மேலும் அறிய

இறந்து போன உடல்களிலிருந்து மாயமான கண்கள்...பிணவறையில் நீடிக்கும் மர்மம்...நடந்தது என்ன?

சாகர் மாவட்டத்தின் மருத்துவமனை ஒன்றின் பிணவறையில் வைக்கப்பட்ட இரண்டு உடல்களில் இருந்த கண்கள் காணாமல் போயுள்ளது.

அரசு மருத்துவமனைகளில் அதிகாரிகள் அலட்சியமாக நடந்து கொள்வது தொடர் கதையாகி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, மத்திய பிரதேசத்தில் நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சாகர் மாவட்டத்தின் மருத்துவமனை ஒன்றில் பிணவறையில் வைக்கப்பட்ட இரண்டு உடல்களில் இருந்த கண்கள் காணாமல் போயுள்ளது.

15 நாள்களுக்கு முன்பு இந்த சம்பவம் நடந்துள்ளது. சாகர் மாவட்ட மருத்துவமனையில் இறந்த உடல்களின் கண்களை எலிகள் கடித்து தின்றதாக கூறப்படுகிறது. முதல் சம்பவம் ஜனவரி 4ஆம் தேதியும் இரண்டாவது சம்பவம் ஜனவரி 19ஆம் தேதியும் நடந்துள்ளது.

கடந்த ஜனவரி 4ஆம் தேதி, 32 வயதான மோதிலால் கவுண்ட் அமெட் கிராமத்தில் உள்ள ஒரு பண்ணையில் மயங்கி விழுந்ததால் அவரது குடும்பத்தினர் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மருத்துவமனையின் OPD சிகிச்சையில் அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. காலை, பிரேத பரிசோதனைக்காக டாக்டர் வந்து பார்த்தபோது, ​​சடலத்தின் ஒரு கண் காணவில்லை. ​​ஃப்ரீசர் பழுதுபோனதால் பிணவறையில் உள்ள திறந்தவெளி மேஜையில் சடலம் கிடந்துள்ளது.

மருத்துவமனைகள் குறித்த சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான விஷயங்கள் அடிக்கடி கேள்விக்குள்ளாகி வருகின்றன. மருத்துவமனையில் மின்வெட்டு போன்ற பிரச்சனைகளால் இந்திய அரசு மருத்துவமனைகள் பல முறை விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது.

அதே போல பாதுகாப்பு விதிகளும் சரியாக கடைப்பிடிக்கப் படுவதில்லை என்று கூறப்பட்டு வரும் நிலையில், நோயாளிகளின் நிலை குறித்து கேள்வி எழுப்பப்பட்டு வருகின்றது. இந்த நிலையில், இந்த சம்பவம் நடந்துள்ளது.

அதேபோல, 25 வயதான ரமேஷ் அஹிவார் ஜனவரி 16 அன்று மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வென்டிலேட்டர் உதவியில் வைக்கப்பட்டார். மறுநாள் இரவு அவர் இறந்துபோனார். ஜனவரி 15ஆம் தேதி யாருக்கும் தெரிவிக்காமல் ரமேஷ்  எங்கோ சென்றிருக்கிறார். 

மறுநாள் அவர் காயமடைந்த நிலையில் காணப்பட்டார். இந்த விவகாரம் மருத்துவ சட்டத்திற்கு உட்பட்டது என்பதால், மருத்துவமனை நிர்வாகம் இரண்டு முறை போலீசாரை அழைத்து புகார் அளித்தது.

ஜனவரி 19ம் தேதி, டீப் ஃப்ரீசரில் இருந்து சடலத்தை வெளியே எடுத்தபோது, ​​ஒரு கண் காணவில்லை. இதுகுறித்து மாவட்ட மருத்துவமனையின் குடியுரிமை மருத்துவ அதிகாரி டாக்டர் அபிஷேக் தாக்குர் கூறியதாவது, "பிணவறையில் ஃப்ரீசரில்தான் இறந்தவரின் உடல் வைக்கப்பட்டது.

முதற்கட்ட விசாரணையில், இறந்தவரின் கண்களை எலிகள் கடித்திருக்கலாம் என கூறப்பட்டது. பிணவறையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். விரிவான விசாரணைக்குப் பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

மருத்துவமனையின் தலைமை மருத்துவ சுகாதார அதிகாரி (CMHO), டாக்டர் மம்தா திமோரி, சிவில் சர்ஜன் டாக்டர் ஜோதி சவுகான் உட்பட நான்கு மருத்துவ அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மேலும் 48 மணி நேரத்திற்குள் பதில் அளிக்குமாறு கோரியுள்ளார்.

சமீபத்தில் கூட, மத்தியப் பிரதேசத்தின் ராஜ்கர் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) மாடு ஒன்று இருப்பது போன்ற வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது.

தலைப்பு செய்திகள்

வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டில் ரயிலில் பயணிக்க முடியுமா? இந்திய ரயில்வேயின் முக்கிய விதிகள் என்ன?
வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டில் ரயிலில் பயணிக்க முடியுமா? ரயில்வேயின் முக்கிய விதிகள் என்ன?
திடீரென மாமல்லபுரம் வரும் அமித் ஷா.. நேரில் சந்திக்கும் தென் மாநில முதல்வர்கள்! நடப்பது என்ன?
திடீரென மாமல்லபுரம் வரும் அமித் ஷா.. நேரில் சந்திக்கும் தென் மாநில முதல்வர்கள்! நடப்பது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
கேப் டிரைவருக்கு 100 ஆண்டு ஓட்ட தடை.. ரேபிடோவின் அநியாயம்.. கொதிக்கும் நெட்டிசன்கள் - நடந்தது என்ன?
கேப் டிரைவருக்கு 100 ஆண்டு ஓட்ட தடை.. ரேபிடோவின் அநியாயம்.. கொதிக்கும் நெட்டிசன்கள் - நடந்தது என்ன?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Job Fair Chennai : ஒரே நாளில் 30,000 பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு ஜாக்பாட் - தேதியை அறிவித்த ஆட்சியர்- எங்கே தெரியுமா.?
ஒரே நாளில் 30,000 பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு ஜாக்பாட் - தேதியை அறிவித்த ஆட்சியர்- எங்கே தெரியுமா.?
KTM 390 Duke Vs RE Guerrilla 450 Apex: ரக்கட் பாய்களுக்கு நடுவுல போட்டி.! கேடிஎம் 390 டியூக்-ஆ.? ராயல் என்ஃபீல்ட் கெரில்லா 450 அபெக்ஸ்-ஆ.? எது சிறந்தது.?
ரக்கட் பாய்களுக்கு நடுவுல போட்டி.! கேடிஎம் 390 டியூக்-ஆ.? ராயல் என்ஃபீல்ட் கெரில்லா 450 அபெக்ஸ்-ஆ.? எது சிறந்தது.?
Embed widget