மேலும் அறிய

Modi Visit Greece: 40 ஆண்டுகளுக்கு பிறகு கிரீஸ் மண்ணில் இந்திய பிரதமர்.. உற்சாக வரவேற்பு..

40 ஆண்டுகளுக்கு பிறகு கிரீஸ் நாட்டிற்கு சென்ற இந்திய பிரதமர் என்ற பெருமையை பெற்ற மோடிக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிரதமர் மோடி தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற நிலையில், இன்று கிரீஸ் நாட்டிற்கு சென்றுள்ளார். பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடிக்கு கிரீஸ் நாட்டின் பிரதமர் கிரியோகோஸ் மிட்சோடோகிஸ் தங்களது நாட்டிற்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.

கிரீஸ் நாட்டில் பிரதமர் மோடி:

அவரது அழைப்பை ஏற்ற பிரதமர் மோடி தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டிற்கு பிறகு இன்று கிரீஸ் நாட்டிற்கு சென்றுள்ளார். கடந்த 40  ஆண்டுகளில் கிரீஸ் நாட்டிற்கு செல்லும் முதல் இந்திய பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.

கிரீஸ் நாட்டின் சுற்றுப்பயணம் குறித்து பிரதமர் மோடி,” பழமையான மண்ணிற்கு இது எனது முதல் பயணம். இரண்டு நாகரீகங்களுக்கு இடையேயான பல மில்லியன் ஆண்டுகளாக தொடர்பு உள்ளது. இந்த நவீன காலத்தில், ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி மற்றும் பன்மைத்துவத்தின் பகிரப்பட்ட மதிப்புகளால் எங்கள் உறவுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

ஒப்பந்தங்கள்:

வர்த்தகம் மற்றும் முதலீடு, பாதுகாப்பு, கலாச்சாரம் மற்றும் மக்களிடையயான தொடர்புகள் போன்ற பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு நமது இரு நாடுகளையும் நெருக்கமாக கொண்டு வருகிறது. எனது கிரீஸ் வருகை எங்கள் பன்முக உறவில் ஒரு புதிய அத்தியாயத்தை திறக்கும் என எதிர்பார்க்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார். ஏதென்ஸ் நகரில் பிரதமர் மோடி - கிரீஸ் பிரதமரை நேரில் சந்தித்து பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். மேலும், இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டது.

இந்தியா – கிரீஸ் நாட்டிற்கு இடையே நல்ல உறவு நீடித்து வருகிறது. 1998ம் ஆண்டு பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டபோது பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தபோது, கிரீஸ் ஆதரவு தெரிவித்தது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்கும் கிரீஸ் ஆதரவு தெரிவித்து வருகிறது.

40 ஆண்டுகள்:

கிரீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி அங்கு அந்த நாட்டு குடியரசுத் தலைவர் காத்ரினா, பிரதமர் மற்றும் அந்த நாட்டின் தொழில் அதிபர்களையும் சந்திக்கிறார். கிரீஸ் நாட்டிற்கு கடைசியாக 1983ம் ஆண்டு இந்திய பிரதமராக பொறுப்பு வகித்த இந்திரா காந்தி சென்றிருந்தார். அவருக்கு பிறகு 40 ஆண்டுகளுக்கு பிறகு மோடி சென்றுள்ளார்.

கிரீஸ் நாட்டில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய தூதரக அதிகாரிகள், அந்த நாட்டு அதிகாரிகள் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மேலும் படிக்க: Supereme Court On Manipur: மணிப்பூர் பாலியல் வன்கொடுமை.. சிபிஐ வழக்குகளை அசாம் மாநிலத்திற்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவு

மேலும் படிக்க: Uttarpradesh Accident: கால்வாயில் கவிழ்ந்த டிராக்டர்: அடித்து செல்லப்பட்ட மக்கள்...9 பேர் உயிரிழப்பு...உ.பி.யில் சோகம்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

