மேலும் அறிய

குஜராத் மோர்பி தொங்கு பால விபத்துக்கு இவங்கதான் காரணம்...வெளியான முக்கிய ஆவணம்..!

விபத்து தொடர்பான முக்கிய ஆவணம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில், விபத்துக்கு தாங்கள்தான் பொறுப்பு என மோர்பி முனிசிபல் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது.

கடந்த அக்டோபர் 30ஆம் தேதி மாலை 6.42 மணிக்கு குஜராத் மாநிலத்தில் உள்ள மோர்பி தொங்கு பாலம் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 135 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். சத் பூஜைக்காக மக்கள் கூட்டம் பாலத்தில் குவிந்திருந்த போது எதிர்பாராமல் பாலம் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளான இந்தச் சம்பவம் நாட்டையே உலுக்கியது.  

இந்தப் பால விபத்து தொடர்பாக மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், விபத்து தொடர்பான முக்கிய ஆவணம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில், விபத்துக்கு தாங்கள்தான் பொறுப்பு என மோர்பி முனிசிபல் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது.

குஜராத் உயர் நீதிமன்றத்தில் மோர்பி முனிசிபல் கார்ப்பரேஷன் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், "பாலம் திறக்கப்பட்டிருக்கக் கூடாது. மச்சு ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்ட பாலம் பழுதுபார்ப்பதற்காக ஏழு மாதங்களாக மூடப்பட்டிருந்தது.

குடிமை அதிகாரிகளிடமிருந்து தகுதிச் சான்றிதழ் இல்லாமல், குஜராத்தி புத்தாண்டான அக்டோபர் 26 அன்று பாலம் மீண்டும் பொதுமக்களுக்காக திறக்கப்பட்டது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாலம் எப்படி அறுந்து விழுந்தது போன்ற விவரங்கள் அடங்கிய பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்வதில் ஏற்பட்ட தாமதம் தொடர்பாக குஜராத் உயர் நீதிமன்றம் கடுமையாக விமர்சித்திருந்தது. இரண்டு நோட்டீஸ் அனுப்பப்பட்ட பிறகும் பிரமாண பத்திரம் தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்பட்டது.

இந்த சூழ்நிலையில், நேற்று நடைபெற்ற விசாரணையின்போது, இன்றைய தினம் மாலையில் மாநகராட்சி அமைப்பு பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்யாவிட்டால் 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று நீதிமன்றம் கூறி இருந்தது. இதை தொடர்ந்து, நீதிமன்றத்தில் மோர்பி முனிசிபல் கார்ப்பரேஷன் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்திருந்தது.

முனிசிபல் கார்ப்பரேஷன், விபத்துக்கு பொறுப்பு ஏற்று கொண்டதாக நீதிமன்றம் கூறியது. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது, 150 ஆண்டுகள் பழமையான பாலத்தை டெண்டர் விடாமல் ஓரேவா குழுமத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்ட விதம் குறித்து உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.

ஜூன் 2017க்குப் பிறகு, "ஒன்பது ஆண்டுகளாக ஒப்பந்தம் (2008 இல் கையெழுத்தானது) புதுப்பிக்கப்படாதபோதும், பாலம் எந்த அடிப்படையில் குறிப்பிட்ட நிறுவனத்தால் இயக்கப்படுகிறது" என்று உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருந்தது. 15 ஆண்டுகளுக்கு, பால பராமரிப்பு குறித்த புதிய ஒப்பந்தம் மார்ச் 2022 இல் கையெழுத்தானது.

