மேலும் அறிய

கார்ட்டூன் பார்க்கும் குழந்தைகள் வீட்டுல இருக்காங்களா மக்களே? உங்களுக்கு ஒரு சுவாரஸ்ய சம்பவம் சொல்லப்போறோம்

விபத்தில் இருந்து எப்படி தப்பித்தேன் என்பது குறித்து அந்த சிறுவன் தகவல் பகிர்ந்து கொண்டுள்ளார். அந்த தகவல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

உத்தர பிரதேசம் மாநிலம் லக்னோவில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில், மூன்று பெண்கள் உயிரிழந்தனர். விபத்து நடந்து மீட்பு பணிகள் நடைபெற்று கிட்டத்தட்ட 48 மணி நேரத்திற்கு பிறகு மூன்றாவது சடலம் மீட்கப்பட்டது.

லக்னோ ஹஸ்ரத்கஞ்சில் வசீர் ஹசன் சாலையில் அமைந்துள்ள அலயா அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம்தான் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. குடியிருப்பின் இரண்டாவது மாடியில் வசித்து வந்த ஷபானாவின் சடலம்தான் மூன்றாவதாக மீட்கப்பட்டது.

சமாஜ்வாதி கட்சியின் செய்தி தொடர்பாளர் அப்பாஸ் ஹைதரின் மனைவி உஸ்மா ஹைதர் (30) மற்றும் தாய் பேகம் ஹைதர் (72) ஆகியோரும் உயிரிழந்தனர். கடந்த செவ்வாய்க்கிழமை வட இந்தியாவில் நிலநடுக்கம் ஏற்பட்ட சில மணி நேரங்களில் இந்த கட்டிடம் இடிந்து விழுந்தது. முதலில் கட்டிட இடிபாடுகளில் 7 பேர் சிக்கியிருக்கலாம் என நம்பப்பட்டது.

பின்னர், புதன்கிழமை அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து 14 பேரை மாநில பேரிடர் மீட்புப் படை மீட்டது. கட்டிடம் இடிந்து விழுந்ததைத் தொடர்ந்து, விபத்து குறித்து உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திற்கு தெரிவிக்கப்பட்டது.

மாநில பேரிடர் மீட்பு படை, தேசிய பேரிடர் மீட்பு படை அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு செல்லுமாறு அவர் அறிவுறுத்தினார்.

மேலும் காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உரிய சிகிச்சை அளிக்குமாறு மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு ஆதித்யநாத் உத்தரவிட்டார். துணை முதலமைச்சர் பிரஜேஷ் பதக் செவ்வாய்க்கிழமை இரவு நேரில் சென்று பார்வையிட்டார்.

கட்டிட இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட 16 பேரில் ஆறு வயது சிறுவனும் ஒருவர். இவருக்கு எஸ்பிஎம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது, இவர் நன்றாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், விபத்தில் இருந்து எப்படி தப்பித்தேன் என்பது குறித்து அந்த சிறுவன் தகவல் பகிர்ந்து கொண்டுள்ளார். அந்த தகவல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதாவது, படுக்கையின் கீழ் மறைந்து கொண்டதாகவும் இதனால் உயிர் தப்பியதாகவும் அந்த சிறுவன் கூறியுள்ளார்.

இதில், சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், டோரேமான் மற்றும் நோபிதாவை பார்த்து எப்படி தப்பிக்க வேண்டும் என கற்று கொண்டதாக அவர் கூறியுள்ளார். இதற்கிடையே, கட்டிடத்தின் தரம் குறித்து தற்போது கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. 

இந்த விபத்து தொடர்பாக மூன்று சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டு, உத்தர பிரதேச காவல் துறையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. சந்தேக நபர்களின் பெயர்களை போலீசார் வெளியிட்டுள்ளனர். நவாசிஷ் ஷாஹித், முகமது தாரிக், ஃபஹத் யஸ்தானி ஆகியோர் சந்தேக நபர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் இரு சந்தேக நபர்களை தீவிரமாக தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர். இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 308, 323, 420, மற்றும் 120பி ஆகியவற்றின் கீழ் குற்றவியல் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
"கிராம சபை கூட்டங்களில் இதை செய்யுங்கள் " திருமாவின் புது கணக்கு இதான் !
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanchipuram Lady : ’’வீடு கட்ட விடமாட்றாங்க’’பெட்ரோலுடன் வந்த பெண்!Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
"கிராம சபை கூட்டங்களில் இதை செய்யுங்கள் " திருமாவின் புது கணக்கு இதான் !
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Embed widget