மேலும் அறிய

Puneeth Rajkumar | தானமாக அளிக்கப்பட்ட கண்கள்.. மரணத்துக்கு முன்பு புனீத் ராஜ்குமார் பேசிய வாழ்க்கைத் தத்துவம்..

புனீத் ராஜ்குமார் 10 ஆண்டுகளுக்கு முன்பாகவே தனது கருவிழிகள் உட்பட உடலின் அனைத்து உறுப்புகளையும் தானமாக வழங்க உறுதியளித்தது குறிப்பிடத்தக்கது

கன்னட மக்களால் மிகவும் நேசிக்கப்பட்ட மறைந்த திரைப்பட நடிகர் புனீத் ராஜ்குமார் காலமானார். 10 ஆண்டுகளுக்கு முன்பாகவே தனது கருவிழிகள் உட்பட உடலின் அனைத்து உறுப்புகளையும் தானமாக வழங்க உறுதியளித்து இருந்தார். அதற்கேற்றவாறு, புனித் ராஜ்குமாரின் கண்கள் தானமாக அளிக்கப்பட்டுள்ளது. 

 கன்னட பவர்ஸ்டார் புனீத் ராஜ்குமார் உடல்நல குறைவு காரணமாக இன்று காலை பெங்களூருவில் உள்ள விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது . அவருக்கு வயது 46. 

 

புனீத் ராஜ்குமார்: வாழ்க்கை ஒருமுறை தான், எதிகாலம் நிச்சயமற்றது. உண்பது, உறங்குவது எல்லாம் விதியால் தீர்மானிக்கப்படுகிறது.

முன்னதாக, புனீத்தின் உடல் நிலை குறித்து விக்ரம் மருத்துவமனையின் மருத்துவர் ரங்கநாத் நாயக் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த தகவலின்படி, நடிகர் புனீத் குமார் நெஞ்சுவலி காரணமாக இன்று காலை 11.30 மணிக்கு அனுமதிக்கப்பட்டார். அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது. மருத்துவமனைக்குக் கொண்டுவரும்போதே அவரது நிலைமை மோசமாக இருந்ததார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று தெரிவித்திருந்தது

கருவிழிகள் தானம்: 

புனீத் ராஜ்குமார் கன்னட திரையுலகில் கொடிக்கட்டிப் பறந்த ராஜ்குமாரின் (அன்னாவரு) கடைசி புதல்வராவார். 1954-ம் ஆண்டு பெடரா கண்ணப்பா என்ற படத்தில் சினிமாவுக்கு அறிமுகமானவர் ராஜ்குமார். இந்தப் படம் தமிழில் வேடன் கண்ணப்பா என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்தப் படத்தில் கண்ணப்பன் வேடமேற்று நடித்த ராஜ்குமார் தனது ஒரு கண்ணை இறைவனுக்கும் கொடுத்துவிடுவது போல் காட்சியமைக்கப்பட்டிருக்கும். மேலும், தனது மறுகண்ணையும் தானமாக கொடுக்கத் தயாராகும் பொழுது, இறைவனே அவன் செயலைத் தடுத்து, "நில்லு கண்ணப்ப' என்று கூறி அருள்புரிவார்.     

இதன் காரணமாக, ராஜ்குமார் தனது மறைவக்குப் பிறகு தனது கருவிழிகளை தானமாக வழங்க முடிவு செய்து, அதன்படியே வழங்கினார். ராஜ்குமாரின் மறைவுக்குப் பிறகு, அவரின்  கோடிக்கணக்கான ரசிகர்களையும் உடல் உறுப்புகளை தானம் செய்ய ஊக்குவிக்க ராஜ்குமார் அறக்கட்டளையை அவரின் புதல்வர்கள் நிறுவினர். 

இந்நிலையில், கடந்த 2010-ஆம் ஆண்டு ராஜ்குமாரின் 83ம் பிறந்தநாள் விழாவில் , "Dr. Rajkumar-The Person Behind The Personality" என்று புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது . இதில், கலந்துகொண்டு பேசிய புனீத் ராஜ்குமார், "மறைவுக்குப் பிறகு கருவிழிகள் உட்பட ஒட்டுமொத்த உடல் உறுப்புகளையும் தானம் அளிக்க ராஜ்குமார் குடும்பத்தினர் உறுதி ஏற்கிறோம்" என்று தெரிவித்தார்.              

