மேலும் அறிய

Rajiv Gandhi Assassination : ராஜீவ் காந்தி படுகொலை...24 ஆண்டுகால விசாரணை ஆணையம் கலைப்பு...முக்கிய தகவல்கள் இதோ

எம்.சி. ஜெயின் ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் 1998 ஆம் ஆண்டு இரண்டு ஆண்டுகாலத்திற்கு எம்டிஎம்ஏ அமைக்கப்பட்டது. 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதையடுத்து கொலையின் பின்னணியில் உள்ள சதியை குறித்து ஆராயும் வகையில் அமைக்கப்பட்ட பல்நோக்கு விசாரணை ஆணையத்தை (எம்டிஎம்ஏ) 24 ஆண்டுகளுக்கு பிறகு மத்திய அரசு கலைத்துள்ளது. 

மத்திய புலனாய்வு அமைப்பின் ஒரு அங்கமாக பல்நோக்கு விசாரணை ஆணையம் செயல்பட்டு வந்தது. மத்திய பாதுகாப்பு அமைப்புகளை சேர்ந்த அலுவலர்கள் இந்த ஆணையத்தில் இடம்பெற்றிருந்தனர். எம்டிஎம்ஏ-வை கலைப்பதற்கான உத்தரவு மே மாதம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மேலும் நிலுவையில் உள்ள விசாரணை சிபிஐயின் வேறு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 1991ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 23ஆம் தேதி, நீதிபதி எம்.சி. ஜெயின் தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டது. ராஜீவ் காந்தி கொலையின் பின்னணியில் உள்ள சதி செயலை கண்டறியும் வகையில் இந்த ஆணையம் அமைக்கப்பட்டது. எம்.சி. ஜெயின் ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் 1998 ஆம் ஆண்டு இரண்டு ஆண்டுகாலத்திற்கு எம்டிஎம்ஏ அமைக்கப்பட்டது. 

ஆனால், விசாரணையில் அது எந்த பெரிய முன்னேற்றத்தையும் அடையவில்லை. இருப்பினும், ஆண்டுக்கு ஒரு முறை விசாரணை ஆணையத்திற்கு கால நீட்டிப்பு வழங்கப்பட்டது.

துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் அளவில் உள்ள அலுவலரின் தலைமையில் எம்டிஎம்ஏ அமைக்கப்பட்டு வங்கி பரிவர்த்தனைகள் உள்பட வழக்கின் பல்வேறு அம்சங்களைப் பற்றிய தகவல்களைக் கோரி இலங்கை, இங்கிலாந்து மற்றும் மலேசியா போன்ற நாடுகளுக்கு எம்டிஎம்ஏ 24 கடிதங்களை அனுப்பியது.

இதில் 20க்கும் மேற்பட்ட கோரிக்கைகளுக்கு இந்த நாடுகளால் பதிலளிக்கப்பட்டன. மேலும், சில கோரிக்கைகளுக்கு மட்டுமே பதில் அளிக்கவில்லை என்று அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். விசாரணை ஏறக்குறைய முடிந்துவிட்டதாகவும், நிலுவையில் உள்ள சில நீதித்துறை கோரிக்கைகள் மற்றும் எம்டிஎம்ஏ அனுப்பிய கடிதம் பற்றிய விவகாரம் இப்போது சிபிஐயால் கையாளப்படும் என்றும் அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

பல்நோக்கு விசாரணை ஆணையம், தொடக்க காலத்தில், இணை காவல்துறை இயக்குநர் அளவில் உள்ள அலுவலரின் தலைமையில் இயங்கி வந்தது. இதையடுத்து, டிஐஜி அளவிலான அலுவலரிடம் இந்த ஆணையம் ஒப்படைக்கப்பட்டது. கொலையின் சதி செயல் பல நாடுகளை நோக்கி கையை காட்டிய நிலையிலும், உண்மைகள் எதனையும் விசாரணை ஆணையத்தால் வெளிச்சத்திற்கு கொண்டு வர முடியவில்லை என அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 1991ஆம் ஆண்டு, மே 21ஆம் தேதி அன்று தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரச்சாரத்தின் போது ராஜீவ் காந்தி விடுதலைப் புலிகளின் தற்கொலை படையால் கொல்லப்பட்டார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand | Amitshah on Mallikarjun Kharge | ”சபதம் போட்டீங்களே கார்கே! இது ஓவர் PERFORMANCE” அமித்ஷா தடாலடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
திருமலை நாயக்கர் மஹால், மீனாட்சி கோயில்..மதுரையின் முக்கிய அடையாளங்கள் அழகான ட்ரோன் புகைப்படங்கள்!
திருமலை நாயக்கர் மஹால், மீனாட்சி கோயில்..மதுரையின் முக்கிய அடையாளங்கள் அழகான ட்ரோன் புகைப்படங்கள்!
Salem Leopard: சிறுத்தை மரணத்தில் அதிர்ச்சி தகவல்கள்... சேலம் வனத்துறையினர் தீவிர விசாரணை.
Salem Leopard: சிறுத்தை மரணத்தில் அதிர்ச்சி தகவல்கள்... சேலம் வனத்துறையினர் தீவிர விசாரணை.
J-K Election: ஜம்மு & காஷ்மீரில் இன்று கடைசி கட்ட வாக்குப்பதிவு - 40 தொகுதிகள் , 415 வேட்பாளர்கள், 39 லட்சம் வாக்காளர்கள்
J-K Election: ஜம்மு & காஷ்மீரில் இன்று கடைசி கட்ட வாக்குப்பதிவு - 40 தொகுதிகள் , 415 வேட்பாளர்கள், 39 லட்சம் வாக்காளர்கள்
Modi Israel PM: கொன்று குவிக்கும் இஸ்ரேல்..! பிரதமர் நேதன்யாகுவிடம் தொலைபேசியில் உரையாடிய மோடி
Modi Israel PM: கொன்று குவிக்கும் இஸ்ரேல்..! பிரதமர் நேதன்யாகுவிடம் தொலைபேசியில் உரையாடிய மோடி
Embed widget