MR Vijayabaskar: ரூ.100 கோடி நில அபகரிப்பு : போலி ஆவணங்கள், தலைமறைவான எம்.ஆர். விஜயபாஸ்கர் - வடமாநிலம் விரைந்த போலீசார்
தலைமறைவான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் : வடமாநிலத்திற்கு விரைந்த சிபிசிஐடி போலீசார்
Las Vegas Gun Shot: காலையிலேயே சோகம்.. அமெரிக்காவில் 5 பேர் சுட்டுக் கொலை - தற்கொலை செய்து கொண்ட கொலையாளி..!
Las Vegas Gun Shot: காலையிலேயே சோகம்.. அமெரிக்காவில் 5 பேர் சுட்டுக் கொலை - தற்கொலை செய்து கொண்ட கொலையாளி..!
Sunita Williams: பூமிக்கு திரும்ப முடியாமல் தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ் - விண்கலத்தில் கோளாறு, காலவரையரையின்றி பயணம் ஒத்திவைப்பு
பூமிக்கு திரும்ப முடியாமல் தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ் - விண்கலத்தில் அடுத்தடுத்து கோளாறு
Breaking News LIVE: முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் ஜூலை 3ம் தேதி வரை நீட்டிப்பு
Breaking News LIVE: முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் ஜூலை 3ம் தேதி வரை நீட்டிப்பு
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Mamata banerjee : ”காங்கிரஸ் எங்ககிட்ட கேட்கல” மீண்டும் அதிருப்தியில் மம்தாSubramanian swamy slams Modi :  ”பொய் சொல்லும் மோடி”விளாசும் சுப்ரமணியன் சுவாமி”நீங்க என்ன பண்ணீங்க”DMK MLA on kalla sarayam | ”என் தொகுதியிலேயே சாராயமா?”ON THE SPOT-ல் ரெய்டு! திமுக MLA Mass சம்பவம்!lok sabha Speaker Election | மோதி பார்க்கலாம் மோடி முஷ்டி முறுக்கும் ராகுல்!வரலாற்று சம்பவம் LOADING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MR Vijayabaskar: ரூ.100 கோடி நில அபகரிப்பு : போலி ஆவணங்கள், தலைமறைவான எம்.ஆர். விஜயபாஸ்கர் - வடமாநிலம் விரைந்த போலீசார்
தலைமறைவான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் : வடமாநிலத்திற்கு விரைந்த சிபிசிஐடி போலீசார்
Las Vegas Gun Shot: காலையிலேயே சோகம்.. அமெரிக்காவில் 5 பேர் சுட்டுக் கொலை - தற்கொலை செய்து கொண்ட கொலையாளி..!
Las Vegas Gun Shot: காலையிலேயே சோகம்.. அமெரிக்காவில் 5 பேர் சுட்டுக் கொலை - தற்கொலை செய்து கொண்ட கொலையாளி..!
Sunita Williams: பூமிக்கு திரும்ப முடியாமல் தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ் - விண்கலத்தில் கோளாறு, காலவரையரையின்றி பயணம் ஒத்திவைப்பு
பூமிக்கு திரும்ப முடியாமல் தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ் - விண்கலத்தில் அடுத்தடுத்து கோளாறு
Breaking News LIVE: முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் ஜூலை 3ம் தேதி வரை நீட்டிப்பு
Breaking News LIVE: முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் ஜூலை 3ம் தேதி வரை நீட்டிப்பு
Lok Sabha NEET: பதவியேற்கும்போதே சம்பவம் செய்த சுயேச்சை எம்.பி., - நீட் மறுதேர்வு நடத்தக்கோரி டி-ஷர்ட், வாக்குவாதம்
Lok Sabha NEET: பதவியேற்கும்போதே சம்பவம் செய்த சுயேச்சை எம்.பி., - நீட் மறுதேர்வு நடத்தக்கோரி டி-ஷர்ட், வாக்குவாதம்
Lok Sabha Speaker Election: பிடிகொடுக்காத பாஜக..! இன்று மக்களவை சபாநாயகர் தேர்தல், ஓம் பிர்லா Vs கொடிக்குன்னில் சுரேஷ்
Lok Sabha Speaker Election: பிடிகொடுக்காத பாஜக..! இன்று மக்களவை சபாநாயகர் தேர்தல், ஓம் பிர்லா Vs கொடிக்குன்னில் சுரேஷ்
Rasipalan: மகரத்துக்கு நம்பிக்கை..கும்பத்துக்கு கவனம்: எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள்?
Rasipalan: மகரத்துக்கு நம்பிக்கை..கும்பத்துக்கு கவனம்: எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள்?
Vikravandi By-Election: விக்கிரவாண்டி தொகுதி இடைத் தேர்தல் - இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகிறது
விக்கிரவாண்டி தொகுதி இடைத் தேர்தல் - இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகிறது
Embed widget