மேலும் அறிய

Lok Sabha Speaker Election: பிடிகொடுக்காத பாஜக..! இன்று மக்களவை சபாநாயகர் தேர்தல், ஓம் பிர்லா Vs கொடிக்குன்னில் சுரேஷ்

Lok Sabha Speaker Election: நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் பதவிக்கான தேர்தல் இன்று நடைபெற உள்ளது.

Lok Sabha Speaker Election: மக்களவை சபாநாயகர் பதவிக்கான தேர்தலில், பாஜக கூட்டணி சார்பில் ஓம் பிர்லாவும், எதிர்க்கட்சிகளின் சார்பில் கொடிக்குன்னில் சுரேஷும் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளனர்.

மக்களவை சபாநாயகர் தேர்தல்:

மக்களவை சபாநாயகர் பதவிக்கான அரிய தேர்தலை நாடாளுமன்றம் இன்று நடத்தவுள்ளது. ஒருமனதாக சபாநாயகரை தேர்வு செய்வது தொடர்பாக அரசு மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதன் காரணமாக 17வது லோக்சபாவில் சபாநாயகராக இருந்த ஓம் பிர்லாவை, பாஜக கூட்டணி மீண்டும் வேட்பாளராக களமிறக்கியுள்ளது. எதிக்கட்சிகள் அடங்கிய I.N.D.I.A. கூட்டணி  8வது முறையாக எம்.பி., ஆக தேர்வு செய்யப்பட்டுள்ள கொடிக்குன்னில் சுரேஷை வேட்பாளராக நிறுத்திள்ளன. அதனை தொடர்ந்து சுதந்திர வரலாற்றில் மூன்றாவது முறையாக, மக்களவை சபாநாயகர் பதவிக்கான தேர்தல் இன்று நடைபெற உள்ளது.

பிடிகொடுக்காத பாஜக..!

மக்களவை சபாநாயகரை பொறுத்தவரை, பெரும்பாலான சூழல்களில் ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சிகளும் இணைந்து ஒருமனதாகவே தேர்வு செய்து உள்ளன. அதே மரபை இந்த முறையும் தொடர மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு விரும்பியது. இதற்காக எதிர்க்கட்சிகளின் ஆதரவை பெறுவதற்கான நடவடிக்கைகளை, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மேற்கொண்டார். அதன்படி,  இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டார். அப்போது துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு வழங்க வேண்டும் என காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நிபந்தனை விதித்தன. ஆனால் துணை சபாநாயகர் பதவியில் மத்திய அரசு பிடிகொடுக்கவில்லை. இதன் காரணமாகவே எதிர்க்கட்சிகளும் வேட்பாளரை களமிறக்கியுள்ளன.

வெற்றி யாருக்கு?

வேட்புமனுதாக்கல் நிறைவடைந்ததை தொடர்ந்து இன்று மக்களவை சபாநாயகர் பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ளது. 543 உறுப்பினர் மக்களவையில் ஆளும் பாஜக கூட்டணிக்கு 293 உறுப்பினர்கள் உள்ளதால்,  அவர்களது வேட்பாளர் ஓம் பிர்லா வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் எதிர்ப்பை பதிவு செய்யும் நோக்கில் எதிக்கட்சிகள் வேட்பாளரை களமிறக்கியுள்ளன.

யார் இந்த ஓம் பிர்லா? கொடிக்குன்னில் சுரேஷ்?

ஓம் பிர்லா வெற்றி பெற்றால், கடந்த 25 ஆண்டுகளில் தொடர்ந்து 2 முறை சபாநாயகராக தேர்வு செய்யப்பட்ட பெருமை அவரை சேரும். இவர் ராஜஸ்தானின் கோட்டா தொகுதியில் இருந்து 3-வது முறை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டவர் ஆவார். இவருக்கு ஆதரவாக  10 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

மறுபுறம் கேரளாவை சேர்ந்த மூத்த காங்கிரஸ் எம்.பி. கொடிக்குன்னில் சுரேஷிற்கு (வயது 66) ஆதரவாக 3 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவர் 8வது முறையாக மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தலித் பிரிவை சேர்ந்த இவர் கேரளாவின் மாவேலிக்கரை தனித்தொகுதியில்  இருந்து தேர்ந்து எடுக்கப்பட்டவர். திருவனந்தபுரம் கொடிக்குன்னில் பகுதியில் 1962-ம் ஆண்டு பிறந்த சுரேஷ்,  கடந்த 1989-ம் ஆண்டு முதல் நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார்.

