மேலும் அறிய

Kozhikode Plane Crash | கோழிக்கோடு விமான விபத்திற்கு காரணம் இதுவா? அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியீடு..

கேரளாவில் கடந்தாண்டு நடைபெற்ற கோழிக்கோடு விமான விபத்திற்கான காரணத்தை விமான விபத்து புலனாய்வு அமைப்பு வெளியிட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு விமான நிலையத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 20-ஆம் தேதி துபாயில் இருந்து வந்த விமானம் விபத்துக்குள்ளானதால் விமானிகள் உள்பட 21 பேர் பரிதாபமாக பலியாகினர். இந்த சம்பவம் அப்போது நாடு முழுவதும் கடும் வேதனையை ஏற்படுத்தியது. டேபிள் டாப் ரன்வேயைக் கொண்ட கோழிக்கோடு விமான நிலையத்தின் ஓடுதளம் மிகவும் குறுகலானது என்பதாலும், விமானத்தை தரையிறக்குவதற்கு முன்பு கோழிக்கோடு பகுதியில் பெய்த கனமழையால் ஓடுதளமும் மிகவும் ஈரமாக இருந்த காரணத்தாலும் இந்த விபத்து நடைபெற்றதாக அப்போது தகவல்கள் வெளியானது.

இந்த விமான விபத்து குறித்து விமான விபத்துக்கான புலனாய்வு அமைப்பு விசாரித்து வந்தது. கடந்த ஓராண்டாக நடைபெற்று வந்த விசாரணையின் அறிக்கையை அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது. 257 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது.


Kozhikode Plane Crash | கோழிக்கோடு விமான விபத்திற்கு காரணம் இதுவா? அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியீடு..

அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது, “விமானி விமானத்தை தரையிறக்கும்போது நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாததே இந்த விபத்திற்கு காரணம் ஆகும். விமானி விமானத்தை தரையிறக்கும்போது நிலைத்தன்மையற்ற அணுகுமுறைகளை தொடர்ந்து பின்பற்றியுள்ளார். விமானி  தரையிறக்க ஒதுக்கப்பட்ட பகுதியை தாண்டி ஓடுதளத்தின் பாதி தூரத்தில் தரையிறக்கியுள்ளார். விமானி தரையிறங்கும்போது விமானம் தரையிறங்கும் தூரம் எவ்வளவு தூரம் உள்ளது என்பது குறித்து விமானி யாருடனும் ஆலோசிக்கவில்லை. வழிகாட்டும் நெறிமுறைகளை மீறிய போதிலும் ஆட்டோபிரேக் செலக்‌ஷனை அவர் பயன்படுத்தவில்லை.


Kozhikode Plane Crash | கோழிக்கோடு விமான விபத்திற்கு காரணம் இதுவா? அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியீடு..

விமானத்தை தரையிறக்கும்போது மழை பெய்ததால் அங்கு தரையிறக்க போதுமான தூரம் உள்ளதா, எதிரே உள்ளவை நன்கு தெரிகிறதா என்பதையெல்லாம் விமானி யோசிக்கவில்லை. தரையிறங்கும் தூரத்தை கணிப்பதையே அவர் தவிர்த்துவிட்டார். விண்ட் ஷீல்டு வைபரும் சரியாக இயங்கவில்லை. மழை நன்றாக பெய்து கொண்டிருக்கும்போதே இடி, மின்னலுடன் கூடிய காற்று வீசியபோது விமானத்தை தரையிறக்குவது மிகவும் தவறு. டேபிள் டாப் ரன்வேயில் இதுபோன்ற ரிஸ்கை எடுக்கவே கூடாது.

கோழிக்கோட்டில் விமானம் தரையிறங்க தொடங்கியபோது வெறும் 27 விநாடிகள் மட்டுமே விண்ட் ஷீல்ட் வைப்பர் வேலை செய்தது. அதன் பின்னர் நின்றுவிட்டது. இந்த வைப்பரை சர்வீசுக்கு கொடுக்காததும், மோசமான வானிலை நிலவியதும் விபத்திற்கு ஒரு காரணம் ஆகும்.

விமானத்தில் உள்ள அனைத்து அமைப்புகளும் இயல்பாக செயல்பட்டது. இருப்பினும் விமான கண்காணிப்பு தொழில்நுட்பமானது விமானத்தை தரையிறக்குவதற்கு மேலும் ஒரு முயற்சி எடுக்க வேண்டும். இந்த விபத்து தொழில்நுட்ப கோளாறாலும் ஏற்பட்டிருக்கலாம் என்ற காரணத்தையும் புறக்கணித்து விட முடியாது.


Kozhikode Plane Crash | கோழிக்கோடு விமான விபத்திற்கு காரணம் இதுவா? அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியீடு..

விபத்துக்குள்ளான அந்த விமானத்தை அனுபவம் வாய்ந்த கேப்டன் தீபக் சாதே இயக்கினார். விமானப்படையில் பணியாற்றிய அவருக்கு விமானியாக 36 ஆண்டுகள் அனுபவம் உள்ளது. மேலும், அந்த விபத்தில் தீபக் சாத்தேவுடன் இணைந்து விமானத்தை இயக்கிய இணை விமானி அகிலேஷ் குமாரும் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விபத்து நடைபெற்ற ஓராண்டுக்கு பிறகு, விமான விபத்திற்கு விமானியின் கவனக்குறைவே காரணம் என்று அறிக்கை வெளியாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோழிக்கோடில் உள்ள டேபிள்டாப் ரன்வே ஆபத்தானது என்று ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

இந்திய ரயில்வே புதிய அறிவிப்பு!.. கடைசி நேர டிக்கெட் புக்கிங்கிற்கு அனுமதி!.விபரம் இதோ..
இந்திய ரயில்வே புதிய அறிவிப்பு!.. கடைசி நேர டிக்கெட் புக்கிங்கிற்கு அனுமதி!.விபரம் இதோ..
வணிக சிலிண்டர் விலை குறைந்தது... ஆனால் வீட்டு LPG விலையில் மாற்றமா? இதோ பதில்!!!
வணிக சிலிண்டர் விலை குறைந்தது... ஆனால் வீட்டு LPG விலையில் மாற்றமா? இதோ பதில்!!!
Domestic Violence: மனைவியின் மென்டல் டார்ச்சர்.. ஒரே வருடத்தில் 27 வயது இளைஞர் மரணம் - லாஸ்ட்ல ட்விஸ்ட்
மனைவியின் மென்டல் டார்ச்சர்.. ஒரே வருடத்தில் 27 வயது இளைஞர் மரணம் - லாஸ்ட்ல ட்விஸ்ட்
Commercial Cooking Gas Price: காலையிலேயே குஷி.! அதிரடியாக குறைந்தது சிலிண்டர் விலை- எவ்வளவு தெரியுமா.?
காலையிலேயே குஷி.! அதிரடியாக குறைந்தது சிலிண்டர் விலை- எவ்வளவு தெரியுமா.?

வீடியோ

DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
​
​வீரப்பன் மட்டும் உயிரோடு இருந்திருந்தா..! மேகதாது விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் அதிரடி பேச்சு!
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
அரசு பள்ளிகளில்
அரசு பள்ளிகளில் "மகிழ் முற்றம்"- மாணவர் பாராளுமன்றம்: எதிர்கால தலைவர்கள் உருவாகும் களம்!
"நான் இணைவது என்ன குதிரை பேரமா?" - காட்டமாக கேள்வி எழுப்பிய ஒரத்தநாடு மா.சேகர்
Embed widget