மேலும் அறிய

நாட்டுமக்களுக்கு மகா நவமி வாழ்த்து சொல்லி ட்வீட் செய்த பிரதமர் மோடி!

“மகா நவமி சித்திதாத்ரி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. நீங்கள் அனைவரும் கடமையின் பாதையில் நடக்க உத்வேகத்துடன் வாழ்வில் வெற்றியும் பெற. மனமார்ந்த வாழ்த்துக்கள்!” என்று ட்வீட் செய்துள்ளார்.

சித்திதாத்ரி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஸ்துதியைப் பகிர்ந்து கொண்ட பிரதமர் மோடி இந்தியில் ட்வீட் செய்து மகா நவமி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

மகா நவமி

இந்தியாவில் பாரம்பரியமான பண்டிகைகள் ஏராளம். அவற்றை மக்கள் மகிழ்வுடனும், பக்தியுடனும் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் தென்னிந்தியாவில் பரவலாக எல்லோராலும் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று தான் ஆயுத பூஜை. இது முக்கியமாக கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கேரளாவில் மிகவும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின் ஒன்பதாம் நாளான இன்று தசராவின் ஒரு பகுதியாக மகா நவமி கொண்டாடப்படுகிறது. திருஷ்டி கழிக்கும் நோக்கில் வெள்ளைப் பூசணிக்காயை மஞ்சளால் அலங்கரித்து வாகனத்தின் முன் உடைத்து அனைத்து விதமான தோஷங்களையும் நீக்குவதாக நம்பப்படுகிறது. இந்த நாளில் சிறிய ஊசி தொடங்கி கத்தி, அரிவாள், சமயலறை கருவிகள், கத்தரிக்கோல், ஸ்பேனர்கள், கணினி, வேறு இயந்திரங்கள், புத்தகங்கள் போன்ற அனைத்து வகையான கருவிகளையும் வைத்து வழிபடுகின்றனர். இந்த பண்டிகையை வடகிழக்கு மாநிலங்களில் மகா நவமி என்றும், ஒடிசாவில், அஸ்திர பூஜை என்ற பெயரிலும் கொண்டாடப்படுகிறது.

நாட்டுமக்களுக்கு மகா நவமி வாழ்த்து சொல்லி ட்வீட் செய்த பிரதமர் மோடி!

பிரதமர் மோடி வாழ்த்து

மகா நவமி அன்று அனைவரின் வாழ்விலும் வெற்றி பெற பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். சித்திதாத்ரி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஸ்துதியைப் பகிர்ந்து கொண்ட பிரதமர் மோடி இந்தியில் ட்வீட் செய்துள்ளார்: “மகா நவமி சித்திதாத்ரி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. நீங்கள் அனைவரும் கடமையின் பாதையில் நடக்க உத்வேகத்துடன் வாழ்வில் வெற்றியும் பெற. மனமார்ந்த வாழ்த்துக்கள்!” என்று ட்வீட் செய்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்: அக்டோபர் மாதம் எந்த ராசிக்கு ராஜயோகம்? எந்த ராசிக்கு கவனம் தேவை? முழு ராசிபலன்கள்...!

மகா நவமி கொண்டாடும் முறை

ஒன்பதாம் நாள், அதாவது மகா நவமி, துர்கா தேவியின் ஒன்பதாவது வடிவமான மா சித்திதாத்ரிக்கு அற்பணிக்கப்படுகிறது. துர்கா தேவி இந்த நாளில் மகிஷாசுரன் என்ற அரக்கனைக் கொன்றதாக நம்பப்படுகிறது, எனவே அவர் மகிஷாசுர மர்தினி என்றும் அழைக்கப்படுகிறார். தேவியை வழிபடுவது சஹஸ்ரார சக்கரத்தை தூண்டுகிறது, இது கிரீடம் சக்ரா என்றும் அழைக்கப்படுகிறது.

