மேலும் அறிய

நாளை மறுநாள் உருவாகும் புயல்.. தயார் நிலையில் NDRF.. டெல்லியில் முக்கிய மீட்டிங்!

நாளை மறுநாள் காலை கிழக்கு மத்திய வங்காள விரிகுடாவில் புயல் உருவாகும் என எச்சரிக்கப்பட்ட நிலையில், புயலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து தேசிய நெருக்கடி மேலாண்மை குழு கூட்டம் ஆலோசித்துள்ளது.

வங்காள விரிகுடாவில் உருவாகவிருக்கும் புயலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து தேசிய நெருக்கடி மேலாண்மைக் குழுவின் கூட்டத்திற்கு அமைச்சரவை செயலாளர் டி.வி.சோமநாதன் இன்று தலைமை தாங்கினார். 

டெல்லியில் முக்கிய மீட்டிங்:

கிழக்கு மத்திய வங்காள விரிகுடாவில், உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியின் தற்போதைய நிலை குறித்து, இந்திய வானிலை ஆய்வுத் துறை (ஐஎம்டி) தலைமை இயக்குநர் குழுவினருக்கு விளக்கினார். இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அக்டோபர் 22ஆம் தேதி காலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், 2024 அக்டோபர் 23ஆம் தேதி காலை கிழக்கு மத்திய வங்காள விரிகுடாவில் புயலாகவும் தீவிரமடையக்கூடும்.

அதன்பிறகு, இது வடமேற்கு திசையில் நகர்ந்து அக்டோபர் 24 காலையில் ஒடிசா-மேற்கு வங்க கடற்கரையில் இருந்து வடமேற்கு வங்காள விரிகுடாவை அடையக்கூடும். தொடர்ந்து வடமேற்கு நோக்கி நகரும் இந்த புயல் 24ஆம் தேதி இரவு மற்றும் அக்டோபர் 25ஆம் தேதி அதிகாலையில் பூரி மற்றும் சாகர் தீவுக்கு இடையில் வடக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடற்கரைகளை கடக்க வாய்ப்புள்ளது.

ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தின் தலைமைச் செயலாளர்கள் சூறாவளி புயலின் எதிர்பார்க்கப்படும் பாதையில் உள்ள மக்களைப் பாதுகாக்க எடுக்கப்பட்டு வரும் ஆயத்த நடவடிக்கைகள் மற்றும் உள்ளூர் நிர்வாகத்தால் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து குழுவிடம் விளக்கினர்.

தயார் நிலையில் NDRF:

மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும், கடலில் இருப்பவர்கள் பாதுகாப்பான இடத்தில் இருக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். கட்டுப்பாட்டு அறைகளும் முடுக்கிவிடப்பட்டு, நிலைமையை கண்காணித்து வருகின்றன.

போதுமான தங்குமிடங்கள், மின்சாரம், மருந்து மற்றும் அவசர சேவைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெளியேற்றப்படுவதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தேசிய பேரிடர் மீட்புப் படை (என்.டி.ஆர்.எஃப்) மேற்கு வங்கத்தில் 14 அணிகளையும், ஒடிசாவில் 11 அணிகளையும் நிறுத்துவதற்காக தயார் நிலையில் வைத்துள்ளது. ராணுவம், கடற்படை மற்றும் கடலோர காவல்படையின் மீட்பு மற்றும் நிவாரணக் குழுக்கள், கப்பல்கள் மற்றும் விமானங்களுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

பாரதீப் மற்றும் ஹால்டியா துறைமுகங்களுக்கு வழக்கமான எச்சரிக்கைகள் மற்றும் ஆலோசனைகள் அனுப்பப்படுகின்றன. உடனடியாக சீரமைக்க மின்துறை அமைச்சகம் மற்றும் தொலைத் தொடர்புத் துறை மூலம் அவசர குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன, மேலும் நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

