மேலும் அறிய

Lost Your Passport Abroad? வெளிநாட்டு பயணத்தின்போது பாஸ்போர்ட் தொலைந்துவிட்டதா? நீங்கள் உடனே செய்ய வேண்டியது இதுதான்..!

Lost Your Passport Abroad? வெளிநாட்டு பயணத்தின்போது பாஸ்போர்ட் தொலைந்துவிட்டால், செய்ய வேண்டியது என்ன என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.

Lost Your Passport Abroad? வெளிநாட்டு பயணத்தின்போது பாஸ்போர்ட் தொலைந்துவிட்டால், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.

வெளிநாட்டு பயணத்தில் பாஸ்போர்ட் தொலைந்துவிட்டதா?

வெளிநாட்டு பயணத்தின் போது பாஸ்போர்ட் மற்றும் விசா ஆகியவை மிக முக்கியமான ஆவணங்களாகும். பாஸ்போர்ட் என்பது வெளிநாட்டு அதிகாரிகளுக்காக இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உங்களின் அடையாளமாகும். விசா உங்கள் வருகையின் நோக்கம் மற்றும் கால அளவைக் குறிக்கிறது. ​​இந்த ஆவணங்கள் சட்டச் சிக்கல்கள் ஏதுமின்றி வெளிநாட்டு பயணங்கள் மேற்கொள்ள உத்தரவாதம் அளிக்கின்றன. உங்கள் கனவுப் பயணத்தில் இந்த அத்தியாவசிய ஆவணங்களை இழப்பதால், ஏற்படும் சூழலை சற்றே எண்ணிப்பாருங்கள். அவற்றை நீங்கள் தொலைத்துவிட்டால்,  என்ன செய்வது என்று எப்போதாவது நீங்கள் யோசித்திருக்கிறீர்களா?

கவனத்தில் கொள்ள வேண்டிய ஆலோசனை:

ஒரு சர்வதேச பயணத்தைத் திட்டமிடும் போது, ​​எதைப் பேக் செய்வது, எப்படிப் பயணம் செய்வது, பார்க்க வேண்டிய இடங்கள் மற்றும் தங்குமிட முன்பதிவுகள் போன்ற ஒவ்வொரு விவரங்களையும்  உன்னிப்பாகத் திட்டமிடுகிறோம். எந்தவொரு விபத்துக்கும் முன்கூட்டியே தயாராக மருத்துவக் காப்பீடு மற்றும் பிற நடவடிக்கைகளை எடுக்கிறோம். ஆனால் பாஸ்போர்ட் தொலைந்தால் என்ன செய்வது என்று யோசிக்க தவறிவிடுகிறோம். பாஸ்போர்ட் இல்லாமல் எப்படி வீடு திரும்புவது என்று ஒருபோதும் யோசிக்காதவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், வருத்தப்பட வேண்டாம். இந்த உலகளாவிய விவகாரத்தில், அத்தகைய சூழ்நிலையில் எவ்வாறு நடந்துகொள்வது மற்றும் என்ன செய்ய வேண்டும் என்பதை நாங்கள் விவரிக்கிறோம்.

பாஸ்போர்ட்டை பெறுவதற்கான படிப்படியான வழிகாட்டி:


உங்கள் தொலைந்த பாஸ்போர்ட்டை எவ்வாறு மீட்டெடுப்பது என்பது படிப்படியாக விவரிக்கப்பட்டுள்ளது.

1. உடனடி நடவடிக்கை: FIR பதிவு செய்யுங்கள்:

உங்கள் பாஸ்போர்ட் மற்றும் விசா காணாமல் போனதைக் கண்டறிந்தவுடன், அருகிலுள்ள காவல் நிலையத்திற்குப் புகாரளிப்பது முதன்மையான செயலாகும். உங்கள் அடையாளங்களை ஆதரிக்க, காகித ரீதியாகவோ அல்லது டிஜிட்டல் மூலமாகவோ சில வகையான ஆவணங்களை எடுத்துச் செல்லுங்கள். புகாரைப் பதிவுசெய்த பிறகு, புதிய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும்போது அல்லது பயணக் காப்பீட்டைக் கோரும்போது, ​​உங்களுக்கு அடிக்கடி தேவைப்படும் என்பதால், எஃப்ஐஆர் நகலை வைத்திருக்கவும். இந்திய தூதரகத்தை அணுகுவது போன்ற மேலதிக நடைமுறைகளுக்கு,  உதவுமாறு காவல்துறை அதிகாரிகளிடம் நீங்கள் கேட்கலாம்.