மக்களவை சபாநாயகர் தேர்தல்:

மக்களவை சபாநயகர் பதவிக்கு சுதந்திரத்திற்கு முன் பலமுறை தேர்தல் நடந்துள்ளது. ஆனால், சுதந்திர இந்தியாவில் 1952 மற்றும் 1976 என, இரண்டு முறை மட்டுமே தேர்தல் நடைபெற்றுள்ளது. இந்நிலையில், சுமார் 48 ஆண்டுகளுக்குப் பிறகு மக்களவை சபாநாயகர் பதவிக்கு இன்று தேர்தல் நடைபெற உள்ளது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TNPSC Group 1: குரூப் 1 தேர்வர்களே.. முக்கிய அப்டேட்டை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி- உடனே பெறுவது எப்படி?
குரூப் 1 தேர்வர்களே.. முக்கிய அப்டேட்டை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி- உடனே பெறுவது எப்படி?
பழைய ஓய்வூதியத் திட்டம் கிடையாதா? மீண்டும் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு துரோகமா? அன்புமணி கேள்வி!
பழைய ஓய்வூதியத் திட்டம் கிடையாதா? மீண்டும் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு துரோகமா? அன்புமணி கேள்வி!
யார் இந்த பவாரியா கும்பல். ? அதிமுக MLA கொடூர கொலை வழக்கில் இன்று தீர்ப்பு .!!
யார் இந்த பவாரியா கும்பல். ? அதிமுக MLA கொடூர கொலை வழக்கில் இன்று தீர்ப்பு .!!
UK Citizenship: குடும்பங்களுக்கு ஆப்படித்த இங்கிலாந்து.. கடுமையாகும் குடியுரிமை விதிகள் - சிக்கலில் இந்தியர்கள்
UK Citizenship: குடும்பங்களுக்கு ஆப்படித்த இங்கிலாந்து.. கடுமையாகும் குடியுரிமை விதிகள் - சிக்கலில் இந்தியர்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Divya Bharathi Angry | ’’என்னையே தப்பா பேசுறியா வேடிக்கை பார்க்குறவன் ஹீரோவா’’பொளந்த திவ்யபாரதி
Kaliyammal TVK | தவெகவில் காளியம்மாள்? விஜய்யின் MASTERPLAN! ஆட்டத்தை ஆரம்பித்த தவெக
ஜோதிமணி ARREST! தரதரவென இழுத்த POLICE! போராட்டக் களத்தில் விஜயபாஸ்கர்
மாமுல் தராத ஆட்டோக்காரர் ! ஓட ஓட விரட்டிய கும்பல்.. பகீர் கிளப்பும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNPSC Group 1: குரூப் 1 தேர்வர்களே.. முக்கிய அப்டேட்டை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி- உடனே பெறுவது எப்படி?
குரூப் 1 தேர்வர்களே.. முக்கிய அப்டேட்டை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி- உடனே பெறுவது எப்படி?
பழைய ஓய்வூதியத் திட்டம் கிடையாதா? மீண்டும் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு துரோகமா? அன்புமணி கேள்வி!
பழைய ஓய்வூதியத் திட்டம் கிடையாதா? மீண்டும் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு துரோகமா? அன்புமணி கேள்வி!
யார் இந்த பவாரியா கும்பல். ? அதிமுக MLA கொடூர கொலை வழக்கில் இன்று தீர்ப்பு .!!
யார் இந்த பவாரியா கும்பல். ? அதிமுக MLA கொடூர கொலை வழக்கில் இன்று தீர்ப்பு .!!
UK Citizenship: குடும்பங்களுக்கு ஆப்படித்த இங்கிலாந்து.. கடுமையாகும் குடியுரிமை விதிகள் - சிக்கலில் இந்தியர்கள்
UK Citizenship: குடும்பங்களுக்கு ஆப்படித்த இங்கிலாந்து.. கடுமையாகும் குடியுரிமை விதிகள் - சிக்கலில் இந்தியர்கள்
Top 10 News Headlines: முதலமைச்சர் சூளுரை, காலநிலை மாநாட்டில் தீ விபத்து, இங்கி., திணறல்  - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: முதலமைச்சர் சூளுரை, காலநிலை மாநாட்டில் தீ விபத்து, இங்கி., திணறல் - 11 மணி வரை இன்று
TN Weather Update: சென்னையில் மழை, 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: சென்னையில் மழை, 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..தமிழக வானிலை அறிக்கை
Chief Justics Of India: இன்றே கடைசி, ஓய்வு பெறுகிறார் கவாய்..! நாட்டின் 53வது தலைமை நீதிபதி யார்? பின்புலம், பணி அனுபவம்
Chief Justics Of India: இன்றே கடைசி, ஓய்வு பெறுகிறார் கவாய்..! நாட்டின் 53வது தலைமை நீதிபதி யார்? பின்புலம், பணி அனுபவம்
Gambhir Gill: கடைசியில் கில்லுக்கே ஆப்படித்த கம்பீர்.. ரெஸ்ட் வேணும்னு நெனச்சா, நீ ஒதுங்கிடு - காட்டமான அட்வைஸ்
Gambhir Gill: கடைசியில் கில்லுக்கே ஆப்படித்த கம்பீர்.. ரெஸ்ட் வேணும்னு நெனச்சா, நீ ஒதுங்கிடு - காட்டமான அட்வைஸ்
Embed widget