மேலும் அறிய

இறந்து போன உடல்களிலிருந்து மாயமான கண்கள்...பிணவறையில் நீடிக்கும் மர்மம்...நடந்தது என்ன?

சாகர் மாவட்டத்தின் மருத்துவமனை ஒன்றின் பிணவறையில் வைக்கப்பட்ட இரண்டு உடல்களில் இருந்த கண்கள் காணாமல் போயுள்ளது.

அரசு மருத்துவமனைகளில் அதிகாரிகள் அலட்சியமாக நடந்து கொள்வது தொடர் கதையாகி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, மத்திய பிரதேசத்தில் நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சாகர் மாவட்டத்தின் மருத்துவமனை ஒன்றில் பிணவறையில் வைக்கப்பட்ட இரண்டு உடல்களில் இருந்த கண்கள் காணாமல் போயுள்ளது.

15 நாள்களுக்கு முன்பு இந்த சம்பவம் நடந்துள்ளது. சாகர் மாவட்ட மருத்துவமனையில் இறந்த உடல்களின் கண்களை எலிகள் கடித்து தின்றதாக கூறப்படுகிறது. முதல் சம்பவம் ஜனவரி 4ஆம் தேதியும் இரண்டாவது சம்பவம் ஜனவரி 19ஆம் தேதியும் நடந்துள்ளது.

கடந்த ஜனவரி 4ஆம் தேதி, 32 வயதான மோதிலால் கவுண்ட் அமெட் கிராமத்தில் உள்ள ஒரு பண்ணையில் மயங்கி விழுந்ததால் அவரது குடும்பத்தினர் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மருத்துவமனையின் OPD சிகிச்சையில் அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. காலை, பிரேத பரிசோதனைக்காக டாக்டர் வந்து பார்த்தபோது, ​​சடலத்தின் ஒரு கண் காணவில்லை. ​​ஃப்ரீசர் பழுதுபோனதால் பிணவறையில் உள்ள திறந்தவெளி மேஜையில் சடலம் கிடந்துள்ளது.

மருத்துவமனைகள் குறித்த சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான விஷயங்கள் அடிக்கடி கேள்விக்குள்ளாகி வருகின்றன. மருத்துவமனையில் மின்வெட்டு போன்ற பிரச்சனைகளால் இந்திய அரசு மருத்துவமனைகள் பல முறை விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது.

அதே போல பாதுகாப்பு விதிகளும் சரியாக கடைப்பிடிக்கப் படுவதில்லை என்று கூறப்பட்டு வரும் நிலையில், நோயாளிகளின் நிலை குறித்து கேள்வி எழுப்பப்பட்டு வருகின்றது. இந்த நிலையில், இந்த சம்பவம் நடந்துள்ளது.

அதேபோல, 25 வயதான ரமேஷ் அஹிவார் ஜனவரி 16 அன்று மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வென்டிலேட்டர் உதவியில் வைக்கப்பட்டார். மறுநாள் இரவு அவர் இறந்துபோனார். ஜனவரி 15ஆம் தேதி யாருக்கும் தெரிவிக்காமல் ரமேஷ்  எங்கோ சென்றிருக்கிறார். 

மறுநாள் அவர் காயமடைந்த நிலையில் காணப்பட்டார். இந்த விவகாரம் மருத்துவ சட்டத்திற்கு உட்பட்டது என்பதால், மருத்துவமனை நிர்வாகம் இரண்டு முறை போலீசாரை அழைத்து புகார் அளித்தது.

ஜனவரி 19ம் தேதி, டீப் ஃப்ரீசரில் இருந்து சடலத்தை வெளியே எடுத்தபோது, ​​ஒரு கண் காணவில்லை. இதுகுறித்து மாவட்ட மருத்துவமனையின் குடியுரிமை மருத்துவ அதிகாரி டாக்டர் அபிஷேக் தாக்குர் கூறியதாவது, "பிணவறையில் ஃப்ரீசரில்தான் இறந்தவரின் உடல் வைக்கப்பட்டது.

முதற்கட்ட விசாரணையில், இறந்தவரின் கண்களை எலிகள் கடித்திருக்கலாம் என கூறப்பட்டது. பிணவறையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். விரிவான விசாரணைக்குப் பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

மருத்துவமனையின் தலைமை மருத்துவ சுகாதார அதிகாரி (CMHO), டாக்டர் மம்தா திமோரி, சிவில் சர்ஜன் டாக்டர் ஜோதி சவுகான் உட்பட நான்கு மருத்துவ அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மேலும் 48 மணி நேரத்திற்குள் பதில் அளிக்குமாறு கோரியுள்ளார்.

சமீபத்தில் கூட, மத்தியப் பிரதேசத்தின் ராஜ்கர் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) மாடு ஒன்று இருப்பது போன்ற வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது.

தலைப்பு செய்திகள்

Independence day 2026: 80-வது சுதந்திர தினத்தில் மாஸ் காட்டப்போகும் Gen-Z ... முதல்முறையாக எதிரொலிக்கும் 'வந்தே மாதரம்'!
80-வது சுதந்திர தினத்தில் மாஸ் காட்டப்போகும் Gen-Z ... முதல்முறையாக எதிரொலிக்கும் 'வந்தே மாதரம்'!
Khudiram Bose: பகத் சிங் தெரியும்; குதிராம் போஸ் தெரியுமா? 18 வயதிலேயே நாட்டுக்காக தூக்கு மேடை ஏறிய தியாகி!
Khudiram Bose: பகத் சிங் தெரியும்; குதிராம் போஸ் தெரியுமா? 18 வயதிலேயே நாட்டுக்காக தூக்கு மேடை ஏறிய தியாகி!
FCRA Bill: உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
Students Protest : தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு
தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
Embed widget