2.  தூதரகத்தை அணுகவும்

எஃப்ஐஆர் பதிவு செய்த பிறகு, அடுத்த கட்டமாக அருகில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ள வேண்டும். இந்த தூதரகங்கள் வெளிநாட்டில் பிரச்னையில் சிக்கும் குடிமக்களுக்கு உதவவும், தாயகம் திரும்புவதற்கான திறவுகோலாகவும் உள்ளன. அவர்கள் முதலில் உங்கள் அடையாளத்தையும், சூழலையும் சரிபார்ப்பார்கள். நீங்கள் தேர்வு செய்ய இரண்டு விருப்பங்கள் இருக்கும்- புதிய பாஸ்போர்ட் அல்லது அவசர சான்றிதழுக்கு விண்ணப்பிக்கவலாம். அதற்கான விண்ணப்பப் படிவத்தை நீங்கள் பூர்த்தி செய்ய வேண்டும். இரண்டு நடைமுறைகளுக்கும் தூதரகத்திற்கு பல ஆவணங்கள் தேவைப்படும்:

  • பாஸ்போர்ட் விண்ணப்ப படிவம்
  • தொலைந்த பாஸ்போர்ட்டின் முன் மற்றும் பின் பக்கங்களின் நகல்
  • FIR இன் நகல்
  • 3-4 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்
  • விசாவின் நகல்
  • விமான டிக்கெட்டுகளின் நகல்

புதிய பாஸ்போர்ட்டைப் பெறுவதற்கான செயல்முறை ஒரு வாரம் வரை ஆகலாம், ஏனெனில் உங்கள் ஆவணங்கள் இந்தியாவுக்கு அனுப்பப்படும். பின்னர் அவர்கள் உங்கள் புதிய பாஸ்போர்ட்டை தேவையான தூதரகத்திற்கு வழங்குவார்கள். உங்களால் அந்த நாட்டில் நீண்ட காலம் தங்க முடியாவிட்டால் அல்லது அவசரமாகத் திரும்பிச் செல்ல வேண்டியிருந்தால், சூழ்நிலையைப் பொறுத்து ஒன்று அல்லது இரண்டு நாட்களில் நீங்கள் பெறக்கூடிய அவசரச் சான்றிதழைத் தேர்வுசெய்யலாம். மேலும் சட்டச் சிக்கல்கள் அல்லது விபத்துகளைத் தவிர்க்க நீங்கள் விரைவாகச் செயல்பட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். புதிய பாஸ்போர்ட்டில் புதிய பாஸ்போர்ட் எண் மற்றும் புதிய  காலாவதியாகும் காலம் இருக்கும்.  நீங்கள் 18 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராக இருந்தால், சாதாரண பாஸ்போர்ட் மறு வெளியீட்டிற்கான கட்டணம் ரூ. 30 பக்கங்களுக்கு 3000 மற்றும் 60 பக்கங்களுக்கு ரூ.3500. அவசரச் சான்றிதழுக்கு தூதரகம் உங்களிடம் ரூ. 5000 கட்டணம் வசூலிக்கும். 

