மேலும் அறிய

Manipur Firing: மணிப்பூரில் மீண்டும் வன்முறை.. பாதுகாப்பு படை வீரர்களை தாக்கிய கும்பல்.. துப்பாக்கிச்சூட்டால் பரபரப்பு

கடந்த சில நாள்களாக மணிப்பூரில் சற்று அமைதி நிலவி வந்த நிலையில், தற்போது வெடித்துள்ள வன்முறை மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மே 3ஆம் தேதி, மணிப்பூரில் இனக்கலவரம் வெடித்தது. கடந்த இரண்டரை மாதங்களுக்கு மேலாக நடந்து வரும் வன்முறை சம்பவங்கள் நாட்டையே உலுக்கியது. குறிப்பாக, பழங்குடி பெண்களுக்கு நேர்ந்த கொடூரம் வீடியோவாக வெளியாகி நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

நாட்டை அதிர்ச்சியில் ஆழ்த்திய மணிப்பூர் சம்பவம்:

பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த  இரண்டு பெண்கைளை  ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் நடுரோட்டில் நிர்வாணமாக இழுத்துச் செல்லும் வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இரு பெண்களையும் அந்த கும்பல் வயல்வெளியில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறப்படுகிறது. 

இந்த சம்பவம், நாட்டில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதை தொடர்ந்து, நாட்டின் பல்வேறு இடங்களில் மணிப்பூரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. மணிப்பூர் விவகாரத்தால், கடந்த வியாழக்கிழமை தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் முடங்கி போயுள்ளது.

இந்த நிலையில், மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. கடந்த சில நாள்களாக மணிப்பூரில் சற்று அமைதி நிலவி வந்த நிலையில், தற்போது வெடித்துள்ள வன்முறை மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மணிப்பூரில் மீண்டும் வன்முறை:

மியான்மர் எல்லையில் அமைந்துள்ள தெங்னௌபால் மாவட்டத்தின் மோரே நகரத்தில்தான் இந்த வன்முறை சம்பவம் நிகழ்ந்துள்ளது. பாதுகாப்பு படையினர் தங்கியிருந்த தற்காலிக முகாமை கும்பல் தாக்கியதால், அவர்கள் பதிலுக்கு துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். வனத்துறை கட்டிடமும் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.

மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டுவதற்காக இயங்கி வரும் அரசு சாரா அமைப்புகள், இந்த சம்பவம் குறித்து விளக்குகையில், "ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதை தொடர்ந்து, அத்தியாவசியப் பொருட்களை வாங்கச் சென்ற சில பெண்களை பாதுகாப்புப் படையைச் சேர்ந்த சிலர் சரமாரியாகத் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மோரே பஜார் பகுதியில் பிரச்சனை வெடித்துள்ளது.

இதன் காரணமாக, பாதுகாப்பு படை வீரர்களுக்கும் பெண்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, சந்தைக்கு செல்லும் பாதையை பெண்கள் முடக்கினர். பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கையால் ஆத்திரமடைந்த ஒரு குழுவினர், ராணுவ வீரர்கள் பயன்படுத்திய வீடுகளுக்கு தீ வைத்தனர்" எனத் தெரிவித்துள்ளது. 

கூட்டத்தை கலைக்க கண்ணீர் புகை குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. மேலும், கலவரத்தின் மத்தியில், பாதுகாப்புப் படையைச் சேர்ந்த சில வீரர்கள் நேரடி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர். கும்பலில் இருந்தவர்கள் பாதுகாப்பு படை வீரர்களை நோக்கி திருப்பிச் சுட்டதாக காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.

நேற்று மாலை காங்போக்பி மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் பயன்படுத்திய இரண்டு பேருந்துகளை கும்பல் தீ வைத்து எரித்தது. சபோர்மினா கிராமத்தில் மணிப்பூர் பதிவு எண்களைக் கொண்ட பேருந்துகளை உள்ளூர்வாசிகள் நிறுத்தி, வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் யாரேனும் இருக்கிறார்களா என பார்த்தனர். அப்போது, கும்பலில் இருந்த சிலர் பேருந்துகளுக்கு தீ வைத்தனர். ஆனால், உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

