மேலும் அறிய

கார்ட்டூன் பார்க்கும் குழந்தைகள் வீட்டுல இருக்காங்களா மக்களே? உங்களுக்கு ஒரு சுவாரஸ்ய சம்பவம் சொல்லப்போறோம்

விபத்தில் இருந்து எப்படி தப்பித்தேன் என்பது குறித்து அந்த சிறுவன் தகவல் பகிர்ந்து கொண்டுள்ளார். அந்த தகவல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

உத்தர பிரதேசம் மாநிலம் லக்னோவில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில், மூன்று பெண்கள் உயிரிழந்தனர். விபத்து நடந்து மீட்பு பணிகள் நடைபெற்று கிட்டத்தட்ட 48 மணி நேரத்திற்கு பிறகு மூன்றாவது சடலம் மீட்கப்பட்டது.

லக்னோ ஹஸ்ரத்கஞ்சில் வசீர் ஹசன் சாலையில் அமைந்துள்ள அலயா அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம்தான் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. குடியிருப்பின் இரண்டாவது மாடியில் வசித்து வந்த ஷபானாவின் சடலம்தான் மூன்றாவதாக மீட்கப்பட்டது.

சமாஜ்வாதி கட்சியின் செய்தி தொடர்பாளர் அப்பாஸ் ஹைதரின் மனைவி உஸ்மா ஹைதர் (30) மற்றும் தாய் பேகம் ஹைதர் (72) ஆகியோரும் உயிரிழந்தனர். கடந்த செவ்வாய்க்கிழமை வட இந்தியாவில் நிலநடுக்கம் ஏற்பட்ட சில மணி நேரங்களில் இந்த கட்டிடம் இடிந்து விழுந்தது. முதலில் கட்டிட இடிபாடுகளில் 7 பேர் சிக்கியிருக்கலாம் என நம்பப்பட்டது.

பின்னர், புதன்கிழமை அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து 14 பேரை மாநில பேரிடர் மீட்புப் படை மீட்டது. கட்டிடம் இடிந்து விழுந்ததைத் தொடர்ந்து, விபத்து குறித்து உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திற்கு தெரிவிக்கப்பட்டது.

மாநில பேரிடர் மீட்பு படை, தேசிய பேரிடர் மீட்பு படை அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு செல்லுமாறு அவர் அறிவுறுத்தினார்.

மேலும் காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உரிய சிகிச்சை அளிக்குமாறு மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு ஆதித்யநாத் உத்தரவிட்டார். துணை முதலமைச்சர் பிரஜேஷ் பதக் செவ்வாய்க்கிழமை இரவு நேரில் சென்று பார்வையிட்டார்.

கட்டிட இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட 16 பேரில் ஆறு வயது சிறுவனும் ஒருவர். இவருக்கு எஸ்பிஎம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது, இவர் நன்றாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், விபத்தில் இருந்து எப்படி தப்பித்தேன் என்பது குறித்து அந்த சிறுவன் தகவல் பகிர்ந்து கொண்டுள்ளார். அந்த தகவல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதாவது, படுக்கையின் கீழ் மறைந்து கொண்டதாகவும் இதனால் உயிர் தப்பியதாகவும் அந்த சிறுவன் கூறியுள்ளார்.

இதில், சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், டோரேமான் மற்றும் நோபிதாவை பார்த்து எப்படி தப்பிக்க வேண்டும் என கற்று கொண்டதாக அவர் கூறியுள்ளார். இதற்கிடையே, கட்டிடத்தின் தரம் குறித்து தற்போது கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. 

இந்த விபத்து தொடர்பாக மூன்று சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டு, உத்தர பிரதேச காவல் துறையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. சந்தேக நபர்களின் பெயர்களை போலீசார் வெளியிட்டுள்ளனர். நவாசிஷ் ஷாஹித், முகமது தாரிக், ஃபஹத் யஸ்தானி ஆகியோர் சந்தேக நபர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் இரு சந்தேக நபர்களை தீவிரமாக தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர். இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 308, 323, 420, மற்றும் 120பி ஆகியவற்றின் கீழ் குற்றவியல் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. 

தலைப்பு செய்திகள்

ஓணம் பண்டிகை: சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!
ஓணம் பண்டிகை: சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: ஆவணி, ஓணம் தரிசனத்திற்கு பக்தர்கள் குவிந்தனர்!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: ஆவணி, ஓணம் தரிசனத்திற்கு பக்தர்கள் குவிந்தனர்!
ஆதார் கார்டு தொலைந்தாலும் கவலையில்லை! வாட்ஸ்அப்பில் நொடியில் டவுன்லோட் செய்யுங்கள்!
ஆதார் கார்டு தொலைந்தாலும் கவலையில்லை! வாட்ஸ்அப்பில் நொடியில் டவுன்லோட் செய்யுங்கள்!
BJP: டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Tesla Model Y Real World Range: டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
Embed widget