![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
உச்சக்கட்ட பதற்றம்... அத்திக் அகமது கொலை வழக்கை விசாரிக்க விசாரணை ஆணையம்... அடுத்து என்ன?
இந்த ஆணையம் இரண்டு மாதங்களுக்குள் தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
![உச்சக்கட்ட பதற்றம்... அத்திக் அகமது கொலை வழக்கை விசாரிக்க விசாரணை ஆணையம்... அடுத்து என்ன? Atiq Ahmed Killing Former Judges Top Cop In Judicial Commission To Probe murder உச்சக்கட்ட பதற்றம்... அத்திக் அகமது கொலை வழக்கை விசாரிக்க விசாரணை ஆணையம்... அடுத்து என்ன?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/16/713c2ea5a075d9f2eec1eeb35e7c76701681657411935224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
உத்தரப் பிரதேசத்தில் முன்னாள் எம்.பி.யும், பிரபல ரவுடியுமான அத்திக் அகமது மற்றும் அவரது சகோதரர் காலித் அஸீம் என்ற அஷ்ரப் ஆகியோர் கொல்லப்பட்டது குறித்து விசாரிக்க அம்மாநில அரசு விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்துள்ளது.
ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அரவிந்த் குமார் திரிபாதி தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி பிரிஜேஷ் குமார் சோனி மற்றும் முன்னாள் டிஜிபி சுபேஷ் குமார் சிங் இடம்பெற்றுள்ளனர். இந்த ஆணையம் இரண்டு மாதங்களுக்குள் தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
விசாரணை கமிஷன் சட்டம், 1952இன் கீழ் மாநில உள்துறை அமைச்சகம் இந்த விசாரணை ஆணையத்தை அமைத்துள்ளது. அத்திக் அகமது மற்றும் அவரது சகோதரர் காலித் அஸீம் ஆகியோர் மர்ம நபர்களால் காவல்துறையினர் முன்பு சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.
பதற்றத்தை ஏற்படுத்திய கொலை:
கடந்த 2005 ஆம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ ராஜூ பால் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்தவர் வழக்கறிஞர் உமேஷ் பால். இவரை கடந்த 2007 ஆம் ஆண்டு கடத்தி கொலை செய்தனர். இதுதொடர்பான வழக்கில் சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.வும், பிரபல ரவுடியுமான அத்திக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் ஆகியோருக்கு கடந்த மார்ச் 28 ஆம் தேதி பிரயாக்ராஜ் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது.
இதனிடையே சில நாட்கள் முன்பு உமேஷ் பால் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த அத்திக் அகமதுவின் மகன்கள் ஆசாத் மற்றும் குலாம் ஆகியோர் ஜான்சியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு குற்றவாளிகளை பிடிக்க சென்ற போலீசாருக்கும், எதிர் தரப்புக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஆசாத் மற்றும் குலாம் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
போலீசார் முன்பே சுட்டுக்கொலை:
இதனையடுத்து உமேஷ் பால் கொலை வழக்கில் தன்னையும் தனது குடும்பத்தினரையும் பொய்யாகச் சிக்க வைத்து, தாங்கள் உத்தரப்பிரதேச காவல்துறையால் போலி என்கவுன்டரில் கொல்லப்படலாம் என்று கூறி, பாதுகாப்பிற்காக உச்சநீதிமன்றத்தில் அத்திக் அகமது வழக்குத் தொடர்ந்தார். ஆனால் இதனை விசாரிக்க நீதிபதிகள் மறுத்து விட்டனர்.
இப்படியான சூழலில் அத்திக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் இருவரும் மருத்துவ பரிசோதனைக்காக பிரயாக்ராஜ் அழைத்து செல்லப்பட்டனர். பின்னர் இருவரும் செய்தியாளர்களுக்கு பேட்டிக் கொடுத்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த 3 மர்ம நபர்கள் திடீரென கைத்துப்பாக்கியை எடுத்து இருவரையும் சரமாரியாக சுட்டனர். இதில் அத்திக், அஷ்ரப் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)