3. புதிய விசா:

உங்கள் பாஸ்போர்ட்டுக்குப் பிறகு, உங்கள் விசாவை மீட்டெடுப்பதற்கான நேரம் இது. இதற்காக, அது வழங்கப்பட்ட நாட்டின் தூதரகத்திற்குச் செல்ல வேண்டும். உங்கள் தொலைந்த விசாவின் நகல் மற்றும் புதிய பாஸ்போர்ட்/அவசர சான்றிதழ் உட்பட தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் சமர்பிக்க வேண்டும். உங்கள் தொலைந்து போன பாஸ்போர்ட்டின் நகல் உங்களிடம் இல்லையென்றால், பாஸ்போர்ட் எண், வழங்கப்பட்ட தேதி - காலாவதியாகும் தேதி மற்றும் அது வழங்கப்பட்ட இடம் ஆகியவற்றை வழங்க வேண்டும். எதிர்கால குறிப்புக்காக இந்த தகவலை எங்காவது சேமிக்கவும். விசாவை மீண்டும் வழங்குவதற்கான கட்டணம் நாடு வாரியாக மாறுபடும். 

ஆவணங்களை கைவசம் வைத்திருங்கள்:

இப்போது உங்களுக்கு தேவையான மற்றும் அவசியமான ஆவணங்கள் தெரியும். எனவே,  இந்த அத்தியாவசியங்களின் கூடுதல் நகல்களை பேக் செய்ய மறக்காதீர்கள். மேலும், அவசரகாலத்தில் எளிதாக அணுக இந்த அனைத்து ஆவணங்களுடன் உங்கள் ஃபோன் அல்லது லேப்டாப்பில் PDF அல்லது ஃபோல்டரை உருவாக்குகள். உங்கள் எல்லா பொருட்களையும் இழந்த பிறகு, திட்டமிடப்பட்ட நேரத்தில் உங்கள் விமானங்களை நீங்கள் இழக்க நேரிடலாம். அதை மாற்றியமைக்க விமான நிறுவனத்தைத் தொடர்புகொள்ளலாம். உங்களது திட்டங்கள் நிச்சயமற்றதாக இருந்தால், உங்கள் டிக்கெட்டை ரத்து செய்து விமானக் காப்பீட்டை கோரலாம். தாயகம் திரும்பியதும் உங்கள் பயணக் காப்பீட்டையும் பெறலாம். 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

இன்றைய டாப் 10 நியூஸ்: முக்கிய நிகழ்வுகள்... நீங்க கண்டிப்பா தெரிஞ்சுக்க வேண்டிய செய்திகள்!
இன்றைய டாப் 10 நியூஸ்: முக்கிய நிகழ்வுகள்... நீங்க கண்டிப்பா தெரிஞ்சுக்க வேண்டிய செய்திகள்!
PF பணம் எடுப்பதில் புதிய மாற்றம்: 12 மாத காத்திருப்பு! அவசர தேவைக்கு என்ன வழி?
PF பணம் எடுப்பதில் புதிய மாற்றம்: 12 மாத காத்திருப்பு! அவசர தேவைக்கு என்ன வழி?
ஆகஸ்ட் 15க்குள் கேஸ் சிலிண்டர் KYC கட்டாயம்! இல்லையெனில் மானியம் ரத்து!விபரம் இதோ.
ஆகஸ்ட் 15க்குள் கேஸ் சிலிண்டர் KYC கட்டாயம்! இல்லையெனில் மானியம் ரத்து!விபரம் இதோ.
டெக் பிரியர்களுக்கு செம்ம செய்தி: அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் OnePlus Pad 4!
செம்ம செய்தி: அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் OnePlus Pad 4!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
ஏலகிரியில் சினிமா பாணி அக்கிரமம்! மலைவாழ் மக்களைக் கட்டையால் அடித்து கொலை மிரட்டல்... அலறும் மக்கள்!
ஏலகிரியில் சினிமா பாணி அக்கிரமம்! மலைவாழ் மக்களைக் கட்டையால் அடித்து கொலை மிரட்டல்... அலறும் மக்கள்!
விவசாயிகளுக்கு தமிழக அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு 'ஆப்' இருந்தா போதும்... லாபம் அள்ளலாம்!
விவசாயிகளுக்கு அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு ஆப் இருந்தா போதும்! லாபம் அள்ளலாம்!
Embed widget