்றில் ஒரு சதவிகிதமாக உள்ளனர்.

மராத்தா  இடஒதுக்கீடு விவகாரம்:

அரசியலில் ஆதிக்கம் செலுத்தினாலும் பெரும்பாலும் விவசாய தொழிலில் ஈடுபட்டு வந்தார்கள். ஆனால், காலப்போக்கில், பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பெரும் சவால்களை சந்தித்து வருகின்றனர். இதன் காரணமாக, தங்களுக்கு இடஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இப்படிப்பட்ட சூழலில், கடந்த 2018ஆம் ஆண்டு, மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் மராத்தா சமூகத்தவருக்கு இடஒதுக்கீடு வழங்கும் வகையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 16 சதவிகிதம் இடஒதுக்கீடு தரும் நோக்கில் மசோதா நிறைவேற்றப்பட்டது.

ஆனால், மராத்த சமூகத்தவர் இடஒதுக்கீடுக்கு எதிராக மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இடஒதுக்கீட்டை உறுதி செய்திருந்தாலும் அதன் அளவு குறைக்கப்பட்டது. வேலைவாய்ப்புகளில் 13 சதவிகிதமும் கல்வியில் 12 சதவிகிதமும் இடஒதுக்கீடு வழங்க உத்தரவிடப்பட்டது. ஆனால், கடந்த 2021ஆம் ஆண்டு, மராத்த சமூகத்தவர் இடஒதுக்கீட்டை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.

வெடித்த போராட்டம்:

இதன் காரணமாக, மகாராஷ்டிராவில் மராத்தா சமூகத்தவருக்கு இடஒதுக்கீடு கோரி தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இச்சூழலில், இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக மனோஜ் ஜரங்கே பாட்டீல் என்பவர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டார். இவரின் உண்ணாவிரத போராட்டத்துக்கு எதிராக சிலர் சர்ச்சை கருத்து தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. உண்ணாவிரத போராட்டத்துக்கு எதிராக சர்ச்சை கருத்துகள் தெரிவித்ததை கண்டித்து போராட்டம் வெடித்துள்ளது.

எம்எல்ஏ வீட்டை கொளுத்திய போராட்டக்காரர்கள்:

இந்த நிலையில், பீட் மாவட்டத்தில் உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ பிரகாஷ் சோலங்கியின் வீட்டை தாக்கி, போராட்டக்காரர்கள் தீ வைத்து கொளுத்தியுள்ளனர். சோலங்கியின் வீட்டிற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசி சேதப்படுத்தினர். 

அஜித் பவார் ஆதரவாளரான சோலங்கி, இதுகுறித்து குறிப்பிடுகையில், "தாக்குதலுக்கு உள்ளான போது எனது வீட்டிற்குள் இருந்தேன். அதிர்ஷ்டவசமாக, எனது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம். ஆனால், பெரிய அளவில் சொத்து இழப்பு ஏற்பட்டுள்ளது" என்றார்.

 

பங்களா போல் இருக்கும் எம்எல்ஏவின் வீடு கொளுந்துவிட்டு எரியும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
ABP Premium

வீடியோ

Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!
ESCAPE ஆன விழா குழுவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
TN Power Shutdown: சென்னை முதல் திருநெல்வேலி வரை! தமிழ்நாட்டில் நாளை(19.01.2026) மின் தடை ஏற்படும் இடங்கள்.. முழு விவரம்
TN Power Shutdown: சென்னை முதல் திருநெல்வேலி வரை! தமிழ்நாட்டில் நாளை(19.01.2026) மின் தடை ஏற்படும் இடங்கள்.. முழு விவரம்
Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?
Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?
TN TRB: நட்டாற்றில் 4 லட்சம் ஆசிரியர்கள்; தேர்வு அட்டவணையை டிஆர்பி உடனே வெளியிடக் கோரிக்கை!
TN TRB: நட்டாற்றில் 4 லட்சம் ஆசிரியர்கள்; தேர்வு அட்டவணையை டிஆர்பி உடனே வெளியிடக் கோரிக்கை!
அரசு ஊழியர்கள் பிப்.3 முதல் தொடர் வேலை நிறுத்தம்; சூளுரைத்த அமைப்பு! அதிர்ச்சியில் அரசு
அரசு ஊழியர்கள் பிப்.3 முதல் தொடர் வேலை நிறுத்தம்; சூளுரைத்த அமைப்பு! அதிர்ச்சியில் அரசு
Embed widget