மேலும் அறிய

Crime: கார் பேனட்டில் தொங்கிய போக்குவரத்து காவலர்..! 19 கி.மீ. தொலைவிற்கு இழுத்துச்சென்ற இளைஞர்..! நடந்தது என்ன?

மும்பையில் கார் பேனட்டில் 19 கி.மீ. போக்குவரத்து போலீசாரை தொங்கவிட்டு இளைஞர் இழுத்துச்சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்ட்ரா தலைநகர் மும்பை. இந்தியாவிலேயே அதிகளவில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களில் மும்பை முதன்மையானது ஆகும். இதனால், அங்குள்ள சாலைகளில் போக்குவரத்து நெரிசல் எப்போதும் அதிகளவில் காணப்படும். அதை கட்டுப்படுத்த போக்குவரத்து போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிக்னலில் நிற்காத கார்:

மும்பையில் உள்ள வஷிநகரத்தில் நேற்றுமுன்தினம் போக்குவரத்து போலீசார் சித்தேஷ்வர் மாலி மற்றும் மற்றொரு போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியே வந்த கார் ஒன்று சிவப்பு நிற சிக்னல் இருப்பதை கண்டும் நிற்காமல் முன்னால் வந்து நின்றதுடன், முன்பே நின்றிருந்த காரையும் இடித்தது.

அந்த காரில் இருந்தவர்கள் போக்குவரத்து போலீசார் இருவரையும் கண்டவுடன் காருடன் தப்பியோடினர். இதையடுத்து, மாலியும் மற்றெணாரு போலீசாரும் இணைந்து தப்பியோடியவர்களை பிடிக்க இருசக்கர வாகனத்தில் அவர்களை விரட்டிச் சென்றனர். பின்னர், ஏ.எம்.பி.சி. மார்க்கெட் அருகே அவர்களை மடக்கிப்பிடித்தனர்.

பேனட்டில் தொங்கிச்சென்ற போலீஸ்:

அந்த காரை 23 வயதே ஆன ஆதித்ய பேந்தே என்ற இளைஞர் ஓட்டிவந்துள்ளார். அவரை போலீசார் காரை விட்டு கீழே இறங்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், அவர் காரை விட்டு கீழே இறங்காமலே இருந்துள்ளார். போக்குவரத்து காவலர் மாலி காரின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது, யாரும் எதிர்பார்க்காத வகையில் காரை ஓட்டி வந்த ஆதித்ய பேந்தே காரை முன்னால் நின்று கொண்டிருந்த போக்குவரத்து போலீசார் மாலி மீது ஏற்ற முயற்சித்தார்.

தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக மாலி சட்டென்று காரின் பேனட் மீது தாவினார். பேனட் மீது தாவிய மாலி காரின் இருபுறமும்  இறுக்கமாக பிடித்துக் கொண்டு கீழே விழாதவாறு பிடித்துக் கொண்டார். ஆனாலும், ஆதித்ய பேந்தே காரை நிறுத்தாமல் நெடுஞ்சாலையில் காரை அதிவேகமாக இயக்கத் தொடங்கினார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த சக போலீசார் உடனடியாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.

சுமார் 19 கிலோ மீட்டர் தொலைவிற்கு கார் பேனட்டில் போக்குவரத்து போலீசார் சித்தேஸ்வரர் மாலி தொங்கியபடியே தன்னை தற்காத்துக் கொண்டு பயணித்துள்ளார். அந்த காரை போலீசார் பின்தொடர்ந்தே சென்றனர். பின்னர். 19 கி.மீ. தொலைவிற்கு பிறகு பால்ம் கடற்கரை சாலையில் போலீசார் அந்த காரை ஒருவழியாக மடக்கிப்பிடித்து நிறுத்தினர்.

போதை வேலையா?

பின்னர், காரில் தொங்கிக்கொண்டிருந்த சித்தேஸ்வரர் மாலி பாதுகாப்பாக கீழே இறங்கினார். மேலும், காரை ஓட்டிவந்த ஆதித்ய பிந்தேவை கைது செய்தனர். அவரை கைது செய்ததுடன் அவரது காரையும் பறிமுதல் செய்தனர். காரை ஓட்டியபோது ஆதித்ய பேந்தே போதை மருந்து ஏதும் உட்கொண்டிருந்தாரா? என்பதற்காக அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்.

போக்குவரத்து போலீசாரை 19 கி.மீ. சாலையில் காரில் பேனட்டில் தொங்கவிட்டு காரை இளைஞர் ஓட்டிச்சென்ற சம்பவம் மும்பை முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரை ஓட்டிவந்த ஆதித்ய பேந்தே மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: 7 AM Headlines: நேற்று நடந்த, இன்னைக்கு நடக்கபோற சமாச்சாரம் என்னன்னு தெரியனுமா..? காலை 7 மணி தலைப்பு செய்திகள் இதோ..!

மேலும் படிக்க: உச்சக்கட்ட பதற்றம்... அத்திக் அகமது கொலை வழக்கை விசாரிக்க விசாரணை ஆணையம்... அடுத்து என்ன?

தலைப்பு செய்திகள்

ஓணம் பண்டிகை: சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!
ஓணம் பண்டிகை: சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: ஆவணி, ஓணம் தரிசனத்திற்கு பக்தர்கள் குவிந்தனர்!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: ஆவணி, ஓணம் தரிசனத்திற்கு பக்தர்கள் குவிந்தனர்!
ஆதார் கார்டு தொலைந்தாலும் கவலையில்லை! வாட்ஸ்அப்பில் நொடியில் டவுன்லோட் செய்யுங்கள்!
ஆதார் கார்டு தொலைந்தாலும் கவலையில்லை! வாட்ஸ்அப்பில் நொடியில் டவுன்லோட் செய்யுங்கள்!
BJP: டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Tesla Model Y Real World Range: டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
Embed widget