9 சிறுமிகளுக்கு பூஜை

இந்து கல்வெட்டுகளின்படி, தேவி தன் பக்தர்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை தந்து, அவர்களுக்கு ஆசியை வழங்குகிறார். இன்றைய தினம் பக்தர்கள் சித்திதாத்ரி தேவிக்கு தேங்காய் மற்றும் பஞ்சாமிர்தம் காணிக்கையாக செலுத்துகின்றனர். இந்த நாளில், கன்யா பூஜையும் செய்யப்படுகிறது. கன்யா பூஜையின் போது, ​​பக்தர்கள் 2 முதல் 10 வயதுக்குட்பட்ட 9 சிறுமிகளை வணங்குகிறார்கள். இவர்கள் துர்கா தேவியின் வடிவங்களாகப் போற்றப்படுகின்றன. எனவே, சடங்குகளின் போது, ​​பக்தர்கள் சிறுமிகளின் கால்களை தண்ணீரில் கழுவுகிறார்கள். இதைத் தொடர்ந்து, அவர்கள் தங்கள் நெற்றியில் திலகம் இட்டுக்கொள்கிறார்கள். பின்னர், அவர்கள் தங்கள் மணிக்கட்டில் சிவப்பு நூலை கட்டி, அவர்களுக்கு பிரசாதம் வழங்குகிறார்கள். உணவருந்திய பின், வழிபடுவோர் சிறுமிகளின் பாதங்களைத் தொட்டு ஆசி பெறுகின்றனர். பின்னர் அவர்களுக்கு பரிசுகளை வழங்குகிறார்கள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஜூன் 26ல் மக்களவை சபாநாயகர் தேர்தல்: பதவியை தக்கவைக்குமா பாஜக? நெருக்கடி தரும் கூட்டணி கட்சிகள் !
ஜூன் 26ல் மக்களவை சபாநாயகர் தேர்தல்: பதவியை தக்கவைக்குமா பாஜக? நெருக்கடி தரும் கூட்டணி கட்சிகள் !
PM Modi: பதவியேற்றதும் முதல் பயணம்.. இத்தாலி புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி!
PM Modi: பதவியேற்றதும் முதல் பயணம்.. இத்தாலி புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி!
Dindigul:
Dindigul: "ஒரு பக்கம் குடும்ப பிரச்சினை! மறுபக்கம் கடன் பிரச்சினை" தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கான்ஸ்டபிள்!
"பிரதமர் மோடியின் இரு தூண்கள்" உளவு மன்னன் அஜித் தோவல் மீண்டும் நியமனம்! பி.கே.மிஸ்ராவுக்கும் பதவி நீட்டிப்பு!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Komban jagan | கொம்பனுக்கு ஆதரவாக ரீல்ஸ்! நேரில் பாடமெடுத்த SP! குவியும் பாராட்டு! Trichy rowdyKuwait Fire Accident : குவைத்தில் நடந்த கொடூரம்! இந்தியர்களின் நிலை என்ன? ராகுல் சரமாரி கேள்வி!Senji Masthan Vs DMK : மகன் ,மருமகன் அலப்பறை மஸ்தான் குடும்பம் ALL OUT! அடித்து ஆடும் ஸ்டாலின்Kanimozhi on BJP : ”பாஜக ஆட்சி நிலைக்காது! நல்ல விஷயம் சொன்ன சு.சுவாமி” கனிமொழி சூசகம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஜூன் 26ல் மக்களவை சபாநாயகர் தேர்தல்: பதவியை தக்கவைக்குமா பாஜக? நெருக்கடி தரும் கூட்டணி கட்சிகள் !
ஜூன் 26ல் மக்களவை சபாநாயகர் தேர்தல்: பதவியை தக்கவைக்குமா பாஜக? நெருக்கடி தரும் கூட்டணி கட்சிகள் !
PM Modi: பதவியேற்றதும் முதல் பயணம்.. இத்தாலி புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி!
PM Modi: பதவியேற்றதும் முதல் பயணம்.. இத்தாலி புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி!
Dindigul:
Dindigul: "ஒரு பக்கம் குடும்ப பிரச்சினை! மறுபக்கம் கடன் பிரச்சினை" தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கான்ஸ்டபிள்!
"பிரதமர் மோடியின் இரு தூண்கள்" உளவு மன்னன் அஜித் தோவல் மீண்டும் நியமனம்! பி.கே.மிஸ்ராவுக்கும் பதவி நீட்டிப்பு!
Fish Farming: 26 ஆண்டுகளாக லாபம்! மீன்குஞ்சு பண்ணை தொழிலில் அசத்தும் சூரக்கோட்டை விவசாயி!
Fish Farming: 26 ஆண்டுகளாக லாபம்! மீன்குஞ்சு பண்ணை தொழிலில் அசத்தும் சூரக்கோட்டை விவசாயி!
Kuwait Fire Tragedy: ‘என்னாச்சு எங்களின் மகன் நிலை’... தவியாய் தவிக்கும் பெற்றோர்: பலவித தகவல்களால் கண்ணீரில் மிதக்கும் ஆதனூர்
‘என்னாச்சு எங்களின் மகன் நிலை’... தவியாய் தவிக்கும் பெற்றோர்: பலவித தகவல்களால் கண்ணீரில் மிதக்கும் ஆதனூர்
Salem Leopard: சேலத்தில் 2 சிறுத்தைகள் நடமாட்டமா? - அதிர்ச்சியில் மக்கள் - குழப்பத்தில் வனத்துறை
சேலத்தில் 2 சிறுத்தைகள் நடமாட்டமா? - அதிர்ச்சியில் மக்கள் - குழப்பத்தில் வனத்துறை
”உசிலம்பட்டியில் பட்டாசு வெடித்தால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்க வேண்டும்“ - உசிலம்பட்டி எம்.எல்.ஏ. பரபரப்பு பேட்டி!
”உசிலம்பட்டியில் பட்டாசு வெடித்தால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்க வேண்டும்“ - உசிலம்பட்டி எம்.எல்.ஏ. பரபரப்பு பேட்டி!
Embed widget