NEET RESULT 2026 : நீட் தேர்வில் கெத்து காட்டிய தமிழகம்! தமிழக அளவில் முதலிடம்... இந்திய அளவில் 12-வது இடம்; விழுப்புரம் மாணவர் சாதனை..
NEET RESULT 2026 : நீட் தேர்வில் கெத்து காட்டிய தமிழகம்! தமிழக அளவில் முதலிடம்... இந்திய அளவில் 12-வது இடம்; விழுப்புரம் மாணவர் சாதனை..
ISRO: ஒரே ஆண்டில் 120 இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள் ராஜினாமா - நட்டாற்றில் திட்டங்கள், காரணம்? புதிய கட்டுப்பாடுகள்
ஒரே ஆண்டில் 120 இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள் ராஜினாமா - நட்டாற்றில் திட்டங்கள், காரணம்? புதிய கட்டுப்பாடுகள்
ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டில் 10 நிமிடத்தில் கேஸ் சிலிண்டர் டெலிவரி! இனி கவலை இல்லை!
ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டில் 10 நிமிடத்தில் கேஸ் சிலிண்டர் டெலிவரி! இனி கவலை இல்லை!
10 கிலோ எல்பிஜி சிலிண்டர்: இனி சுமை இல்லை! வணிகர்கள், வீடுகளுக்கு புதிய வசதி.
10 கிலோ எல்பிஜி சிலிண்டர்: இனி சுமை இல்லை! வணிகர்கள், வீடுகளுக்கு புதிய வசதி.

வீடியோ

நாகர்கோவில் LOCKUP DEATH உடற்கூராய்வில் அதிர்ச்சி! 3 போலீஸார் அதிரடி கைது!
பட்டப்பகலில் திருட்டு !கல்லாப்பெட்டி சூறையாடல்..மர்ம நபர் கைவரிசை..
+2 மாணவனுக்கு கத்திக்குத்து!சக மாணவர்கள் வெறிச்செயல்..அரசு பள்ளியில் பயங்கரம்
தவணை தொகை கட்ட தாமதம்! அசிங்கபடுத்திய வங்கி ஊழியர்கள்.. விவசாயி தற்கொலை
பெண் நிர்வாகி மீது தாக்குதல் !ஆடையை கிழித்த தவெகவினர்..கோவையில் வெடித்த மோதல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vaiko : என் வாழ்க்கையில் நான் செய்த இரண்டு மிகப்பெரிய தவறுகள்.! பட்டியலிட்டு கொந்தளித்த வைகோ
என் வாழ்க்கையில் நான் செய்த இரண்டு மிகப்பெரிய தவறுகள்.! பட்டியலிட்டு கொந்தளித்த வைகோ
TVK Govt: ”ப்ராஜெக்ட் மேகாலயா” தவெக ஆட்சிக்கு போட்ட ஸ்கெட்ச் - விசாரணையில் பிரபல ஊடகவியலாளர்
”ப்ராஜெக்ட் மேகாலயா” தவெக ஆட்சிக்கு போட்ட ஸ்கெட்ச் - விசாரணையில் பிரபல ஊடகவியலாளர்
Rohit Sharma: ”2027 ODI உலகக் கோப்பைக்கு நீங்க வேண்டாம்” ரோகித் சர்மாவிற்கு தகவல் சொன்ன பிசிசிஐ? ஜுலை.19
”2027 ODI உலகக் கோப்பைக்கு நீங்க வேண்டாம்” ரோகித் சர்மாவிற்கு தகவல் சொன்ன பிசிசிஐ? ஜுலை.19
The Odyssey Review: ”தி ஒடிஸி” எப்படி இருக்கு? நோலனின் காவியம் தெறிக்கிறதா? சோதிக்கிறதா - திரைப்பட விமர்சனம்
”தி ஒடிஸி” எப்படி இருக்கு? நோலனின் காவியம் தெறிக்கிறதா? சோதிக்கிறதா - திரைப்பட விமர்சனம்
DMK vs BJP : பாஜகவிற்கு ஆதரவா.? நாடாளுமன்றத்தில் திமுகவின் நிலை என்ன.? ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை
பாஜகவிற்கு ஆதரவா.? திமுகவின் நிலை என்ன.? ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை
TNPSC: க்ரூப்-1 தேர்வு தேதியை மாற்றி அறிவித்த டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் - எப்போது? எத்தனை பணியிடங்கள்?
க்ரூப்-1 தேர்வு தேதியை மாற்றி அறிவித்த டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் - எப்போது? எத்தனை பணியிடங்கள்?
TN Weather Update: 4 மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும் - சென்னையில் மழை? தமிழக வானிலை எச்சரிக்கை
4 மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும் - சென்னையில் மழை? தமிழக வானிலை எச்சரிக்கை
Gold and silver rate today : நகைப்பிரியர்களுக்கு சூப்பர் சான்ஸ்.! ரூ.5000 சரிந்தது- இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ..
நகைப்பிரியர்களுக்கு சூப்பர் சான்ஸ்.! ரூ.5000 சரிந்தது- இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ..
Embed widget