மேலும் அறிய

ஆசிரியராக மாறிய பிச்சைக்காரர்... ஓய்வு பெறும் வயதில் வந்த பணி நியமன ஆணை...

குறைந்த இடங்களுக்கு ஏராளமான போட்டித் தேர்வாளர்கள் களமிறங்குவதால் அனைவருக்கும் அரசு வேலை என்பது கனவாகவே உள்ளது.

ஆந்திராவில் 24 ஆண்டு கால போராட்டத்திற்கு பின் பிச்சைக்காரர் ஒருவருக்கு அரசுப் பணி கிடைத்துள்ளது. 

இந்தியாவில் வேலை தேடி அலையும் பட்டதாரிகள் ஒருபுறம் என்றால் அரசுப் பணிக்காக காத்திருக்கும் ஏராளமான இளைஞர்கள் மறுபக்கம் இருக்கவே செய்கிறார்கள். குறைந்த இடங்களுக்கு ஏராளமான போட்டித் தேர்வாளர்கள் களமிறங்குவதால் அனைவருக்கும் அரசு வேலை என்பது கனவாகவே உள்ளது. பலருக்கும் நூழிலையில் அதற்கான வாய்ப்பு கிடைக்காமல் போன கதைகளையும் நாம் கேள்விப்பட்டிருப்போம். 

இதுதொடர்பான கதைகளையும் நாம் சினிமாவில் பார்த்திருப்போம். நடிகர் கரண் நடித்த “தம்பி வெட்டோத்தி சுந்தரம்” படத்தில் அரசு ஆசிரியர் பணிக்காக காத்திருந்து கடைசியில் தவறான பாதையில் சென்றதால் பார்வையிழந்த பின் அவர் தேடிய அரசு பணிக்காக ஆணை வந்திருப்பது போன்ற கதை இடம் பெற்றிருக்கும்.இது உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட கதை என்றாலும் தேர்வில் தேர்ச்சி பெற்றும் பணி ஆணை கிடைக்காமல் இருப்பது உண்மையிலேயே கடினமான ஒன்று தான். 

அதேமாதிரி சம்பவம் ஒன்று ஆந்திரா மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. அங்குள்ள பதப்பட்டினத்தின் பெத்தா சித்தி பகுதியைச் சேர்ந்த அல்லகா கேதாரேஸ்வர ராவ்  ஆங்கிலத்தில் எம்.ஏ மற்றும் இளங்கலை பி.எட். படிப்பை முடித்துள்ளார். ஆனாலும் தனது பெற்றோர்களைக் காப்பாற்ற சைக்கிளில்  ஆடைகள் விற்பனை செய்யும் தொழில் செய்து வந்துள்ளார். இதனிடையே கடந்த 1998 ஆம் ஆண்டு அரசு ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான டிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றார். 

ஆனால் அப்போது ஆட்சியில் இருந்த தெலுங்கு தேசம் கட்சியின் நிர்வாக மற்றும் சட்ட சிக்கல்களால் 24 ஆண்டுகளாக பணி ஆணை கிடைக்காமல் இருந்துள்ளது. அதற்குள் கேதாரேஸ்வர ராவ் பெற்றோரை இழந்து,உடன் பிறந்தவர்களால் வெறுக்கப்பட்டதால் பிச்சைக்காரராக மாறியுள்ளார்.தற்போதைய முதல்வர் இப்பிரச்சனைக்கு தீர்வு கண்டுள்ளதால்  அந்த பேட்சில் டிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. 

அந்த வகையில் கேதாரேஸ்வர ராவுக்கு ஆசிரியர் பணி கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் முடி திருத்தம் செய்து புதிய ஜீன்ஸ் மற்றும் சட்டை அணிந்து ஆசிரியராக மாறியுள்ளார். மேலும் ஓய்வுபெறும் வயதில் பணி ஆணை வந்திருந்த போதும் தான் ஆசிரியராக பணியாற்ற ஆர்வமாக இருப்பதாக கேதாரேஸ்வர ராவ் கூறியுள்ளார். 

கடந்த 1998 ஆம் ஆண்டு 12,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் டிஎஸ்சி தேர்வின் மூலம் அரசு ஆசிரியராக தகுதி பெற்றனர்.ஆனால், அவர்களுக்கு பணியிடங்கள் வழங்கப்படவில்லை. தகுதியான விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு பணியிடங்களை வழங்கக் கோரி  பலமுறை போராட்டங்களில் பங்கேற்று எந்த பதிலும் அரசிடமிருந்து கிடைக்கப் பெறவில்லை.  இதற்கிடையில் DSC-1998 கோப்பு முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியால் அங்கீகரிக்கப்பட்ட பிறகு, இதில் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களில் 40 முதல் 60 சதவீதம் பேர் ஓய்வு பெறும் வயதைக் கடந்துள்ளது தெரிய வந்துள்ளது. 

மேலும் 10 சதவீத விண்ணப்பதாரர்கள் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Pongal Gift: மக்களே! ரூபாய் 3 ஆயிரம்.. பொங்கல் பரிசுத்தொகுப்புடன் வழங்க அரசு முடிவு?
Pongal Gift: மக்களே! ரூபாய் 3 ஆயிரம்.. பொங்கல் பரிசுத்தொகுப்புடன் வழங்க அரசு முடிவு?
Indigo Flights: போச்சா.. நாங்க ரெடி என அறிவித்த இண்டிகோ விமான நிறுவனம்.. 10% ரத்து செய்து மத்திய அரசு உத்தரவு
Indigo Flights: போச்சா.. நாங்க ரெடி என அறிவித்த இண்டிகோ விமான நிறுவனம்.. 10% ரத்து செய்து மத்திய அரசு உத்தரவு
KKR IPL: சீன் போட்ட வெங்கடேஷ் அய்யர்? கொல்கத்தா அணியில் ஒப்பந்தம்? பயிற்சியாளர் உடைத்த உண்மைகள்
KKR IPL: சீன் போட்ட வெங்கடேஷ் அய்யர்? கொல்கத்தா அணியில் ஒப்பந்தம்? பயிற்சியாளர் உடைத்த உண்மைகள்
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal Gift: மக்களே! ரூபாய் 3 ஆயிரம்.. பொங்கல் பரிசுத்தொகுப்புடன் வழங்க அரசு முடிவு?
Pongal Gift: மக்களே! ரூபாய் 3 ஆயிரம்.. பொங்கல் பரிசுத்தொகுப்புடன் வழங்க அரசு முடிவு?
Indigo Flights: போச்சா.. நாங்க ரெடி என அறிவித்த இண்டிகோ விமான நிறுவனம்.. 10% ரத்து செய்து மத்திய அரசு உத்தரவு
Indigo Flights: போச்சா.. நாங்க ரெடி என அறிவித்த இண்டிகோ விமான நிறுவனம்.. 10% ரத்து செய்து மத்திய அரசு உத்தரவு
KKR IPL: சீன் போட்ட வெங்கடேஷ் அய்யர்? கொல்கத்தா அணியில் ஒப்பந்தம்? பயிற்சியாளர் உடைத்த உண்மைகள்
KKR IPL: சீன் போட்ட வெங்கடேஷ் அய்யர்? கொல்கத்தா அணியில் ஒப்பந்தம்? பயிற்சியாளர் உடைத்த உண்மைகள்
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
Embed widget