2 மணி நேரம் மட்டுமே அனுமதி.. தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க கடும் கட்டுப்பாடுகள்.. தமிழக அரசு அதிரடி!
தீபாவளி அன்று 2 மணி நேரம் மட்டுமே அனுமதி.. பட்டாசு வெடிக்க கடும் கட்டுப்பாடுகள்.. தமிழ்நாடு அரசு அதிரடி!
“நான் மன்னிப்பு கேட்க மாட்டேன் ஏனென்றால் நான் கலைஞரின் பேரன்”  - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
“நான் மன்னிப்பு கேட்க மாட்டேன் ஏனென்றால் நான் கலைஞரின் பேரன்” - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
WhatsApp: புதிதாக வெளியாக இருக்கும் ‘சாட் மெமரி’ வசதி; வாட்ஸ் அப் அப்டேட் -விவரம்!
WhatsApp: புதிதாக வெளியாக இருக்கும் ‘சாட் மெமரி’ வசதி; வாட்ஸ் அப் அப்டேட் -விவரம்!
Breaking News LIVE: முரசொலி செல்வம் பெயரில் அறக்கட்டளை: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Breaking News LIVE: முரசொலி செல்வம் பெயரில் அறக்கட்டளை: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay TVK Manadu : கார் பார்கிங்கில் தேங்கிய மழைநீர்!அடாவடி செய்யும் பவுன்சர்கள் நடக்குமா தவெக மாநாடு?Irfan baby Delivery Video : மீண்டும்..மீண்டுமா?தொப்புள்கொடி வெட்டும் வீடியோ அடுத்த சர்ச்சையில் இர்ஃபான்!Bus Accident : FULL SPEED-ல் வந்த பேருந்து ஒன்றோடு ஓன்று மோதி விபத்து பதறவைக்கும் CCTV காட்சி SalemVijay TVK Maanadu |‘’யாரும் உள்ள போகமுடியாது’’மிரட்டும் பவுன்சர்கள்!தவெக மாநாடு ATROCITIES

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
2 மணி நேரம் மட்டுமே அனுமதி.. தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க கடும் கட்டுப்பாடுகள்.. தமிழக அரசு அதிரடி!
தீபாவளி அன்று 2 மணி நேரம் மட்டுமே அனுமதி.. பட்டாசு வெடிக்க கடும் கட்டுப்பாடுகள்.. தமிழ்நாடு அரசு அதிரடி!
“நான் மன்னிப்பு கேட்க மாட்டேன் ஏனென்றால் நான் கலைஞரின் பேரன்”  - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
“நான் மன்னிப்பு கேட்க மாட்டேன் ஏனென்றால் நான் கலைஞரின் பேரன்” - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
WhatsApp: புதிதாக வெளியாக இருக்கும் ‘சாட் மெமரி’ வசதி; வாட்ஸ் அப் அப்டேட் -விவரம்!
WhatsApp: புதிதாக வெளியாக இருக்கும் ‘சாட் மெமரி’ வசதி; வாட்ஸ் அப் அப்டேட் -விவரம்!
Breaking News LIVE: முரசொலி செல்வம் பெயரில் அறக்கட்டளை: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Breaking News LIVE: முரசொலி செல்வம் பெயரில் அறக்கட்டளை: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
மெரினாவில் ரகளை.. போலீசை தகாத வார்த்தை சொல்லி திட்டிய ஜோடி.. தட்டி தூக்கிய காவல்துறை! 
மெரினாவில் ரகளை.. போலீசை தகாத வார்த்தை சொல்லி திட்டிய ஜோடி.. தட்டி தூக்கிய காவல்துறை! 
நாளை மறுநாள் உருவாகிறது புயல்: எங்கு கரையை கடக்கும்: பயணிக்கும் பாதை இதோ.!
நாளை மறுநாள் உருவாகிறது புயல்: எங்கு கரையை கடக்கும்: பயணிக்கும் பாதை இதோ.!
Chennai Beach: இரவில் பிரைட்டாக ஒளிர்ந்த சென்னை கடல்: ஆபத்தா? காரணம் என்ன?: உஷார் மக்களே.!
இரவில் பிரைட்டாக ஒளிர்ந்த சென்னை கடல்: ஆபத்தா? காரணம் என்ன?: உஷார் மக்களே.!
ABP Southern Rising Summit 2024: தெற்கின் குரலை ஓங்கி ஒலிக்கும், ஏபிபி நெட்வர்க்கின் சதர்ன் ரைசிங் உச்சி மாநாடு - இந்த முறை ஐதராபாத்தில்..!
ABP Southern Rising Summit 2024: தெற்கின் குரலை ஓங்கி ஒலிக்கும், ஏபிபி நெட்வர்க்கின் சதர்ன் ரைசிங் உச்சி மாநாடு - இந்த முறை ஐதராபாத்தில்..!
Embed widget