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

”வெளியேறும் தலைவர்கள்! பாஜக-அதிமுக கூட்டணி: மூழ்கும் கப்பல்!செல்வபெருந்தகை பரபரப்பு குற்றச்சாட்டு!
”வெளியேறும் தலைவர்கள்! பாஜக-அதிமுக கூட்டணி: மூழ்கும் கப்பல்!செல்வபெருந்தகை பரபரப்பு குற்றச்சாட்டு!
உலகம் முழுவதும் இன்று பெரியார் தேவைப்படுகிறார் - ஆக்ஸ்போர்டில் முதலமைச்சர் பேச்சு
உலகம் முழுவதும் இன்று பெரியார் தேவைப்படுகிறார் - ஆக்ஸ்போர்டில் முதலமைச்சர் பேச்சு
New Launched Scooters: சந்தைக்கு வரும் 3 புது ஸ்கூட்டர்கள்.. Suzuki முதல் BGauss வரை - விலையும், மைலேஜும் எப்படி?
New Launched Scooters: சந்தைக்கு வரும் 3 புது ஸ்கூட்டர்கள்.. Suzuki முதல் BGauss வரை - விலையும், மைலேஜும் எப்படி?
திருவள்ளூரில் நடந்த சோகம்: தந்தையை வெட்டிய மகன்,  தண்ணீர் வாளியில் விழுந்து குழந்தை மரணம்
திருவள்ளூரில் நடந்த சோகம்: தந்தையை வெட்டிய மகன், தண்ணீர் வாளியில் விழுந்து குழந்தை மரணம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

நயினார் மகனுக்கு பதவி! வெளுத்தெடுத்த அலிஷா அப்துல்லா! ”அண்ணாமலைக்காக வந்தேன்”
PMK Lawyer Attack Police : போலீஸ் கன்னத்தில் பளார்!எல்லைமீறிய பாமககாரர் பகீர் வீடியோ
Ungaludan Stalin | உங்களுடன் ஸ்டாலின் மனுக்கள் வைகை ஆற்றில் கிடந்த அவலம்! அதிர்ச்சியில் பொதுமக்கள்
MK Stalin Germany | “வாங்க ஸ்டாலின் சார்” கான்வாய் அனுப்பிய அமைச்சர் ஜெர்மனியில் கெத்துகாட்டிய CM
Inbanithi Red Giant | உதயநிதி பாணியில் மகன்! இன்பநிதி சினிமாவில் ENTRY! வெளியான முக்கிய அறிவிப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”வெளியேறும் தலைவர்கள்! பாஜக-அதிமுக கூட்டணி: மூழ்கும் கப்பல்!செல்வபெருந்தகை பரபரப்பு குற்றச்சாட்டு!
”வெளியேறும் தலைவர்கள்! பாஜக-அதிமுக கூட்டணி: மூழ்கும் கப்பல்!செல்வபெருந்தகை பரபரப்பு குற்றச்சாட்டு!
உலகம் முழுவதும் இன்று பெரியார் தேவைப்படுகிறார் - ஆக்ஸ்போர்டில் முதலமைச்சர் பேச்சு
உலகம் முழுவதும் இன்று பெரியார் தேவைப்படுகிறார் - ஆக்ஸ்போர்டில் முதலமைச்சர் பேச்சு
New Launched Scooters: சந்தைக்கு வரும் 3 புது ஸ்கூட்டர்கள்.. Suzuki முதல் BGauss வரை - விலையும், மைலேஜும் எப்படி?
New Launched Scooters: சந்தைக்கு வரும் 3 புது ஸ்கூட்டர்கள்.. Suzuki முதல் BGauss வரை - விலையும், மைலேஜும் எப்படி?
திருவள்ளூரில் நடந்த சோகம்: தந்தையை வெட்டிய மகன்,  தண்ணீர் வாளியில் விழுந்து குழந்தை மரணம்
திருவள்ளூரில் நடந்த சோகம்: தந்தையை வெட்டிய மகன், தண்ணீர் வாளியில் விழுந்து குழந்தை மரணம்
தமிழக கடல் உணவு ஏற்றுமதிக்கு பேரிடி! தூத்துக்குடி துறைமுகத்தில் பெரும் இழப்பு?
தமிழக கடல் உணவு ஏற்றுமதிக்கு பேரிடி! தூத்துக்குடி துறைமுகத்தில் பெரும் இழப்பு?
மிஸ் பண்ணிடாதீங்க; சிவில் சர்வீஸ் பயிற்சியில் சேர்ந்து படிக்கலாம்- அரசே அழைப்பு!
மிஸ் பண்ணிடாதீங்க; சிவில் சர்வீஸ் பயிற்சியில் சேர்ந்து படிக்கலாம்- அரசே அழைப்பு!
Sengottaiyan Press Meet : ’EPSக்கு 10 நாட்கள் கெடு விதித்த செங்கோட்டையன்’ இதுதான் காரணம்..!
’EPSக்கு 10 நாட்கள் கெடு விதித்த செங்கோட்டையன்’ இதுதான் காரணம்..!
ராமதாஸ் vs அன்புமணி! மகளிர் அணி நிர்வாகிகள் மத்தியில் பரபரப்பு! தைலாபுரத்தில் நடந்த முக்கிய ஆலோசனை!
ராமதாஸ் vs அன்புமணி! மகளிர் அணி நிர்வாகிகள் மத்தியில் பரபரப்பு! தைலாபுரத்தில் நடந்த முக்கிய ஆலோசனை!
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.