அந்த ஒப்பந்தத்தின்படி, பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்புக்காக பாலத்தை 8 முதல் 12 மாதங்கள் வரை ஓரேவா குழுமம் மூடி வைக்க வேண்டும் என கட்டுபாடு விதிக்கப்பட்டிருந்தது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vettaiyan Trailer : ஹண்டர் வந்துட்டார்... வெளியானது ரஜினியின் வேட்டையன் பட டிரைலர்
Vettaiyan Trailer : ஹண்டர் வந்துட்டார்... வெளியானது ரஜினியின் வேட்டையன் பட டிரைலர்
Breaking News LIVE OCT 2 :விசிக மாநாட்டில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றம்.!
Breaking News LIVE OCT 2 :விசிக மாநாட்டில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றம்.!
வெள்ள நீரில் தரையிறங்கிய இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர்: அதிர்ச்சியை ஏற்படுத்தும் காட்சிகள்.!
வெள்ள நீரில் தரையிறங்கிய இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர்: அதிர்ச்சியை ஏற்படுத்தும் காட்சிகள்.!
GST Collection: செப்டம்பர் மாத ஜி.எஸ்.டி.வரி  ரூ.1.73 லட்சம் கோடி வசூல்!
GST Collection: செப்டம்பர் மாத ஜி.எஸ்.டி.வரி ரூ.1.73 லட்சம் கோடி வசூல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jayam Ravi shifted Mumbai : விடாப்பிடியாக நிற்கும் ஆர்த்தி மும்பைக்கு நகர்ந்த ஜெயம் ரவிப்ளான் என்ன?Siddaramaiah Shoes Video : முதல்வரின் அதிகார திமிர்..காங். மரியாதைக்கு வேட்டு தேசிய கொடிக்கு கலங்கம்ADMK Vs AMMK : ’’யார் பெருசுனு அடிச்சு காட்டு!’’ Jayakumar vs TTV Dhinakaran..வம்பிழுத்த ஆதரவாளர்கள்Gambhir plan for Ruturaj |”நீ அடிச்சி ஆடு ருதுராஜ்”கம்பீர் MASTER STROKE அலறும் AUSSIES

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vettaiyan Trailer : ஹண்டர் வந்துட்டார்... வெளியானது ரஜினியின் வேட்டையன் பட டிரைலர்
Vettaiyan Trailer : ஹண்டர் வந்துட்டார்... வெளியானது ரஜினியின் வேட்டையன் பட டிரைலர்
Breaking News LIVE OCT 2 :விசிக மாநாட்டில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றம்.!
Breaking News LIVE OCT 2 :விசிக மாநாட்டில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றம்.!
வெள்ள நீரில் தரையிறங்கிய இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர்: அதிர்ச்சியை ஏற்படுத்தும் காட்சிகள்.!
வெள்ள நீரில் தரையிறங்கிய இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர்: அதிர்ச்சியை ஏற்படுத்தும் காட்சிகள்.!
GST Collection: செப்டம்பர் மாத ஜி.எஸ்.டி.வரி  ரூ.1.73 லட்சம் கோடி வசூல்!
GST Collection: செப்டம்பர் மாத ஜி.எஸ்.டி.வரி ரூ.1.73 லட்சம் கோடி வசூல்!
Thailand Bus Fire: பற்றி எரிந்த பள்ளி பேருந்து..! மழலைகள் உட்பட  23 பேர் உயிரிழப்பு - சரணடைந்த ஓட்டுநர் செய்த தவறு?
Thailand Bus Fire: பற்றி எரிந்த பள்ளி பேருந்து..! மழலைகள் உட்பட 23 பேர் உயிரிழப்பு - சரணடைந்த ஓட்டுநர் செய்த தவறு?
அமைச்சர் பொன்முடியுடன் ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் வாக்குவாதம் - கிராம சபை கூட்டத்தில் சலசலப்பு
அமைச்சர் பொன்முடியுடன் ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் வாக்குவாதம் - கிராம சபை கூட்டத்தில் சலசலப்பு
ரஜினி மனைவியின் மாங்கல்ய பாக்கியத்திற்காக மீனாட்சியம்மன் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கி வழிபாடு
ரஜினி மனைவியின் மாங்கல்ய பாக்கியத்திற்காக மீனாட்சியம்மன் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கி வழிபாடு
Chennai Air Show 2024: சென்னையில் விமானப்படை சாகச நிகழ்ச்சி - நேரில் காண்பது, டிக்கெட் பெறுவது எப்படி?
Chennai Air Show 2024: சென்னையில் விமானப்படை சாகச நிகழ்ச்சி - நேரில் காண்பது, டிக்கெட் பெறுவது எப்படி?
Embed widget